அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்



அறுவடை

  • விதைத்த 3 முதல் 5 மாதத்தில் இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து கதிர்கள்முதிர்கின்றன.

  • கதிர்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் பயிரை அறுவடை செய்யவேண்டும்.

  • அறுவடை செய்த கதிர்களை குவித்து வைத்து, கதிரடிப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன், ராகி வைக்கோல் கொண்டு மூடவேண்டும்.

  • உலர்ந்த கதிர்களை குச்சி (அ) கம்பு வைத்து அடித்து, மாடுகளை விட்டு மிதிக்கவிட்டு கல் உருளைகளை ஏற்றி தானியங்களை பிரிக்கவேண்டும். பிரித்த தானியங்களை துாற்றி சுத்தம் செய்யவேண்டும்.

  • பாசனப்பயிரின் வைக்கோல் பெரிதாக, தடிமனாக இருப்பதால் அதை வெட்டுவதில்லை. அப்படியே மேய விடப்படுகிறது (அ) அடுத்த பயிருக்கு பசுந்தாள் உரமாக இடப்படுகிறது

  • நெல், மக்காச்சோளம் மற்றும் சோளத்தைவிட ராகியில் அதிகமான புரதம், கொழுப்பு சத்து மற்று தாதுக்கள் உள்ளது.

  • ராகி மாவு, கேக், புட்டு மற்றும் கஞ்சி செய்யப் பயன்படுகிறது.

  • ராகி தோசை, உருண்டை, பான்கேக், சேமியா, மால்ட், பிஸ்கட், பீர், அப்பளம், தானியக் கலவை, பிரெட், ரொட்டி ஆகியன ராகியில் தயாரிக்கப்படுகிறது.

i.அறுவடை செய்ய வேண்டிய தருணம்

  • இரகம், பருவம் மற்றும் மண்ணின் தன்மையைப் பொறுத்து, விதைத்த 3-4 மாதத்தில் முதிர்ச்சி அடைகிறது.

  • வயலில் உள்ள பயிரின் நடுத்தண்டின் கதிர்கள் 50 சதம் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்யலாம்.

  • மானாவாரி பயிர்களில், முதிரிச்சி அடைந்த பயிர்களை நிலத்திற்கு மிக அருகே அறுக்கப்பட்டு, ஒன்று (அ) இரண்டு நாட்கள் வாடவிட்டு, கதிரடிப்பதற்காக கட்டி எடுத்துச் செல்லப்படுகிறது.

  • கதிர்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் முதிர்வதில்லை. எனவே, ஒரு வார இடைவெளி விட்டு அறுவடை செய்ய வேண்டும்.

முதல் அறுவடை

  • பழுப்பு நிறத்திற்கு மாறிய அனைத்து கதிர்களையும் அறுவடை செய்யவேண்டும்.

  • உலர்த்தி, கதிரடித்து, துாற்றி, சுத்தமான தானியங்களைப் பெறலாம்.

இரண்டாம் அறுவடை

  • முதல் அறுவடை செய்த ஏழு நாட்களுக்கு பிறகு அனைத்து கதிர்களையும், பச்சையாக இருப்பவைகளையும் சேரித்துஅறுவடை செய்யவேண்டும்.

  • கதிர்களை ஒரு நாள் முழுவதும் நிழலில் குவித்து வைத்து தானியங்களை பதப்படுத்த வேண்டும். ஈரப்பதமும், வெப்பமும் அதிகரிப்பதால் தானியம் சீராக பதப்படுத்தப்படுகிறது.

  • பின் தானியங்களை உலர்த்தி, கதிரடித்து, சுத்தம் செய்து துாற்றி, கோணிப்பையில் சேகரிக்கவேண்டும்.

மேலே செல்க

ii.அறுவடை முறைகள்

  • ராகி பயிரில் அறுவடை என்பது கதிர்களை காம்புடன் வெட்டி தானியங்களை சேகரிப்பது ஆகும்.

  • பயிர்கள் முதிர்ச்சியடைந்து தானியங்கள் பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.

  • பொதுவாக அறுவடை கையால் செய்யப்படுகிறது. இந்த முறையையே மக்கள் பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.

  • கதிர்கள் முதிர்ச்சியடையும் தருணத்திலோ, பழுப்பு நிறத்திற்கு மாறியவுடனோ, கதிர்களை மட்டுமோ (அ) செடியுடனோ கதிரருவாள் கொண்டு அறுவடை செய்யவேண்டும். 

  • ஈரமான வானிலை சூழலில் அறுவடை செய்வதைத் தவிர்க்கவேண்டும்

  • தானியங்கள் கடினமானவுடன், போதுமான அளவு ஈரப்பதத்துடன் இருக்கும் போது அறுவடை செய்யவேண்டும்

  • அறுவடைக்கு முன் பூச்சி தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்

  • வயலில் ஒன்று (அ) இரண்டு நாட்களுக்கு அறுவடை செய்த செடிகளை வாடவிட்டு, கட்டி, வானிலையைப் பொறுத்து, கதிரடிப்பதற்காக குவித்து வைக்கலாம்.

மேலே செல்க

iii.மகசூல்

  • மானாவாரி கேழ்வரகுப் பயிரில், 1.0-1.5 டன் தானியம்/எக்டர் மற்றும் பாசனப்பயிரில் 5.0 டன்/எக்டர் வரையிலும், சராசரி மகசூல் கிடைக்கிறது.

  • மகசூல் இரகத்தைப் பொருத்தும், நேரடியாக வயது, உயரம், துார்கள் எண்ணிக்கையை பொருத்தும் சார்ந்து இருக்கும்.

  • வளைந்த கதிர்கிளைகளை விட, நேரான கதிர் அதிக மகசூல் தருகிறது. தீவன மகசூல், குறுகிய கால பயிரில் 3.0-9.0 டன்/எக்டர் ஆகும். நீண்ட நாள் பயிரில், 9.5-10.0 டன்/எக்டர் ஆகும்.

  • கேழ்வரகு தட்டு, ஒரு நல்ல சத்தான தீவனமாகும். நன்றாக கட்டி வைத்து, சேமித்து வைக்கலாம்.

