Agriculture
பசுந்தாள் உரபயிர் சாகுபடி - முறைகள்

சித்தகத்தி

பருவம் : அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.

மார்ச் – ஏப்ரல் மிகச்சிறந்த பருவமாகும்

மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.

விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 30 – 40 கிலோ / ஹெக்டர்

விதைக்கு 15 கிலோ / ஹெக்டர்

விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு

நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ

நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை

அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ட பயிர்களை 130 நாட்களுக்கு பிறகு அறுவடை

விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 15 – 18 டன் /  எக்டர்

விதை 400 – 600 கிலோ / ஹெக்டர்

தக்கைப் பூண்டு

பருவம் : தேவையான நீர்ப்பாசனமுள்ள அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச் – ஏப்ரல் விதை உற்பத்திக்கு ஏற்றதாகும்

மண் : அனைத்து வகை மண்ணிற்கும் ஏற்றது.

விதையளவு   : பசுந்தாள் உரப்பயிர் 50 கிலோ / ஹெக்டர்
விதைக்கு 20 கிலோ / ஹெக்டர்

விதை நேர்த்தி : ரைசோபியத்துடன் ( 5 பொதி / ஹெக்டர்) விதை கலப்பு

நடவு இடைவெளி : கை விதைப்பு, விதைக்காக நடவு செய்யயும் போது அதற்கான இடைவெளி 45 x 20 செ.மீ

நீர்ப்பாசனம் 15 – 20 நாட்களுக்கு ஒரு முறை

அறுவடை : நடவு நட்ட முதல் 45 – 60 நாட்களில் அறுவடை மற்றும் விதை தேர்வுக்காக பயிரிடப்பட்ப பயிர்களை 100 நாட்களுக்கு பிறகு அறுவடை

விளைச்சல் : பசுந்தாள் உயிர்ப் பொருட்கள் 25 டன் /  எக்டர்

விதை 500 – 600 கிலோ / ஹெக்டர்

மணிலா அகத்தி – செஸ்பேனியா ரோஸ்ட்ரேடா

  1. நீர்வாழ் பயறு வகை பயிர்களில் தண்டு மற்றும் வேர் முடிச்சுகள் உள்ளது.
  2. 1980 ல் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம், பிலிப்பைன்ஸிலிருந்து  இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
  3. வெப்பமண்டல பயறுவகை பயிர்கள் வெள்ளம் மற்றும் நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் நன்கு வளரும்.
  4. பொதுவாக விதை மூலம் பயிர் பெருக்கம் செய்ய ஏற்றது. நாற்றுகள் மற்றும் வேர்த்துண்டுகள் ஆகியவற்றை நடவுப்பொருளாக பயன்படுத்தி பயிர்பெருக்கம் செய்யலாம்.

பருவம் 
அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
பிப்ரவரி – மே பருவத்தில் விதைத்தால் அதிக அங்கக உயிர்பொருள் கிடைக்கும்.
மார்ச் – மே விதைப்பு விதை உற்பத்திக்கு சிறந்தது.

மண்
கரிசல் மண் & செம்மண் ஏற்றது.  
உவர்களர் மண் ஏற்றதல்ல.

விதையளவு: 
40 கிலோ/எக்டர் பசுந்தாள் உரம்
விதை 7-8 கிலோ/எக்டர்

விதை நேர்த்தி:
விதைகளை அடர்ந்த கந்தக அமிலத்தில் (100 மிலி/கிலோ) 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு 10-15 முறை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். எக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இடைவெளி:
விதைகளை தூவ வேண்டும்.
விதைப்பயிராக இருந்தால் 45 x 20 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்:
15 – 20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.

காம்பு கிள்ளுதல்:
விதைப் பயிருக்கு விதைத்த 60 நாட்களுக்கு பிறகு காம்பு கிள்ளுதல் கிளைகள் மற்றும் விதை மகசூலை அதிகரிக்கும்.

அறுவடை:
விதைத்த 45-50 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும் மற்றும் விதைத்த 100 வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும். (3-4 அறுவடை)

மகசூல்:
பசுந்தாள் – 20 டன்/எக்டர்
விதை – 500-600 கிலோ/எக்டர்

சணப்பை (குரோடலேரியா ஜன்சியா)

  1. விரைவில் வளரக்கூடிய பசுந்தாள் மற்றும் நார் பயிர்
  2.  அதிக நீர் பாய்ச்சல் அல்லது தொடர்ந்து நீர் தேங்கக் கூடிய பகுதிக்கு ஏற்றவையல்ல.

பருவம்
அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச்-ஏப்ரல் மாதத்தில் விதைப்பது விதை உற்பத்திற்கு நல்லது.

மண்:
வண்டல் மண் ஏற்றது.

விதையளவு:
25-35 கிலோ/எக்டர் பசுந்தாள் 
விதை: 20 கிலோ/எக்டர்

விதை நேர்த்தி:
எக்டருக்கு 5 பாக்கெட் ரைசோபியம் பயிர் வளர்ப்பு கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

இடைவெளி:

விதைகளை தூவ வேண்டும் or 30x10செ.மீ இடைவெளி
விதை உற்பத்தி  45 x 20 செ.மீ

நீர்ப்பாசனம்:
30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:
விதைத்த 45-60 நாட்களில் பசுந்தாளை உழுது விட வேண்டும் 
விதை உற்பத்தி:  விதைத்த 150 வது நாட்களில் விதைகளை சேகரிக்க வேண்டும்.

மகசூல்:
பசுந்தாள் – 13-15 டன்/எக்டர், 
விதை – 400 கிலோ/எக்டர்

கொளுஞ்சி (தெப்ரோசியா பர்பூரியா)

  1. கால்நடை மேயாத மெதுவாக வளரக்கூடிய பசுந்தாள் பயிர்
  2. இதனை இரண்டு முதல் நான்கு பருவங்களுக்கு தொடர்ந்து பயிரிட்டால் பின்வரும் பருவங்களில் இதன் விதைகளை தானாக விழுந்து முளைக்க தொடங்கி விடும்.
  3. கடுமையான வறட்சியை தாங்கும் பசுந்தாள் பயிர். கோடை தரிசில் பயிரிட ஏற்றது.

பருவம்: 
அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச் – ஏப்ரல் விதைப்பு விதை உற்பத்திக்கு ஏற்றது.

மண்:
எல்லா மண் வகைகளும் ஏற்றது. மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது.

விதையளவு: 
15-20 கிலோ/எக்டர் பசுந்தாள் 
விதை உற்பத்தி 10 கிலோ/எக்டர்

விதை நேர்த்தி: 
விதைகளை அடர்ந்த கந்தக அமிலத்தில் (100 மிலி/கிலோ) 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு 10-15 முறை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பின்னர் நிழலில் உலர்த்த வேண்டும்.

இடைவெளி: 
விதைகளை தூவ வேண்டும்.
விதை உற்பத்தி: 30 x 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்:

30 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:
விதைத்த 60 வது நாளில் பசுந்தாளை உழுது விட வேண்டும்  மற்றும் விதைப் பயிராக இருந்தால் விதைத்த 150 வது நாளில் விதைகளை சேகரிக்க வேண்டும்.

மகசூல் 
      பசுந்தாள் – 6-7 டன்/எக்டர்
விதை – 400 - 500 கிலோ/எக்டர்

நரிப்பயறு (பேசியோலஸ் ட்ரிபுலஸ்)

  • கால்நடைகளுக்கு தீவனமாகவும் பசுந்தாள் உரமாகவும் பயன்படுத்த ஏற்றது.
  • கொடி போல் படர்ந்து அடர்த்தியாக காணப்படும்.
  • இப்பயிர் அதிக மகசூலை தராது. வயலில் உழுது விடுவதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்யலாம்.

பருவம்:
அனைத்து பருவத்திற்கும் ஏற்றது.
மார்ச்- ஏப்ரல் மாத விதைப்பு விதை உற்பத்திக்கு ஏற்றது.

மண்:    
 நெல் தரிசு களிமண் ஏற்றது.

விதையளவு:
10-15 கிலோ/எக்டர் பசுந்தாள்
விதை உற்பத்தி- 10 கிலோ/எக்டர்

இடைவெளி:
விதைகளை தூவ வேண்டும்
விதை உற்பத்தி - 30 x 10 செ.மீ

நீர்ப்பாசனம்:      

25 – 30 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

அறுவடை:

விதைத்த 60 வது நாளில் பசுந்தாளை உழுது விட வேண்டும்  மற்றும் விதைப் பயிராக இருந்தால் விதைத்த 150 வது நாளில் விதைகளை சேகரிக்க வேண்டும்.

மகசூல்:  பசுந்தாள் – 6-7 டன்/எக்டர்
விதை – 400 - 500 கிலோ/எக்டர்

ஆதாரம்:
www.tropicalforages.info
www.farm4.static.flickr.com

 
Fodder Cholam