வேளாண்மை :: தானியங்கள்
   

நஞ்சையில் புழுதிவிதைத்த இறவை நெல்

‘புழுதிவிதைத்த சேற்று நெல்’ என்பதும் உண்டு
இவ்வகையான பயிர் உற்பத்தி காவிரி ஆற்றுப்பாசனமான நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரபலமாகிவருகின்றது. ஆற்றின் நீர் வரத்து காலதாமதம் ஆகும் காலத்தில் புழுதி விதைத்து பின்னர் ஆற்றின் பாசனத்தில் சேற்று நெல்லாக மாற்றப்படுகின்றது. சேற்று நெல்லாக மாறுவது ஆற்றின் நீா் வரத்து் மற்றும் பருவமழையின் தீவிரத்தைப் பொறுத்து அமைகின்றது.

ஏற்றப்பகுதி

  • திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் காவிரியின் கடைமடப் பாசனப்பகுதிகள்

பருவங்கள்

  • சம்பா மற்றும் பின் சம்பா கோடைப் பருவங்கள்

நிலம்தயாரித்தல்

  • கோடையுழவும் அதன் பிந்திய உழவும் அவசியம்
  • எங்கெல்லாம் ‘மண் இருக்கம’ ஏற்பட வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் ஜிப்சம்1 டன் அடியில் இட்டு கடைசி உழவு செய்யப்டவேண்டும்

இரகங்கள்

  • ஆகஸ்ட் மாஙக்ளில் மத்திய கால இரகங்கள், செப்டம்பர் கடைசி எனில் குறுகிய கால இரகங்கள்
  • பாசன வசதியுள்ளதாலும், மழையின் அளவு அதிகம் உள்ளதாலும் உயர் விளைச்சல் தரவல்ல இரகஙகள் தெரிவு செய்யப்படுவது அவசியம்

விதைப்பு

  • விதையின் அளவு 75 கிலோ ஒரு எக்டருக்கு
  • விதைநேர்த்தி முறைப்படிச் செய்ய வேண்டும். விதை எனப்படுத்துதல் (1சதம் பொட்டாஷ் உரத்துடன்) மிகவும் முக்கியமான பயிர் நேர்த்தியாகும்
  •  3/4 அடி அகல, வரிசையில், விதைக்கும் கருவிகள் கொண்டு, விதைக்கப்படுவது சாலச் சிறந்தது. விதையின் ஆழம் ஒரு அங்குலமாவது இருத்தல் வேண்டும்
  • விதைப்பது பருவ மழைக்கு முந்தையதாக இருத்தல் மிகமிக அவசியம்

பின்செய் நேர்த்தி

  • 10 பாக் அசோஸ்பைரில்லம் (1000 கி,ஹெ) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கி,ஹெ) அல்லது அசோபாஸ் 20 பாக் (4000 கி,ஹெ) ஆகியவற்றுடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து வயலில் முதல் மழை வந்தவுடன் தெளிக்கவும்
  • பயிர் களைவதும், பாடு நிரப்பலும் விதை முளைத்த 14 முல் 21 நாட்களுக்குள் அமைதல் நன்று
  • மிகவும் வறட்சியான காலங்களில் 1000 பிபிஎம் என்ற அளவில் (ஓரு மி.லி.லிட்டர் தண்ணீரில்) சைகோசெல் பயிரில் தெளித்தல் வேண்டும்
  • வறட்சியான காலத்தில் நீரின் தேவையைக் குறைக்க 3 சதம் ‘கயோளின்’ இலையில்தெளித்தலும், ஒரு சத பொட்டாஷ் கரைசலைத் தெளித்தலும் இழைவழி நீர் ஆவியாவதைக் குறைத்து நல்ல பலனைத்தரவல்லது

