Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் புழுதிவிதைத்த மானாவாரி நெல்

உர மேலாண்மை

  • பொதுவான உர அளவு 50 : 25 : 25 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து ஒரு எக்டருக்கு.

  • ஊட்டமேற்றிய தொழுஉரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்து அடியுரமாக இடப்படவேண்டும்.

  • தழைச்சத்து 25 கிலோ சாம்பல்சத்து 12.5 கிலோ இருமுறை, பயிர்முளைத்த 20-25 நாட்களில் முதலிலும் மீண்டும் 40-45 ஆம் நாட்கள் மரு முறையும் இடப்படவேண்டும்.

  • மழை பெய்வது நல்ல முறையில் மண்ணின் ஈரம் தூர் கட்டும் பருவமிருந்தே அமையும் சந்தர்ப்பங்களில் தழைச்சத்தும், சாம்பல் சத்தும் மூன்றாவது முறையாக 60 லிருந்து 65 நாட்களுக்குள் அல்லது கதிர் வெளிவரும் பருவத்தில் இடுதல் அதிக மகசூல் தரவல்லது.

  • மூன்றாம் முறை உரம் அளிக்கப்படும் தருணத்
  • இரும்பு சத்து குறைபாடுள்ள மண்ணில் இரும்பு சல்பேட் எக்டருக்கு 50 கிராம் அடி உரமாக இடலாம் (அல்லது) எக்டருக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மானாவாரி நெல் நுண்ணூட்டக் கலவையை 12.5 கிலோவை  ஊட்டமேற்றிய தொழுவுரமாக 1:10 என்ற விகிதத்தில் தகுந்த ஈரப்பதத்தில் 30 நாட்களுக்கு நோய் பாதுகாப்பிற்காக அளிக்க வேண்டும்.

  • 0.5% துத்தநாக சல்பேட் மற்றும் 1% இரும்பு சல்பேட் இலைத் தெளிப்பாக குறுத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில் தெளிக்க வேண்டும்.

  • இலைவழி உரமான யூரியா 1 சதம் + டிஏபி 2 சதம் + பொட்டாஷ் 1 சதம் கரைசல் இருமுறை, பூங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று.
   
 
Fodder Cholam