கேழ்வரகு பயிரின் மகசூல் விபரம்

காரணிகள் அளவு

திறன் மிக்க துார்கள் (எண்ணிக்கை)

2-4.5

கதிர் கிளைகள் எண்ணிக்கை

5.12

கதிர் கிளை நீளம் (செ.மீ)

3-14 செ.மீ

தானியம்/கதிர் கிளை

22-81

1000 தானிய எடை (கிராம்)

1.0-4.5

 

 

 

 

 

 

 

தானிய மகசூலை அதிகரிக்கும் வழிகள்

  • விதைத்த 40 மற்றும் 50 ஆம் நாளில், 10 பி.பி.எம் சைடோகைனின் கரைசல் தெளித்து மகசூலை அதிகரிக்கலாம்.

  • விதைத்த 40 மற்றும் 50 ஆம் நாளில், 2% யூரியா கரைசலை, இலை வழியாக தெளித்து தானிய மகசூலை அதிகரிக்கலாம்.

  • 1% பொட்டாசியம் குளோரைடு + 1% கால்சியம் குளோரைடு பயன்படுத்தி, விதையை கடினப்படுத்தி, மானாவாரி பயிரில் மகசூலை அதிகரிக்கலாம்.

  • தனிப்பயிராக கேழ்வரகு சாகுபடி செய்வதைவிட, 4:1 விகிதத்தில் பச்சைப் பயறுடன் ஊடுபயிர் செய்ததில் அதிக வருமானம் கிடைத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து 6:1 விகிதம் (ரூ 2239//எக்டர்) மற்றும் 8:1 விகிதத்திலும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

  • அசோஸ்பைரில்லத்தை விதை நேர்த்தி (அ) விதைப்பிற்கு பின் சால்களில் இட்டு, தழைச்சத்து உரத்தை சேமித்து, தானிய மகசூலை அதிகரிக்கலாம்.

  • கேழ்வரகு விதைகளை 5 பிபிஎம் 'CCC இல் (அ) 10% மாட்டு சிறுநீரில் ஊற வைத்து (விதை கடினப்படுத்துதல்), உலர் விதைகளை விட 12-15% அதிக மகசூல் பெறலாம். CCC கெமிக்கலின் விலை ரூ.1, ஆனால் அதனால் கிடைக்க கூடிய தானிய அதிகரிப்பு லாபம் ரூ.150 ஆகும்.

  • ஒருங்கிணைந்த உர நிர்வாகம் ஆய்வில், பையூர் 1, கேழ்வரகு, 80 டன்/எக்டர் ஏரி வண்டல் (அ) களிமண் இட்டதில் அதிக மகசூல் கிடைத்துள்ளது. மேலும் இதனால் இதனை அடுத்த கொள்ளு பயிருக்கு நல்ல எஞ்சிய பலன் கிடைத்தது. இது தவிர, இதனால் மண்ணின் இயற்கை அங்ககப்பொருள் வளம், அணு மாற்றுத் திறன், மற்றும் வளம் அதிகரிக்கிறது.

  • ஒருங்கிணைந்த களை நிர்வாகத்தில், மானாவாரி கேழ்வரகு சாகுபடிக்கு, முளைத்த பின் களைக் கொல்லிகளான 2.4 D சோடியம் உப்பு (அ) 2.4 D ஈதைல்எஸ்டர் @ 0.5 கிலோ/எக்டர் தெளித்ததில் அதிக மகசூல் கிடைத்துள்ளது.

  • மானாவாரி பயிரில் 50 கிலோ/எக்டர் தழைச்சத்து உரத்தை, இருமுறை, விதைப்பு மற்றும் நடவு செய்த 20-30 நாட்களில் 20 கிலோ மணிச்சத்தாக ஊட்டமேற்றப்பட்ட தொழு உரமாக இட்டதில், 25-30 கிலோ, மேலுரமாக தழைச்சத்து மற்றும் மணிச்சத்தை அடியுரமாக இட்டதைவிட அதிக மகசூல் கொடுத்துள்ளது.

  • பருவமழை தாமதமாகும் பொழுது, குறுகிய கால இரகங்களான டிபிமி 2011 (95 நாட்கள்) இரகத்தை சாகுபடி செய்யவும். பருவமழை முறையாக இருக்கும் பொழுது, பையூர் 1 (110 நாட்கள்) இரகத்தை சாகுபடி செய்யவும். இடையில் மழையில்லாமல் போனால், மக்கிய தென்னை நார்க் கழிவு (5 டன்/எக்டர்) இடவும். Êகத்த பலுகு கொண்டு நிலப்போர்வை அமைக்கவும்.

  • கேழ்வரகு கொள்ளு/காராமணி பயிர் முறைக்கு ஆர்.ஐ.எப் + ஊட்டமேற்றப்பட்ட தொழு உரம் இட்டதில் அதிக மகசூல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலே செல்க


அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள்


மேலே செல்க

பதப்படுத்துதல் மற்றும் உலர்த்துதல்


  • அறுவடை செய்யப்பட்ட கதிர்களை ஒன்றாகக் கட்டி, குவித்து, துணி (அ) கோணிப் பையில் போட்டு கட்டி, புகை வருமாறு 3-4 நாட்கள் வைக்கவேண்டும்.

  • இதனால் அனைத்து கதிர்களும் ஒன்றாகி, சீராக பதமாக, ஒரே பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது.

  • அறுவடை செய்யும்பொழுது கதிர்கள் உலர்ந்த நிலையில் தண்ணீர் ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். வறண்ட வானிலை நிலவும் போது மட்டும் அறுவடை செய்யவேண்டும்.

  • பதப்படுத்திய பிறகு கதிர்களை நன்றாக உலர்த்தவேண்டும். எந்த காலநிலையில் உலர்த்துகிறோம் என்பதைப் பொறுத்து, ஒன்று முதல் நான்கு நாட்களுக்கு உலர்த்தலாம். இதனால் கதிரில் இருந்து மணிகள் சுலபமாக பிரிகின்றது.

மேலே செல்க

கதிரடித்தல்


  • வளைந்த கதிர்கிளைகளில் உள்ள மணிகள், கையால் அல்லது காளை மாடுகளால்/மூங்கில் குச்சிகள் (அ) இயந்திரம் மூலமாகவோ பிரித்து எடுக்கப்படுகிறது

  • ராகித் துார்கள் ரோட்டில் பரப்பப்பட்டு வாகனங்களால் மிதிக்கப்படுகிறது. இம்முறையையே பெரும்பாலானோர் கதிரில் இருந்து தானியத்தைப் பிரித்தெடுக்க பின்பற்றுகின்றனர்

  • கையால் திருகி கதிர்களை அடித்தோ, கதிரடிக்கும் அட்டை (அ) மரக்குச்சிகள் (அ) மூங்கில் குச்சிகள் கொண்டு அடித்தோ கதிர் மணிகள் பிரித்தெடுக்கப்படுகிறது. அதன்பின், கதிர் கூலத்தின் அடியில் நல்ல மணிகளும், மேல்புறமாக பதர்களும் நிறைந்து இருக்கும்.

  • சுழலும் உருளை மற்றும் பெடல் உடன் உள்ள கதிரடிக்கும் இயந்திரத்தில் உள்ள வையர் லுாப்புகள், கதிர்களை உள்ளே விடும் பொழுது மணிகளைப் பிரித்தெடுக்கிறது. இது சிறியதாக இருப்பதால் எங்கும் எளிதாக எடுத்துச் செல்ல கூடிய வகையில் இருப்பதால் மலைப்பகுதிகளில் உள்ள பெண்களை பயன்படுத்தி செய்து கொள்ளலாம்.

  • உலர்ந்த கதிர்களை எளிதாக இரு கைகளாலும் கசக்கி விடலாம் என்பதால், பெண் வேலையாட்களைக் கொண்டு கதிரடித்து விடலாம்.

  • எஸ்.பி.ஐ கதிரடிக்கும் கருவி (அ) பல பயிர் கதிரடிக்கும் கருவியை பயன்படுத்தி கதிரடிக்கப்படுகிறது. உருளையில் உள்ள பற்கள் கதிரில் உள்ள பெரும்பகுதியான மணிகளை பிரித்துவிடுகிறது. பிறகு இயந்திரத்தின் பார் மற்றும் உட்குழியில் விழும் போது எஞ்சிய கதிர் மணிகள் பிரிகின்றது.

மேலே செல்க

துற்றுதல்


  • கதிரடித்த மணிகளில் இருந்து தேவையற்ற துாசுகள் மற்றும் பிற தானியங்கள் போன்ற கழிவுகளை அகற்றி, சேமித்து, பதப்படுத்த தானியங்களை தயார் செய்வதே துாற்றுவதாகும். உற்பத்தி முறைகள், அறுவடை, கதிரடித்தல், கையாளும் முறைகள், ஆகியவற்றைப் பொறுத்து, ராகி கதிர் மணிகளில் பிற பயிர் விதைகள், களை விதைகள், குச்சி கோல்கள், பதர், கதிர் காம்புகள், நிரம்பாத முதிர்ச்சியடையாத பாதிக்கப்பட்ட மணிகள் இருக்கும்s.

  • கதிரடித்த பின் கதிர் மணிகளை, பெண் வேலையாட்களை கொண்டு, காற்று அடிக்கும் திசைக்கு எதிராகத் துாற்றி பதர் மற்றும் கனமில்லாத துாசுகளை பிரித்துவிடலாம்.

  • தானியம் துாற்றும் கருவி மூலமும் தானியங்கள் துாற்றப்படுகிறது. இக்கருவி கதிரடித்த மணிகளை துாற்றி சுத்தம் செய்கிறது. இதில் தானியம் உட்செலுத்தும் பகுதி, தானியங்களை சுத்தம் செய்வதற்காக தக்க வைத்துக் கொள்கிறது. இதில் ஸ்கேல்பர் மேல் தானியங்ளை கொட்டும் பொழுது, அடியில் இருந்து புளோயர் மூலம் காற்று செலுத்தப்பட்டு கோல், பதர் மற்றும் பிற பெரிய துாசுகள் அகற்றப்படுகிறது. துாசு, பதர் மற்றும் கோல்கள் தனியாகவும், சுத்தமான கதிர் மணிகள் தனியாகவும், அடியில் உள்ள வெளியேற்றக் குழாய்கள் வழியே வந்துவிடு.

  • சுத்தமான, துாய்மையான மணிகளை, கோணிப்பைகள் அல்லது அடைப்பான்களில் போட்டு சேகரித்துக் கொள்ளலாம்.

மேலே செல்க

தரம்பிரித்தல்


  • விதை அளவு கொண்டு தரம்பிரிப்பதன் மூலம் நல்ல திடமான, செயலாக்கத் தரமுடைய விதைகளைப் பெறமுடியும்

  • இதனால் தானியத்தின் தரத்தைப் பொறுத்து, உற்பத்தியாளர்களுக்கு அதிகப்படியான விதைமதிப்பு கிடைக்கிறது.

  • மேலும், நல்ல தரமான தானியங்களை வாங்கும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து தக்க வைத்து கொள்ளலாம்.

  • சுத்தம் செய்யப்பட்ட ராகி விதைகள் பிரிட்டிஸ் ஸ்டேன்டர்ட் சீவ் - பி.எஸ்எஸ் 10 x 10 (2.4 மி.மீ அகலம்) ஸ்கேல்பர் மற்றும் பிஎஸ்எஸ் 12 x 12 (2.0 மி.மீ துளைகள்) தரம்பிரிப்பானில் செலுத்தப்பட்டு தரம் பிரிக்கப்படுகிறது. தரம் பிரிப்பதில் 10-15 சதவீத அளவுக்கு இழப்பு வருகிறது.

  • தரம் பிரித்த விதைகள் நல்ல இறுக்கமாக மூடப்பட்ட பெட்டிகள் (அ) கோணிப்பைகளில் சேமிக்கப்படுகிறது

மேலே செல்க

ராகி விதைகளை சேமித்தல்


  • ராகி விதைகள்/தானியங்களுக்கு நல்ல சேமிப்பு குணங்கள் இருந்து சேமித்து வைத்தால், அதன் அளவும் தரமும் கூடுகிறது.

  • 50 வருடங்களுக்கு விதைகளை எந்த வித பாதிப்பில்லாமல் சேமித்துக் கொள்ளலாம். பஞ்சம் ஏற்படும் காலங்களில் இது ஒரு நல்ல மதிப்புள்ள உணவுப் பொருளாகப் பயன்படுகிறது.

