நீர் நிர்வாகம் : தென்னை
   

நீர் மேலாண்மை

ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியதாலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மைத் திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம் அல்லது வட்டப்பாத்தி பாசனம் மூலம் கடைப்பிடிக்கலாம்.

தமிழகத்தின் மேற்குப்பகுதியில் தென்னை மரங்களுக்கத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்)

மாதங்கள் நீர் நிறைந்த பகுதிகள் நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் வறட்சியான பகுதிகள்
அ. சொட்டு நீர்ப்பாசனம்

 -

பிப்ரவரி - மே

65

45

22

ஜனவரி, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர்

55

35

18

ஜூன்மற்றும் ஜூலை ,அக்டோபர் முதல் டிசம்பர் வரை

45

30

15

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசனம்

 -

 -

 -

பிப்ரவரி - மே

410 லிட்டர், 6 நாள்

 -

 -

ஜனவரி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்

410 லிட்டர், 7 நாள்

 -

 -

ஜூன்மற்றும் ஜூலை , அக்டோபர் - டிசம்பர்

410 லிட்டர், 9 நாள்

 -

தமிழகத்தின் கிழக்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு நாளைய நீரின் அளவு (லிட்டரில்).

மாதங்கள் நீர் நிறைந்த பகுதிகள் நீர் ஓரளவு கிடைக்கப் பெறும் பகுதிகள் வறட்சியான பகுதிகள்
அ. சொட்டு நீர்ப்பாசனம்

 -

 -

 -

மார்ச் - செப்டம்பர்

80

55

27

அக்டோபர் - பிப்ரவரி

50

35

18

ஆ. வட்டப்பாத்தி நீர்ப்பாசன முறை

 -

 -

 -

மார்ச் - செப்டம்பர்

410 லிட்டர், 5 நாள்

 -

 -

அக்டோபர் - பிப்ரவரி

410 லிட்டர், 8 நாள்

 -

 -

வட்டப்பாத்தியில் நீர் பாய்ச்சும்போது மேலே கொடுக்கப்பட்ட நீரின் அளவுடன் 35 முதல் 40 சதவிகிதம் (135 - 160 லிட்டர்) அதிகப்படுத்தி வாய்க்கால்களின் பாய்ச்சும்போது குறையும் நீரின் ஈடுகட்டவேண்டும்.
தென்னை நார்க்கழிவால் நிரப்பப்பட்ட ஒர அடி நீள, ஆழ குழிகள் அமைத்து குழிக்குள் 16 மி.மீ விட்டமுடைய வி.வி.சி குழாய்களை சாய்வாக வைத்து அதில் சொட்டு நீர் விழும்படி அமைக்கவேண்டும். இக்குழிகள் மரத்திலிருந்து 1 மீட்டர் தூரத்தில் நான்கு பக்கமும் அமைக்கப்படவேண்டும்.

முதலாம்  ஆண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாளும், இரண்டாம் ஆண்டு முதல் காய் பிடிக்கும் வரை வாரம் இருமுறையும் தேவைக்கேற்ப நீர் பாய்ச்சுதல் சிறந்தது.

வறட்சி மேலாண்மை மற்றும் நீர் வள பாதுகாப்பு

அ. தென்னை மட்டைகள் ஓலைகள் தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு போடுதல். குறிப்பாக கோடைக் காலங்களில் 1.8 மீட்டர் ஆரம் கொண்டு வட்டப்பாத்திகளில் குவி வட்டப்பகுதி மேல் நோக்கியவாறு 100 தென்னை மட்டைகளை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகளை அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு பரப்பி மண் நீர்வளத்தைப் பாதுகாக்கலாம்.

 
 
பயிர்த் திட்டமிடுதல்
பயிர்த்தேர்வு முறைகள்
நுட்ப காலநிலை
வெப்பநிலை
காற்றழுத்தம்
மழை
சூரிய வெப்பம்
ஈர பதம்
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam