Agriculture Engineering
| | | | | | | | | |
வேளாண் கழிவுகளை உபயோகிக்கும் தொழில்நுட்பங்கள்

பண்ணைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்

பயன்

:

நார்த்தன்மைக் கழிவுகளிலிருந்து காகித அட்டை தயாரித்தல்.

திறன்

:

அமைக்கும் ஆலையைப் பொறுத்தது.

விலை

:

ரூ. 5 இலட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

 

அமைப்பு

:

வாழைத்தண்டு, பருத்திமார் போன்ற பண்ணைக் கழிவுகளில் நார்த்தன்மை அதிகம் உள்ளது. இவை காகிதம் மற்றும் காகித அடடை தயாரிப்பதற்கு ஏற்றது. இத்தகைய பண்ணைக்கழிவுகள் கொதிகலன்களில் வேகவைத்து, பழைய காகிதத்துடன் 3:1 என்ற விகிதத்தில் அரைத்து கூழாக்கப்படுகிறது. இந்தக்கூழை நைலான் வலையிட்ட சட்டங்களில் இட்டு தேவையான அளவிற்கு காகித அட்டையாக வார்க்கப்படுகிறது. வார்க்ப்பட்ட காகித அட்டைகள் நன்கு உலரவைத்து, சுறுக்கம் நீக்கப்பட்ட கோப்புகள் மற்றும் காகித அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

பண்ணைக் கழிவுகள் காகித அட்டை தயாரிக்க மிகவும் ஏற்றது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகித அட்டைப்பொருட்கள் சுற்றுப்புறச்சூழலோடு ஒத்துச்செல்பவையாகும்.