  • பிற தானியங்களை விட சேமிப்பின் போது அதிகமான முளைக்கும் தன்மையும், வீரியமும் கொண்டுள்ளது. வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிறைந்த பகுதிகளில் நல்ல சேமிப்பு வசதிகள் தேவை.

  • குறைவான ஈரப்பதம் உள்ள பகுதிகளில் புதிய காடா துணியில் வைத்து சிறிது காலத்திற்கு சேமிக்கலாம். நீண்ட கால சேமிப்பிற்கு, ஈரப்பதம் உள்ள பகுதிகளில் 700 காஜ் அளவுடைய பாலித்தின் பைகளில் வைத்து சேமிக்கலாம். உலோகத்திலான டின், மண் பாண்டம், கோணிப் பைகள் ஆகியவற்றில் வைத்து கேழ்வரகு விதைகளை சேமிக்கலாம்.

  • இந்தியாவில் கர்நாடகாவில், "ஹகேவு" என்ற நிலத்தடி பாட்டில் போன்ற குழிகளில், ராகி சேமிக்கப்படுகிறது. பொதுவாக ராகி விதைகள் நோய் மற்றும் பூச்சித் தாக்கத்திற்கு எதிர்ப்புத்திறன் கொண்டுள்ளது. எனினும், சேமிப்பு பைகளில் லிண்டேன் துாவி வைக்கவேண்டும்.

சேமிப்புப் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு

தானியத்திற்காக சேமிக்கும் போது

விதைகளை உலர்த்தி, 10 சதவீத ஈரப்பதத்திற்கு கொண்டு வரவேண்டும்

விதைக்காக சேமிக்கும் போது

ஒவ்வொரு 100 கிலோ விதைக்கும், 1 கிலோ செயலேற்றப்பட்ட கயோலின் (அ) மாலத்தியான் 5 சதவீத துாள் கலந்து வைக்கவேண்டும். சேமிப்பிற்கு கோணிப்பை (அ) பாலித்தின் கோனிப்பைகளை பயன்படுத்தவேண்டும். (குறிப்பு: திடமான, நோய் இல்லாத முதல் அறுவடை கதிர்களை சேகரித்து, உலர்த்தி, கையால் கசக்கி, கதிர் மணிகளை பிரிக்கவேண்டும். விதைக்காக பயன்படுத்துவதற்கு கதிர் (அ) மணிகளை பயன்படுத்தலாம்

மேலே செல்க

உமி நீக்குதல் மற்றும் மாவு ஆக்குதல்


கேழ்வரகு விதையின் சிறிய அளவு மற்றும் விதை உறை உண்ணக்கூடிய எண்டோஸ்பெர்ம் பகுதியுடன் நன்கு ஒட்டிக்கொண்டு இருப்பதால், உமி நீக்குவது கடினம். எனினும் தானியம் மென்மையாக இருப்பதால், மரபு வழியான உமி நீக்கும் வழியில் விதையின் உட்புறம் சேதமடைந்து விடுகிறது. எனவே விவசாயிகள், 30 நிமிடம் வரை கேழ்வரகை ஈரப்படுத்தி, உமியின் கடினத்தை குறைத்து, உமி நீக்கம் செய்கின்றனர். கேழ்வரகு விதைகளை ஈரப்படுத்தி, உமி நீக்கம் செய்யலாம். ஹேமர் (அ) பிளேட் மில் (அ) சுழல் மாவு மில்லில் செலுத்தி, ஆவியேற்றப்படுகிறது.

ராகியை மாவாக்கும் வழிமுறைகளை காண இங்கே "கிளிக்" செய்யவும்

உடைக்கப்பட்ட தானியங்களை தயார் செய்வதற்கான வழிமுறைகளை காண இங்கே "கிளிக்" செய்யவும்

இயந்திரம் மூலம் உமி நீக்குதல்

  • கோதுமை, நெல் மற்றும் மக்காச்சோளம் போன்ற முதன்மை தானியங்களில் பெருமளவில் உமி நீக்கம் செய்யப்படுகிறது. ஆனால், ராகியை வணிக ரீதியாக பதப்படுத்தப்படுவதன் முதல்நிலை பற்றி யாருக்கும் அவ்வளவாக தெரிவதில்லை.

  • ராகி விதையில் இருந்து உமி நீக்குவதற்கான இயந்திரம் என்று தனியாக எதுவும் இல்லை. ஆர்வமின்மை மற்றும் தானியத்தை மில்லில் போட்டு உமி நீக்குவது கடினம் என்பதாலும் இயந்திரம் ஏதும் இல்லை.

  • பெரும்பாலும், ராகி தானியம் அப்படியே உண்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ராகி விதைக்கருவில் உள்ள எண்ணெய் சிறிது காலம் வரை மட்டுமே இருக்கும் என்பதால், அதற்கு வணிகப் பயன்பாடு அவ்வளவாக இல்லை.

  • உமி நீக்குவதற்கான இயந்திரமான சிறிய தானிய மில்லை தற்பொழுது தான் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய தானிய மில் தண்ணீர் கலப்பான், பிளேட் கிரைண்டர், மற்றும் பிற ஷிப்டர் இணைப்புக்களைக் கொண்டுள்ளது.

  • இந்த தனித்தன்மையான இயந்திரத்தில் ஒரே நேரத்தில் உமிநீக்கம் செய்யப்பட்டு மாவாக்கப்படுகிறது. இதில் மாவு வெள்ளையாக உள்ளது. கோதுமை, மக்காச்சோளம், சோளம் மற்றும் கம்பு போன்ற தானியங்களை பதப்படுத்தவும் இது உபயோகப்படுத்தப்படுகிறது. அரைக்கும் பிளேட்டுகளுக்கு இடையில் உள்ள பகுதியைக் குறைத்து ராகியிலும் உமி நீக்கம் செய்யலாம்.

மேலே செல்க

முளைக்கட்டி உலர்த்தி மாவு ஆக்குதல்


பிற தானியங்களுடன் ஒப்பிடும் போது ராகியை முளைக்கட்டி, உலர்த்தி மாவு ஆக்கி, "மால்ட்" தயார் செய்வதற்கு ஏற்ற நல்ல தரத்துடனும், நொதிகளுடனும் உள்ளது. ராகி மால்ட் மாவுடன் முளைத்த பச்சை பயறு மாவைக் கலந்து, பால் குடிக்கும் குழந்தைகளுக்கான சத்துள்ள இதர உணவாகப் பயன்படுத்தலாம். ராகி மாவை பாலில் கலந்தும் குடிக்கலாம்.

