பயிர் பாதுகாப்பு :: பாசிப்பயிறு பயிரைத் தாக்கும் நோய்கள்

மேக்ரோபோமினா இலைக்கருகல்: மேக்ரோஃபோமினா ஃபேசியேலினா

அறிகுறிகள்

  • நெல்லை தொடர்ந்து பயிரிடப்படும் பாசிப்பயிரில் விதைத்த 4 வாரத்தில் இந்நோய் தோன்றுகிறது. கீழ்த் தண்டுப்பகுதியில் வெள்ளை நிறப்பூசண வளர்ச்சி காணப்படும்.
  • இவ்வகையான பூசண வளர்ச்சி அதிகமாகி இவை உயர்ந்த வரிக்கோடுகளாக மாறி மேல்நோக்கி பரவுகிறது.
  • செடிகள் குட்டையாகவும், இலைகள் அடர்ந்த பச்சை நிறத்திலும், இலையின்  அளவு குறைந்தும் காணப்படும்.
  • பாதிச் செடிகளில் இலைகள் உதிர்ந்து விடும்.
  • செடியில் பூத்தலும், காய்த்தலும் குறைந்துவிடும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட செடியின் தண்டைப் பிளந்த பார்த்தால் சிவப்பு நிறத்தில் திசுக்களும், உள்திசுக்கள் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
  • நோய்க்காரணி விதையிலும், மண்ணிலும், நோயுற்ற செடிகளிலும், தங்கியிருக்கும்.
  • வெப்பநிலை அதிகரிக்க நோயின் தாக்கம் அதிகரிக்கும்.
  • மண்ணின் மேல் தளத்தில் பூசண வித்துக்கள் தங்கியிருக்கும் இவை தண்டின் மூலம் உள்ளே நுழைகின்றன.

கட்டுப்பாடு

  • கோடையில் ஆழமாக உழவேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையை கடைப்பிடிக்கவேண்டும்.
  • மண்ணில் தொழு உரம் அதிகமாக இருந்தால் நோயின்தாக்கம் குறையும்.
  • நோயுற்ற செடியை அழித்தால் நோயின் தாக்கம் குறையும்.
  • விதையை டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ அல்லது சூடோமோனஸ் ப்ளூரசன்ஸ் 10 கிராம் / கிலோ அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் பயன்படுத்தி நேர்த்தி செய்யலாம்.
  • கார்பன்டாசிம் 2 கிராம் / லிட்டர் அல்லது சூஃப்ளூரசன்ஸ் அல்லது டி.விரிடியை 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015