உர மேலாண்மை

  • பொதுவான உர அளவு 752537.5 கிலோ குறுகிய கால இரகங்களுக்கு
  • 1002550 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து மத்திய கால இரகங்களுக்கு ஒரு எக்டருக்கு
  • ஊட்டமேற்றிய தொழு உரம் 750 கிலோ 25 கிலோ மணிச்சத்தான சூப்பர் பாஸ்பேட் கலந்தது அடியுரமாக இடப்படவேண்டும்
  • குறுகிய கால பயிராயின் தழைச்சத்து 25 கிலோ, சாம்பலசத்து 12.5 கிலோ மூன்றுமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களிலர், 40-45 ஆம் நாட்களிலும் மீண்டும் 60-65 ஆம் நாட்களிம் இடப்படவேண்டும்
  • மத்தியகால பயிராயின் தழைச்சத்து 25 கிலோ, சாம்பல்சத்து 12.5 கிலோ நான்குமுறை, பயிர் முளைத்த 20-25 நாட்களில், 40-45 ஆம் நாட்களிலும் 60-65 ஆம் நாட்களிலும் மீண்டும் 80-85 ஆம் நாட்களிலும் இடப்பட வேண்டும்
  • விதைத்தது முதலும், இடையேயும் நல்ல மழை பெய்து, பயிரின் வளர்ச்சி நன்கு அமைந்திருப்பின் இரண்டாம் தருணமான 40 முதல் 45 நாட்களுக்குள் இடப்படும் தழைச்சத்து 40 கிலோவாக அதிகரிக்கப்படலாம். (சாம்பல் சத்து 12.5 கிலோவாகவே இருக்கட்டும்). அதன் பின்னர் குறைந்தது 10 தினங்களுக்காவது தண்ணீர் தேங்கியிருத்தல் ஒரு கட்டாயத் தேவை எனலாம்
  • குறுகிய கால வறட்சியைப் போக்குவதற்கு பொதுவான விதை நேர்த்தியுடன் இலைவழி உரமான ஒரு சதம் பொட்டாஷ் ரூ சைக்கோசெல் 500 பிபிஎம்கலந்து பயிர் வளர்ச்சிப்பருவத்தில் தெளிக்கலாம்
  • எங்கெல்லாம் துத்தநாக குறைபாடு காணப்படுகின்றதோ அங்கெல்லாம் ஜிங்சல்பேட் 25 கிலோ இடப்படவேண்டும்
  • எங்கெல்லாம் இரும்புச்சத்து பற்றாக்குறை காணப்படுகின்றதோ அப்பகுதிகளுக்கெல்லாம் விதைக்கும் முன்பே50 கிலோ இரும்பு சல்பேட் அளித்தல் அவசியம்
  • உயிர் உரங்கள் இடப்படுவது மகசூலைப்பெருக்கவல்லது
  • இலைவழி உரமான ‘äரியா 1 சதம் ரூடிஏபி 2 சதம் ரூ பொட்டாஷ் 1 சதம்’ கரைசல் இருமுறை âங்குருத்து உருவான தருணத்திலும், 10 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்தல் நன்று

களை மேலாண்மை

  • முதல் கைக்களை பயிர் முளைத்த் 15-21 நாட்களுக்குள் செய்யப்படவேண்டும்
  • இரண்டாம் கைக்களை 30-45 நாட்களில் செய்ய ஏற்ற தருணம்
  • களைக்கொல்லி கொண்டும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். அதற்கு பயிர் முளைத்த 5 தினங்களுக்குள் ‘பென்டிமெத்தலின்’ 1.0 கிலோ அல்லது பிரிடிலாக்குளோர் ரூ சேஃப்னர் (சோபிட்) 0.45 கிலோ விதை முளைக்கப் போதுமான மழை பெய்த உடனேயே அளித்தும் களையைக் கட்டுப்படுத்தலாம். களைக்கொல்லி இடப்பட்ட தருணத்தில் எஞ்சிய களைகளைக் களைய கைக்களை 30-35 நாட்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மற்ற பின்செய் நேர்த்தி முறைகள்

  • பவானி ஆற்றுப்பாசனப்பகுதிகளில் இம்முறை பின்பற்றியிருப்பின் 2 அங்குலம் வரை நீர் பாய்ச்சி, பாய்ச்சிய நீர் மறைந்த 3 நாட்களுக்குப் பின் மீண்டும் நீர் கட்ட வேண்டும். விதைப்பு செப்டம்பருக்குப் பின் என்றால் ஆடுதுறை 38 இரகம் ஏற்றது.
  • முதல் மெலும் ஆற்றின் தண்ணீர் வந்த உடன்’ செய்யப்படவேண்டும்
  • களை எடுப்பது, பயிர் களைவது, பாடு நிரப்புதல் தழைச்சத்து அளித்தலுக்கு முன்பு அமைவது நல்லது

நீர் மேலாண்மை

  • நடவு வயலுக்கு பரிந்துரைக்கப்ட்டது போல்
  • இம்மாவட்டங்களில் பருவ மழை காரணமாக நீர் அதிகம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளதால் இரகம் அதற்கு ஏற்றவாறு தெரிவு செய்யப்படவேண்டும்

அறுவடை

  • நடவு முறையில் கூறப்பட்டுள்ளது போலவே
  • கதிர் அறுத்து அடித்து தூற்றப்பட்டு இயந்திரம் மூலம் அறுவடை செய்திட மிகவும் ஏற்றப்பகுதிகள்
 

தாவர ஊட்டச்சத்து
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
மகசூலை அதிகரிக்கும்
வழிமுறைகள்

 
வறட்சி
வெள்ளம்
களர்/உவர் தன்மை
வெப்பநிலை

 
 
விவசாயிகளின் கூட்டமைப்பு
வெளியீடுகள்
கேள்வி பதில்
கலைச்சொற்கள்
முக்கிய வலைதளங்கள்
புகைப்படங்கள்

 
 
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram