நீர் நிர்வாகம் :: எண்ணை பனை
   

 

oilpalms

நீர் தேவை

தொடர்ந்து மண்ணில் ஈரப்பதம் இருந்தால் நல்ல வளர்ச்சியும் அதிக மகசூலும் கிடைக்கும். தேவையான அளவு நீர், நில ஆழம் தண்ணீர் சேமித்து வைக்கும் திறன் ஆகியவை மிகவும் அவசியம், நீர் பற்றாக்குறை இருப்பின் இலைகளின் துளைகள் மூடிக்கொள்வதால் வளர்ச்சி குன்றி பெண் பூக்கள் குறைந்து ஆண் பூக்கள் அதிக அளவில் தோன்றும். எண்ணை பன்னைக்கு மாததிற்கு 120-150 மிமீ என்ற அளவில் நீர் தேவைப்படுகிறது. நல்ல தண்ணீர் வசதியுள்ள இடங்களில் பாத்தி முறை பாசனமும்? நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனமும் சிபாரிசு செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் ஒரு நாளைக்கு ஒரு மரத்திற்கு 90 லிட்டர் தண்ணீர் தரவேண்டும்.

 
 
 
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam