Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்)

இரகம் : கோ 1

பருவம்

இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது.

பயிர் மேலாண்மை

மண்

நல்ல வடிகால் வசதியுடைய எல்லா மண் வகைகளும் ஏற்றது. களிமண் அல்லது நீர் தேங்க கூடிய பகுதிகளில் வளராது.

உழவு

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்த வேண்டும். பண்பட்ட நிலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும்.

உரமிடுதல்

அடியுரம்: தொழு உரம் 25 டன்/எக்டர்,  20 : 25 : 20 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து/எக்டர்
மேலுரம்: 20 கிலோ தழைச்சத்தினை விதைத்த 30 வது நாளில் இட வேண்டும்.இதில் 50 சதவித உரத்தினை மானாவாரி பயிருக்கு இட வேண்டும்.  

விதை அளவு

2.5 கிலோ/எக்டர்

இடைவெளி

35 x 10 செ.மீ அல்லது 30 செ.மீ இடைவெளியில் வரிசையில் தொடர்ச்சியாக விதைக்கவும்.  

பின்செய் நேர்த்தி

விதைத்த 30 வது நாளில் களை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மை

மண்ணின் தன்மையைப் பொறுத்து 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பொதுவாகத் தேவையில்லை.

அறுவடை 

விதைத்த 55-60 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.

பசுந்தீவன மகசூல் 

இறவைப்பயிர் : 25-30 டன்/எக்டர் - முதல் பயிர். மறுதாம்புப் பயிர் : 15-20 டன்/எக்டர்
மானாவாரிப்பயிர் : 15-20 டன்/எக்டர்

விதை உற்பத்தி

நிலத் தேர்வு

விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்க கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.

பயிர் விலகு தூரம்

  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 10 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.

விதைப்பிற்கு முன் விதை மேலாண்மை

  • விதையை இயந்திர உதவியால் கீறலிடவும் அதை தொடர்ந்து விதைகளை  GA3 (200 பிபிஎம்) மற்றும் பொட்டாசியம் நைட்ரேட் (0.25%) (1:1) கலவையில் 16 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு கிலோ விதைக்கு 60 கிராம் டி.ஏ.பி மற்றும் அரப்பு இலை தூள் (அல்பிஸ்யா அமாரா) கிலோவிற்கு 500 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதைப்பதற்கு எளிதாக இருக்கிறது.

அறுவடை

  • தீனாநாத் புல் (சி.வி. பூசா 3) முதிர்ச்சியடைந்த ஐந்தாவது வாரத்தில் 50% பூக்கும் நிலையில் அறுவடை செய்யலாம் சி.வி.  டி.என்.டி.என் 1- னை ஆறு வாரத்தில் அறுவடை செய்யலாம்.
  • முதல் மற்றும் இரண்டாவது பக்கத் தூர்களில் உருவான விதைகள் அதிக முளைப்புத் திறன் உடையனவாக இருக்கும்.
  • காலம் கடந்த அறுவடை செய்வதால் சிதறல் ஏற்பட்டு இழப்பு ஏற்படும்.
  • மத்திய மற்றும் கீழ் நுனியில் உருவாகும் விதைகள் அதிக தரமானதாக இருக்கும்.

விதை நேர்த்தி

  • ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் கார்பண்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

விதைச் சேமிப்பு

  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 10 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்துப் பின் உள்உறை கொண்ட    சாக்குப் பைகளில் மத்திய, இடைக்கால சேமிப்பிற்காக (12 – 15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 சதவீதத்திற்கும் குறைவாக உலர்த்தி  700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலிதீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமித்து வைக்கலாம்.

பிற மேலாண்மை முறைகள்

தீவனப்பயிர்களைப் போன்றே பின்பற்றலாம்

Updated on : 13.11.2013
 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram