- மண் பரிசோதனை மூலம் தேவையான உரங்களைக் கணக்கிட வேண்டும்.
- இறவை நெற்பயிருக்கான குறிப்பிட்ட வயலுக்கேற்ற உரமிடும் முறை மூலம் (LCC) மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடுவதை நிர்ணயிக்கவேண்டும் (றிநனேஒ-ஐ)
- மண் பரிசோதனை மூலம் உரங்கள் அளித்திட சந்தர்ப்பம் கிட்டாவிட்டால் கீழ்க்கண்ட பொதுவான பரிந்துரையைப் பின்பற்றலாம்.
பொதுவான உர பரிந்துறை - ஒரு எக்ருக்கு (கிலோ என்ற அளவில்)
சத்துக்கள் |
தழை |
மணி |
சாம்பல் |
|
குறுகிய கால ரகஙகள் (வறட்சிப்பருவம்)
அ.காவேரிப்பகுதி,கோவைப்பகுதி
ஆ.மற்ற பகுதிகள் |
150
120 |
50
40 |
50
40 |
மத்திய மற்றும் நீண்ட காலப்பயிர்கள்
(மழைப்பருவம்) |
150 |
50 |
50 |
ஒட்டு ரகங்களுக்கு |
175 |
60 |
60 |
உரம் குறைவாகத் தேவைப்படும் ரகங்கள்
(வெள்ளைப் பொன்னி போன்றவை) |
75 |
50 |
50 |
- மூன்று பிரிவுகளாக தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் தருணங்களில் இடுதல் வேண்டும்.
- மேற்கண்ட பரிந்துரை பொதுவானதே, இடத்திற்கு ஏற்ப பரிந்துரைகள் மாறுபடுகின்றன. பகுதிக்கேற்ற பரிந்துரைகள் மிகவும் அவசியமானது என்பது நன்கு உணரப்பட்ட விஞ்ஞான உண்மை.
நெற் பயிரின் வளர்ச்சிப் பருவங்கள் (நாட்கள் - விதைத்த பின்)
பருவம் |
குறுகிய காலம் (105) |
மத்திய காலம் (135) |
நீண்டகாலம்(150) |
விரைந்து தூர் கட்டுதல் |
35-40 |
50-55 |
55-60 |
பூங்குருத்து உருவதால் |
45-50 |
70-75 |
85-90 |
கதிர் வெளிவருதல் |
70-75 |
100-105 |
115-120 |
தழைச்சத்து, சாம்பல் சத்து பிரித்திடுதல்
- தழைச்சத்தும், சாம்பல்சத்தும் நான்கு பிரிவுகளாக முறையே கடைசி உழவின்போது தூர் கட்டும் பருவம், கதிர் உருவாகும் பருவம் மற்றும் கதிர் வெளிவரும் பருவங்களில் இடப்படுதல் வேண்டும்.
- தூர் கட்டும் மற்றும் கதிர் உருவாகும் பருவங்கள் மிகவும் முக்கியமாக பயிர்வளர்ச்சியில் காலங்களாகும். அத்தருணத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவு முறை குறையாமல் இடப்படுதல் மிகவும் முக்கியம்.
- அடியுரமாகவும், கதிர் வெளிவரும் தருணத்திலும் இடப்படுகின்ற அளவு மற்ற பருவங்களுக்குச் சமமாகவோ அல்லது சற்று குறைவாகவோ அமையலாம்.
- தழைச்சத்து நிர்வாகம் இலைவண்ண அட்டை மூலம் இடப்படுதல் நலம்
|