Agriculture
வேளாண் பயிர் சாகுபடியில் களை மேலாண்மை
குறுதானியங்கள்
முக்கிய களைகள்
அபுட்டிலான் இண்டிகம் அமராந்தஸ் ஸ்பைனோசஸ் செலோசியா அர்ஜென்டினா
க்ளோரிஸ் பார்பேட்டா சைனோடான் டாக்டைலான் சைப்ரஸ் ரொட்டன்டஸ்
கோம்ப்ரினா செலோசியாய்டஸ் லியுகஸ் ஆஸ்பெரா பார்த்தீனியம் ஹிஸ்ட்டிரோபோரஸ்
ஃபில்லான்தஸ் மெட்ராஸ்பெட்டன்சிஸ் ட்ரையாந்திமா போர்ட்டுலோக்காஸ்ட்ரம் ட்ரைடாக்ஸ் ப்ரோகும்பன்ஸ்

திணை
மானாவாரி திணைப்பயிர்,  பொதுவாக துளையிடுவது மூலம் போதுமான வரிசை இடைவெளியில் உள்சாகுபடியாக செய்யப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று உள்சாகுபடிகள், ஒரு கைக்களை மூலம்,  அதனால் ஏற்படும் இழப்பைக் குறைக்க போதுமானதாக இருக்கிறது. விதைத்த 20 அல்லது 35 நாட்களுக்குப் பிறகு,  பயிருக்கும் களைக்குமான போட்டியின் நெருக்கடியான காலகட்டம் ஆகும். முதல் இடைச்சாகுபடி விதைத்த 20 நாட்களுக்குப் பிறகும் மற்றும் இரண்டாவது இடைச்சாகுபடி விதைத்த 35 நாட்களுக்குப் பிறகும் இருக்க வேண்டும். பொதுவாக, திணைப் பயிரில், களைக்கொல்லிகள் களைக் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை.

சாமை
கத்திக்கலப்பை கொண்டு ஒன்று அல்லது இரண்டு முறை இடைச்சாகுபடி செய்தல்.

வரகு
பெரும்பாலும் விதைத்தலுக்குப் பின்னர் இடைச்சாகுபடி மேற்கொள்ளப்படுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு முறை இடைச்சாகுபடி, பயிர் முதிர்ச்சி வரை மேற்கொள்ளப்படுகிறது.

பனிவரகு
ஒன்று அல்லது இரண்டு முறை இடைச்சாகுபடி விதைத்த முப்பது நாட்களுக்குப் பின்பு மற்றும் அதனைத் தொடர்ந்து  ஒரு முறை கைக்களையெடுத்தல்.


புகைப்பட ஆதாரம் :
www.agritech.tnau.ac.in
Dr.R.ஜெகன்னாதன் ,
பேராசிரியர் உழவியல் துறை,
த.வே.ப.க , கோவை -3

 
Fodder Cholam