Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: தானியங்கள் :: நஞ்சையில் சேற்று நெல் :: நடவு வயல் பராமரிப்பு
புழுதி நாற்றங்கால்
  • ஆற்றில் தண்ணீர் வருவது பின்தங்கும் தருணத்தில் புழுதி நாற்றங்கால் வரப்பிரசாதமாக அமையலாம்

  • நாற்றங்காலின் பரப்பு, விதை அளவு மற்றும் விதை நேர்த்தி சேற்று நாற்றங்காலுக்குக் குறிப்பிடப்பட்டவை போன்றதே

  • நாற்றங்கால் நன்கு உழப்பட்டு 1 முதல் 1.5 மீ அகலமுள்ள பாத்திகளாக அமைத்தல் வேண்டும். பாத்தியினைச் சுற்றிலும் ஒரு அடி அகலமுள்ள வாய்க்கால் அமைப்பது நல்லது

  • களிப்பு அதிகமுள்ள மண் வகைகளில் மேட்டுபாத்திகள் அமைக்கலாம், மணற்பாங்கான பகுதிகளில் படுக்கைப் பாத்திகள் போதுமானது.

  • நேர்த்தி செய்யப்பட்ட உலர்ந்த விதைக் தூவப்பட்டு, நன்கு மக்கிய மாட்டு அல்லது தொழு உரத்தினால் விதைகள் மூடப்பட வேண்டும்

  • நீர் நிர்வாகம் மண்நனையும் அளவு நீர் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டும்

  • நான்கு இலைப் பருவம் நடவிற்கு ஏற்றது.

 
   
Fodder Cholam