பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

தக்காளி புள்ளி வாடல் நோய்

அறிகுறிகள்

  • இலைகள், தண்டு மற்றும் பழங்களில் கோடுகள் காணப்படும்.
  • சிறிய, கருப்பு, வட்ட புள்ளிகள் இளம் இலைகளில் தோன்றும்.
  • இலைகள் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.
  • பழங்களில் அரை அங்குல விட்டம் அளவிற்கு பல புள்ளிகள் காணப்படும். பழுத்த பழங்களின் கழுத்துப் பகுதியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகின்றன.
  • புள்ளி வாடல் வைரஸ் செடிப்பேன் மூலம் பரவுகின்றன.
பாதிக்கப்பட்ட இலை பாதிக்கப்பட்ட பழம்

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும்
  • பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம்.
  • வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம்.
  • இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016