ராகியை புழுங்க வைப்பதால் நல்ல தரமான பதம் கிடைக்கிறது. வறுத்த ராகி மாவு நல்ல மணமுடன் இருப்பதால் திண்பன்டங்கள் தயாரிக்கவும், பிற இதர உணவுகள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். தென்னிந்தியாவில் ராகி கூழ், ரொட்டி, தோசை மற்றும் கஞ்சி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

மேலே செல்க

ராகிப் பொருட்கள்


ராகியின் ஊட்டச்சத்து


அரிசி மற்றும் பிற தானியங்களை விட ராகியில் அதிக ஊட்டச்சத்து உள்ளது. மாவுச் சத்து உணவுகளான மரவள்ளி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றை உட்கொள்ளும் ஏழை மக்களிடையே உள்ள மித்தியோனைன் அமினோ அமிலக் குறைபாட்டை சரிசெய்யக் கூடிய உணவு ராகி எனலாம்.

ராகி தானியத்தில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மற்ற பிற தானியங்களை விட ராகியில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. புரோளமின் மற்றும் குளுட்டின் ராகிப் புரதத்தில் அதிகம் உள்ளன. பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பாலுடன் சேர்த்து கொடுக்கக் கூடிய உணவு தயாரிக்க முளைக்கட்டிய ராகி பயன்படுகிறது.

ராகி தானியத்தின் ஊட்டச்சத்து அளவு (100 கிராமிற்கு)

சத்து கிராம்

புரதம்

7.30

கொழுப்புச் சத்து

1.30

மாவுச் சத்து

72.00

தாது உப்புக்கள்

2.70

சுண்ணாம்பு சத்து (கால்சியம்)

3.44

பாஸ்பரஸ்

2.83

நார்ச்சத்து

3.66

சாம்பல்

2.60

ஈரப்பதம்

13.2

சக்தி

328 கிலோ கேலாரி

இரும்புச் சத்து

4 மில்லி கிராம்

பீட்டா கரோடின்

4 (மைக்ரோகிராம்/100 கிராம்)

மேலே செல்க

பயன்கள்


  • ராகியில் மற்ற தானியங்களைவிட அதிகமான சுண்ணாம்புச்சத்தும் இரும்புச் சத்தும் உள்ளது. எனவே, கால்சியம் சத்து அவசியமாகத் தேவைப்படும் வளரும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ராகி உணவு வகைகளை கொடுக்கலாம்.

  • கூழ்/கஞ்சி:சிறிய, பழுப்பு மற்றும் வெள்ளை நிற தானியங்களை காய்ச்சி கூழ் தயாரிக்கப்படுகிறது.

  • ரொட்டி:ராகி மாவை அரைத்து ரொட்டி, பிரெட் மற்றும் பிற பதார்த்தங்கள் செய்ய பயன்படுத்தலாம். இதன் சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.

  • மால்ட்:முளைக்கட்டிய ராகிப் பொடி உணவாக பயன்படுத்தப்படுகிறது. சத்துமிக்க, எளிதில் ஜீரணமாக கூடிய ராகி மால்டை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு கொடுக்கலாம்.

  • பானங்கள்:ஆப்ரிக்காவில் பீர் தயாரிக்க ராகி பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைலேஸ் நொதி, எளிதாக மாவைச் சர்க்கரையாக மாற்றுகிறது. சோளம் மற்றும் மக்காச்சோளத்தைவிட, "சேக்கரிபையிங்" சக்தி இதில் அதிகம் உள்ளது. உலகத்தின் முதன்மை பீர் தானியம் பார்லி மட்டும், இதைவிட அதிகம் பெற்றுள்ளது.

  • தீவனம்:ராகி வைகோல் நல்ல தீவனம் ஆகும். கம்பு, கோதுமை மற்றும் சோளத்தைவிட நல்ல தீவனம் ஆகும். இதில் 61% எளிதில் ஜீரணிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன.

  • பொறித்த பொருட்கள்:ராகியில் பொறித்த பொருட்கள் தயாரிக்கலாம். இந்திய மக்கள் இதன் சுவையை அதிகம் விரும்புகிறார்கள்.

  • மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு இலைச் சாறு கொடுக்கப்படுகிறது.

  • தொழு நோய், கல்லீரல் நோய், அம்மை, நிமோனியா, பெரிய அம்மை நோயாளிகளுக்கு கிராம மக்கள் ராகி உணவுகளை கொடுக்கின்றனர்.

  • உடல் எடை பற்றி அக்கறை உள்ளவர்கள் ராகி உணவு வகைகளை பயன்படுத்தலாம். உணவு உட்கொள்ளும் ஆசையைக் குறைத்து அன்றாடம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்கிறது.

மேலே செல்க

ராகிப் பொருட்கள்


மேலே செல்க

முறுக்கி பிழிந்த பொருட்கள்


மேலே செல்க

பயன்படுத்த தயாரான ரெடிமேட் மிக்ஸ்


மேலே செல்க

அருஞ்சுவை உணவுப் பொருட்கள்


மேலே செல்க

இனிப்பு மற்றும் காரப் பலகாரங்கள்


மேலே செல்க

ஊட்டச்சத்து பானங்கள்


மேலே செல்க


முறுக்கி பிழியப்பட்ட பொருட்கள்


கேழ்வரகு நுாடுல்ஸ்

உணவு பொருள் பதப்படுத்தும் துறையில் குறைந்த செலவு மற்றும் தொடர்ச்சியாக பதப்படுத்தும் திறனாலும், முறுக்கிப் பிழிந்த உணவுகளை உண்ணும் பழக்கவழக்கம் தற்போதைய வருடங்களில் பெருகி வருகிறது.

