Agriculture
வேளாண்மை :: சிறுதானியங்கள்

குதிரைவாலி
(எகினோக்ளோவா புருமென்டேசியே)

கதிர்கள்
கதிர்கள்
தானியம்
தானியம்

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
குதிரைவாலி சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டிக்கல், தேனி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி.

 

பருவம் இரகங்கள்
மானாவாரி
a) செப்டம்பர்-அக்டோபர் கோ 1, கோ(குதிரைவாலி)2
பாசனப்பயிர்
a) பிப்ரவரி-மார்ச் கோ 1, கோ(குதிரைவாலி)2

விவரங்கள்

விவரங்கள் கோ 1 கோ(குதிரைவாலி) 2
பெற்றோர் கோயம்புத்தூர் லோக்கலிலிருந்து நல் விதைத் தேர்வு மூலம் பெறப்பட்டது. EF 79 லிருந்து நல் விதைத் தேர்வு மூலம் பெறப்பட்டது.
வயது (நாட்கள்) 75 95
நிறம் பச்சை பச்சை
தூர்கட்டும் திறன் அதிகம் அதிகம்
பூங்கொத்து தளர்வான இறுக்கமான, பிரமிட் வடிவம்
தானிய தன்மை மஞ்சள் பழுப்பு கலந்த சாம்பல்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 1750 2650
சிறப்பு அம்சங்கள் பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை நல்ல தானிய தரம்

குதிரைவாலி

இது வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது மேலும் தண்ணீர் தேங்கினாலும் தாக்குபிடிக்ககூடியது. குதிரைவாலிஅதிகம் மானாவாரியில் பயிரிடப்படுகிறது. இது 40 சதவீத புரதசத்து கொண்டது. குதிரைவாலி தானியம் அதிகம் ஏழைகளால் உண்ணப்படுகின்றது மற்றும் ஆல்கஹால் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

தோற்றம் மற்றும் வரலாறு:
இந்திய பண்டைய இலக்கியங்களில் குதிரைவாலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவில் இரன்டாயிரம் ஆண்டுகளாக பயிரிடப்பட்டு உள்ளது. வல்லுநர்களிள் ஆராய்ச்சிபடி குதிரைவாலி மத்திய ஆசியாவில் தோன்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்க கண்டங்களுக்கு பரவியிருக்கலாம்.
குதிரைவாலி உலகளவில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா மற்றும் கிழக்கு இந்திய நாடுகளில் பயிரிடப்படுகிறது. சீனா மற்றும் ஜப்பானில் நெற்பயிர் உற்பத்தி இழப்பு ஏற்படும் போது குதிரைவாலி மாற்றுப்பயிராக பயிரிடப்படுகிறது. ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டங்களிலும் சிறிதளவில் பயிரிடப்படுகிறது.
இந்தியளவில் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம் தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், கர்நாடாக, மகாராஷ்டிரம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பயிர் மேலாண்மை :
காலநிலை தேவைகள்:
குதிரைவாலி வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதால் மானவாரி பயிராக பயிரிடப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் வரை பயிரிடப்படுகிறது. குதிரைவாலி வெப்பம் மற்றும் வெப்பம் சார்ந்த காலநிலைகளில் நன்கு வளரக்கூடியது. குதிரைவாலி மற்ற பயிர்களை காட்டிலும் மாறுபட்ட சீதோஷ்ண நிலைகளை தாங்கி வளரக்கூடியது.

மண்:
குதிரைவாலி  தண்ணீர் தேங்கிய ஆற்றுப் படுகையில் ஒரளவிற்கு வளரக்கூடியது. இது மணல் கலந்த களிமண்நிலங்களில் நன்கு வளரக்கூடியது. கற்கள் நிறைந்த மண் மற்றும் குறைந்த சத்துக்கள் உடைய மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல.

நிலம் தயாரித்தல்:
இரண்டு முறை நிலத்தை கலப்பை (அ) ஹேரோ கலப்பை கொண்டு உழுது சமப்படுத்தி விதைப்படுக்கையை தயார்படுத்துதல் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு செய்தல்:
குதிரைவாலி பருவமழை துவங்கிய உடன் ஜீலை மாதத்தின் முதல் பதிணைந்து நாட்களுக்கு விதைக்க வேண்டும், விதைகளை தெளித்தல்(அ) பார்பிடித்து 3-4 செ.மீ துளையிட்டு விதைக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு 8-10 கிலோ விதை தேவைப்படும். வரிசைக்கு வரிசை இடைவெளியாக 25 செ.மீவிடலாம்.

எரு மற்றும் உர மேலாண்மை:
ஒரு  ஹெக்டேருக்கு 5-10 டன்கள் தொழு உரம் இடலாம். தழை, மணி மற்றும் சாம்பல் சத்தினை 40:30:50 கிலோ ஒரு ஹெக்டேருக்கு என்ற விகிதத்தில் இடவேண்டும். உரம் முழுவதையும் விதை விதைப்பின்போது அளிக்க வேண்டும். நீர்பாசனப் பகுதிகளில் பாதியளவு தழைச்சத்தை விதைத்த 25-30 நாட்களுக்கு பிறகு இடலாம்.

நீர் மேலாண்மை:
பொதுவாக குதிரைவாலிக்கு நீர்பாசனம் தேவையில்லை வறன்ட சூழ்நிலை நிலவினால் ஒருமுறை நீர்பாசனம் பூங்கொத்து வரும் தருனத்தில் அளிக்கவேண்டும். அதிகப்படியான மழை பொழியும் காலங்களில் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வெளியேற்றவேண்டும்.
களை மேலாண்மை:
வயலில் விதைத்த 25-30 நாட்கள் வரைகளை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் இரண்டு முறை களை எடுத்தல் போதுமானது. கைகொத்து அல்லது சக்கர கொத்தி மூலம் களை எடுக்கலாம்.

நோய் கட்டுப்பாடு:
பூஞ்சாண காளாண் நோய்:
இது ஓரு பூஞ்சாண காளாண் நோயாகும் .பாதிக்கப்பட்ட செடியினை பிடுங்கி எறிவதன் முலம் கட்டுப்படுத்தலாம். விதைகளை ஆரோக்கியமான செடிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

கரிப்பூட்டை நோய்:
இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். இதனை விதை நேர்த்தி மூலம் அக்ரோசன் 2.5 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். சுடுதண்ணீரில் நனைத்தும் (55 செல்சியஸ் 7 – 12 நிமிடங்களில்) விதைக்கலாம்.

துரு நோய் :
இதுவும் ஓரு வகை பூஞ்சாண காளாண் நோயாகும். டைத்தேன் எம்-45 2 கிலோவை 1000 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பூச்சி கட்டுப்பாடு

தண்டு துளைப்பான் :
திமெட் குருணை 15 கிலோ  ஒரு ஹெக்டருக்கு என்ற விகிதத்தில் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை மற்றும் கதிரடித்தல்

வயல் அறுவடைக்கு தயாரானவுடன் அரிவாள் கொண்டு அறுத்து வயலில் அடுக்கி வைக்கப்பட வேண்டும். கதிர்களை காளைகளின் கால்களில் போட்டு நசுக்கி தானியங்களைப் பிரித்தெடுக்கலாம்.

மகசூல்
சராசரியாக ஒரு ஹெக்டருக்கு 400-600 கிலோ தானியமும் 1200 கிலோ வைக்கோலும் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளால் 10 – 12 குவிண்டால் வரை தானிய மகசூல் பெறலாம்.

 

 

 
Fodder Cholam