Agriculture
வேளாண்மை :: எண்ணெய் வித்துக்கள்

குசும்பா (கார்தமஸ் டிங்டோரியஸ்)

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் இரகங்கள்
A. மானாவாரி  
1. கார்த்திகைப்பட்டம் (நவம்பர்-டிசம்பர்)
எல்லா மாவட்டங்களும் கே 1, கோ 1

இரகங்களின் விவரங்கள்

விவரங்கள் கே 1 கோ 1
பெற்றோர் முட்கள் உடைய அமெரிக்கன் இரகத்திலிருந்து நல் விதைத் தேர்வு சி.டி.எஸ் 7403 (முட்கள் இல்லாத) லிருந்து நல் விதைத் தேர்வு
வயது (நாட்கள்) 120 125
மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 700 800
எண்ணைசத்து (%) 32 33
சிறப்பு அம்சங்கள் முட்கள் உடையது, தென் மாவட்டங்களுக்கு ஏற்றது. முட்கள் அற்றது, அல்டர்னேரியாவை தாங்கி வளரும், வாடல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும்

தொழு உரமிடுதல்

நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும்.

விதையும் விதைப்பும்

விதை அளவு ஹெக்டேருக்கு 10 கிலோ

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்

விதைக்கும் முறை

விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும்
விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை ரமூலமாக வரிசையில் நடவு செய்யலாம்

இடைவெளி

நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 15 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும்
விதைத்த 15-ம் நாள், செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும்

உரமிடுதல்

பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி / ஹெ அடியுரமாக இடவேண்டும்

களை கட்டுப்பாடு

விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை ககைளை, களைக்தொத்தி மூலமாகவோ அல்லது கைக்களையாகவோ எடுக்க வேண்டும்

அறுவடை

முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை  களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 
 

முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021

Fodder Cholam