தேவையான பொருட்கள்

  • சுத்தமான கோதுமை மாவு – 70 கிராம்

  • கேழ்வரகு – 30 கிராம்

  • தண்ணீர் – 30 மில்லி

  • உப்பு – 2 கிராம்

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


கேழ்வரகு சேமியா

தேவையான பொருட்கள்

  • சுத்தம் செய்யப்பட்ட கோதுமை மாவு – 30 கிராம்

  • முழு கோதுமை மாவு – 40 கிராம்

  • கேழ்வரகு மாவு – 30 கிராம்

  • தண்ணீர் – 30 மில்லி

  • உப்பு – 2 கிராம்

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


கேழ்வரகு இடியாப்பம்

தேவையானப் பொருட்கள்

  • அரிசி மாவு – 80 கிராம்

  • கேழ்வரகு – 30 கிராம்

  • தண்ணீர் – 30 மில்லி

  • உப்பு – 2 கிராம்

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


பயன்படுத்த தயாரான ரெடிமேட் மிக்ஸ்


கேழ்வரகு பானக் கலவை

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு மாவு

  • பால் பவுடர்

  • வெல்லம்

தயாரிக்கும் முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


கேழ்வரகு ஊட்டச்சத்து மிக்ஸ்

தேவையான பொருட்கள்

  • கேழ்வரகு

  • வாழைப்பழம் மற்றும் உருளைக் கிழங்கு பொடி

  • கருவேற்பிலை

  • முந்திரி

  • எள்ளு விதைகள்

  • ஏலக்காய்

  • பால் பவுடர்

  • சர்க்கரை

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


அருஞ்சுவை உணவுப் பொருட்கள்


ராகி புட்டு

  • ராகி மாவு – 2 கப்

  • சர்க்கரை – அரை கப் (தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்)

  • தேங்காய்– அரை மூடி

  • கருப்பு எள்ளு விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் – 4

  • நல்லெண்ணெய்/நெய் – 2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு – 1 சிட்டிகை

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி மட்டி

இது கர்நாடக மாநிலத்தின் கிராம மக்கள் பயன்படுத்தும் உணவு வகை ஆகும்.

முறை I

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

முறை II

தேவையான பொருட்கள்

  • 1 கப் ராகி மாவு

  • கைப்பிடியளவு அரிசி

  • 1/4 டீஸ்பூன் உப்பு

  • 4 கப் தண்ணீர்

  • 1 டீஸ்பூன் நெய்

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி இட்லி

தேவையான பொருட்கள்

  • முழு ராகி தானியம்- 1 கப்

  • இட்லி அரிசி (புழுங்கல்)– 1 கப்

  • முழு உளுத்தம் பருப்பு – ¾ கப்

  • வெந்தயம் -1 ஸ்பூன்

  • உப்பு தேவைக்கேற்ப

  • எண்ணெய்- இட்லி தட்டில் தடவுவதற்கு

செய்முறை

படி 1: ராகியை 2-5 முறை நன்றாகக் கழுவி அரிசியை விட 3-4 மணி நேரம் அதிகமாக ஊற வைக்கவும்..

படி 2 : மற்றொரு பாத்திரத்தில் அரிசி, முழு உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை 4-6 மணி நேரத்திற்கோ (அ) இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

படி 3 : கிரைண்டரில் உளுந்தைப் போட்டு அரைக்கவும். அது மெது மெதுவென ஆனவுடன் தண்ணீரில் போட்டுப் பார்த்தால் மிதக்கும். இந்த பதம் வரை ஆட்டி கொள்ளவும்.

படி 4 : பிறகு ராகி சேர்த்து ஆட்டவும். அதன் பின் வெந்தயம் போடவும். கடைசியாக அரிசி போடவும். ரொம்பவும் அரிசியை ஆட்டிவிடாமல் ரவை பதத்திற்கு ஆட்டவும். இல்லையெனில், அரிசி ரவையைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

படி 5 : மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு போட்டு, புளிக்க வைக்கவும். புளித்த மாவை அடுத்த நாள் காலையில் கலக்கிவிட்டு இட்லி தட்டில் எண்ணெய் தடவி, ஆவியில் வேக வைக்கவும்.


மேலே செல்க


ராகி தோசை

கேழ்வரகு அல்லது ராகி தோசை கொங்கு மண்டலத்தின் சிறந்த உணவு பொருளாகும். கோயமுத்தூர், நீலகிரி, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி பகுதி வரை உள்ள கொங்கு மண்டலத்தில் ராகி தோசை பிரபலமான ஒன்று.

தேவைப்படும் பொருட்கள்

  • ராகி மாவு – 2 கப்

  • துருவிய தேங்காய் – 1 கப்

  • உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

  • கொத்தமல்லி தழை – சிறிதளவு

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • பச்சை மிளகாய் – 4

  • சீரகம்– 1 டேபிள் ஸ்பூன்

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

  • தண்ணீர்–4 ½ கப்

செய்முறை

படி 1: ராகி மாவை சுடுநீரில் 15 – 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்

படி 2: தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, சீரகம் மற்றும் உப்பு சேர்த்து கலவையாக்கவும்

படி 3: இந்த கலவையுடன் ராகி மாவை கலக்கவும். நீர் சேர்த்து ரவா தோசை பதத்திற்கு கரைக்கவும்

படி4: தவாவை அடுப்பில் வைத்து 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 30 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும். கரைத்த வைத்த மாவை ஊற்றி அதிக சூட்டில் வேக வைக்கவும். பின் திருப்பி போட்டு வேக வைக்கவும். சூட்டை தணித்து ஒரு நிமிடத்திற்கு வைத்திருக்கவும். வேக வைத்த தோசையை தட்டில் வைத்து பரிமாறவும்.

படி 5: மீதமுள்ள மாவையும் இதே போல் செய்யவும்

மேலே செல்க


ராகி குடுமுலு

ராகி குடுமுலு ஆந்திர மக்களின் பழமை வாய்ந்த பதார்த்தமாகும். இதனை ஆவியில் வேக வைத்த ராகி மாவு மற்றும் குருமா கொண்டு தயார் செய்கிறார்கள். ராகி குடுமுலுவில் சேர்க்கப்படும் பொருட்கள் பருவத்திற்கு ஏற்ப மாறுபடும். சில நேரங்களில் காய்கறிகள், சில நேரங்களில் மாமிசக்கறி, சில நேரங்களில் கலந்து ராகி குடுமுலு தயாரிக்கப்படுகிறது. சமைப்பவரின் மனநிலை மற்றும் அன்றைய சந்தை விலை நிலவரத்தை பொறுத்து மாறும். இது விவசாய சமூக மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. ராகி புரதச்சத்து மிகுந்த, தசைகள் மற்றும் எலும்புகளுக்கு ஊட்டமளிக்கக் கூடிய உணவாகும்.

பதார்த்தம் செய்யும் முறை:
3 படிகளில் ராகி குடுமுலு தயாரிக்கப்படுகிறது.

  • குடுமுலுக்கான மாவை பிசைந்து தயார் செய்தல்.

  • குருமா தயார் செய்தல்.

  • குடுமுலு தயார் செய்து ஆவியில் சமைத்தல்

படி 1:
ஒரு கப் ராகி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு டீஸ்பூன் உப்பு மற்றும் 1/4 டேபிள் ஸ்பூன் பூண்டு-நெய் சேர்க்கவும். நன்றாக சேர்த்து கலக்கிவிடவும். சிறிதளவு சுடுதண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும். பிறகு 15-30 நிமிடத்திற்கு பிசைந்த மாவை மூடி வைக்கவும். மாவு நன்றாக இறுக்கமாகி விடும்.

படி 2:

  • மாவு இறுகும் நேரத்தில் குருமா தயார் செய்யவும். காய்கறிகள் கொண்டு குருமா வைக்கலாம்.

  • காய்கறிகள் : பெரிய பீன்ஸ், பீர்கங்காய், மற்றும் சீமைப் பூசணி) ½ இஞ்ச் அளவில் பீர்கங்காய் : தோல் சீவி வெட்டவும்

  • 2 தக்காளி, ஒரு வெங்காயம் - சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
    குறிப்பு: குடுமுலுவை, காய்கறி அல்லது மாமிசக் கறி (கோழி (அ) ஆட்டுக்கறி) கொண்டு தயார் செய்யலாம்..

  • ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு நெய்யை அகன்ற வாணலியில் போட்டு சூடேற்றவும், சிறிதளவு சீரகம் மற்றும் கடுகு போட்டு வறுக்கவும். கடுகு பொறிந்தவுடன், வெங்காயம் போட்டு வதக்கி எடுக்கவும். 1 கப் தண்ணீர் விட்டு தக்காளி மசியும் வரை சூடேற்றவும்

  • தக்காளி வேகும் சமயத்தில் குர்ரா மசாலா தயார் செய்யவும்: 2 டேபிள் ஸ்பூன் தேங்காய், 4 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்ச், 2 கிராம்பு, 1 இஞ்ச் பட்டை, கொத்தமல்லி மற்றும் சீரகம் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து சிறிது உப்பு போட்டு மிக்சியில் பொடி ஆக்கி கொள்ளவும்.

  • தக்காளி வெந்தவுடன் கரண்டி வைத்து மசித்து விடவும். பிறகு, பீர்க்கங்காய் மற்றும் மசாலா சேர்க்கவும். 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் துாள் மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர்விட்டு கலக்கிவிடவும். மூடி வைத்து மிதமான சூட்டில் வைக்கவும். 

படி 3:

  • குருமா வேகும் போது ராகி குடுமுலுவை தயார் செய்யவும்.

  • பிசைந்து வைத்துள்ள ராகி மாவை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.  எலுமிச்சம்பழம் அளவிற்கு உருண்டை பிடிக்கவும்.  பிறகு உள்ளங்கையில் வைத்து விரல்களை மூடி பிடிக்கவும். உருண்டை வடிவத்தை விட குடுமு  வடிவம், மாவு பிடிக்க ஏதுவாக இருக்கும்.  இதே போல் எல்லா உருண்டைகளையும் குடுமு பிடித்துக் கொள்ளவும்.  2-3 நிமிடத்திற்குள் முடித்துவிடவும்

  • இதனை குராவில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து மூடி வைக்கவும்.  10-20 நிமிடத்திற்கு மிதமான இளம் சூட்டில், சூடேற்றி 10-20 நிமிடம் வைக்கவும்.  ராகி குடுமுலுவை நன்றாக வேக வைக்கவும்.  வெந்ததை அறிவதற்கு ஒன்றை எடுத்து இரண்டாக வெட்டவும்.    நன்றாக ஆவிபட்டு வெந்த குடுமுலு செம்மண் போன்று இருக்கும்.  (சுவைத்தால், நன்கு மென்ற பபுள் கம், (சுவிங்க மிட்டாய்) போன்ற பதத்தில் இருக்கும்.

  • கொத்துமல்லி இலை மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு அலங்கரித்து, சூடாக பரிமாறவும்.  பரிமாறும் வரை மூடியை இறுக்கமாக மூடி சூடாகவோ, இளம் சூடாகவோ வைக்கவும். ராகி குடுமுலுவை காய்கறி/கறியுடன் ஒரு தட்டில் வைக்கவும்.  அதனைச் சுற்றி தக்காளி மசாலாவை ஊற்றவும்.

மேலே செல்க


ராகி ரொட்டி

தேவைப்படும் பொருட்கள்

  • ராகி மாவு – 1 கப்

  • வெங்காயம் - ½

  • பச்சை மிளகாய் – 2 (அ) 3

  • பூண்டு – 3

  • சீரகம் – 1 ஸ்பூன்

  • கறிவேப்பிலை – சிறிதளவு

  • உப்பு – சுவைக்கேற்ப

  • தண்ணீர் - ½ - ¾ கப்

  • எண்ணெய் – சிறிதளவு

செய்முறை

  1. வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கொத்தமல்லி தழையை நறுக்கி வைத்து கொள்ளவும்

  2. ராகி மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்

  3. அனைத்து பொருட்களையும் ( வெங்காயம், பச்சை மிளகாய்,  பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை மற்றும் உப்பு) சேர்த்து கலக்கவும்.

  4. தவாவை சிறிது எண்ணெய் விட்டு சூடுபடுத்தவும்.

  5. சூடானவுடன் மாவை இட்டு ரொட்டி போல் தட்டவும். சூட்டை தணித்து கொள்ளவும்

  6. எண்ணெய் விட்டு இரு புறமும் திருப்பி போட்டு வேகவைக்கவும்

மேலே செல்க


ராகி அடை

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு                        -  2 கப்

  • பெரிய வெங்காயம்                   -  1

  • வரமிளகாய்                           -  3-4

  • சீரகம்                                  - 1 டேபிள் ஸ்பூன்

  • நிலக்கடலை                           - 2 டேபிள் ஸ்பூன் (பொடி செய்தது)

  • கடுகு                                - 1 டீஸ்பூன்

  • உளுந்து                               -  1 டீஸ்பூன்

  • பெருங்காயம்                         -  ஒரு சிட்டிகை

  • வறுப்பதற்கு எண்ணெய்

  • உப்பு                                  -  1 டீஸ்பூன்

  • கருவேற்பிலை                      - சிறிதளவு

செய்முறை

  1. பெரிய பாத்திரத்தில், ராகி மாவைப் போடவும்.  உப்பு, நறுக்கிய வெங்காயம், சிறிய துண்டுகளாக கிள்ளிய மிளகாய், சீரகம், நிலக்கடலை, (பொடி செய்த) ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.

  2. ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.  அது சூடேறியவுடன் கடுகு போட்டு, பொறிந்தவுடன், உளுந்து போடவும்.  பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

  3. பெருங்காயத்தையும், கருவேற்பிலையையும் சேர்க்கவும்.  அதனை மாவில் போட்டு கலக்கவும்.

  4. சிறிதளவு தண்ணீர் விட்டு மாவு போல் பிசைந்து கொள்ளவும்.  (அடை மாவை விட கெட்டியாகவும், சப்பாத்தி மாவை விட லேசாகவும் இருக்க வேண்டும்)

  5. வாணலியை சூடேற்றி எண்ணெய் விடவும்.  அடுப்பை மிதமாக வைத்துக் கொள்ளவும்.

  6. ஆரஞ்சு அளவிற்கு மாவை எடுத்து, வாணலியில் போடவம்.

  7. கையை நனைத்துக் கொண்டு, மாவை அழுத்திவிட்டு வட்டமாகப் பரப்பவும்.

  8. எல்லா ஓரத்திலும் 1 டீஸ்பூன் எண்ணெய் விடவும்.  நிறம் மாறும் வரை மிதமான சூட்டில் வைத்து சமைக்கவும்.  பிறகு திருப்பி போடவும்.  இரு பக்கத்திலும் நன்றாக வேக வைக்கவும்.

மேலே செல்க


இனிப்பு மற்றும் காரப் பலகாரங்கள்


Ragi Halwa or Ragi Manni

Ingredients

  • Ragi flour – 100g

  • Powdered sugar – 100g

  • Ghee – 100g

  • Cardamom powder – 1 pinch

  • Cashew nuts – 10g

Method of preparation

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க

ராகி பக்கோடா


தேவையான பொருட்கள்

  • ராகி மாவு   -  1 கப்

  • வெங்காயம்         -  1

  • பூண்டு                 - 3 துண்டு

  • சீரகம்                  - 1 ஸ்பூன்

  • மிளகாய் பொடி   -   1/2  ஸ்பூன்

  • உப்பு                   -  தேவைக்கேற்ப

  • எண்ணெய்           -  1/2 - 1 கப் (பொறித்தெடுப்பதற்கு

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி பிஸ்கெட்

தேவையான பொருட்கள்

  • 2 கப் ராகி மாவு

  • 1 கப் பொடி செய்த சர்க்கரை

  • 1 கப் வெண்ணெய்

  • 1/2  டீஸ்பூன் ஏலக்காய் பொடி

  • 1 டீஸ்பூன் பேகிங் பெளடர்

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி முறுக்கு

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு                        -  1 கப்

  • கடலை மாவு                           -  1 கப்

  • அரிசி மாவு                             -  1/4  கப்

  • சீரகம்                                    - 1 டேபிள் ஸ்பூன்

  • மிளகுப்பொடி, மிளகாய்பொடி உப்பு  - தேவைக்கேற்ப

  • எண்ணெய்                              -  பொறித்து எடுக்கும் அளவு

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி வடை

தேவையான பொருட்கள்

  •     ராகி மாவு     -  2 கப்

  •     கருவேற்பிலை      -  1 கொத்து

  •     வெங்காயம்           -  1 பெரியது, பொடியாக நறுக்கவும்

  •     காய்ந்த மிளகாய்    -   3

  •     இஞ்சி                   -  1 துண்டு

  •     சீரகம்                   -  1 டேபிள் ஸ்பூன்

  •     நிலக்கடலை         -  ½ கப்

  •     எண்ணெய்            -  பொறிக்கும் அளவு

  •     உப்பு                     -  தேவைக்கேற்ப

  •     பொறித்த மிளகாய்  -  சுவைக்கேற்ப

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி கேக் (முட்டையில்லாதது)

இந்த பதார்த்தம் திண்பண்டங்களின் சத்து அளவை அதிகரிக்கிறது. ராகி கேக், இதமாகவும், சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரிபைன்ட் மாவு

  • 1/2  கப் ராகி மாவு

  • 1/2 கப் சர்க்கரை

  • 1 டீஸ்பூன் பேக்கிங் பெளடர்

  • 1/2  டீஸ்பூன் சோடா

  • 5 டீஸ்பூன் தயிர்

  • 1/4  கப் எண்ணெய்

  • 1 சிட்டிகை உப்பு

  • 1 டீஸ்பூன் பட்டை பவுடர்

  • 3-4 டீஸ்பூன் சாக்லேட் சிரப்

  • தேவைப்பட்ட பருப்பு

செய்முறை

படி 1: இரண்டு மாவையும் சேர்த்து, பேக்கிங் தூள், பேக்கிங்  சோடா, உப்பு மற்றும் பட்டை கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் எண்ணெய் எடுத்து நன்றாக கலக்கவும். 
படி 2: தயிர் மற்றும் சாக்லேட் சிரப் ஊற்றி லேசாக கலக்கவும்.  தேவையான பருப்பு வகைகளை சேர்க்கவும்
படி 3: இந்த திரவ கரைசலை உலர்ந்த கலவையில் ஊற்றி, கையால் 7-8 நிமிடம் கலக்கவும்.  சூடேற்றும் டின்னில் மாவை ஊற்றவும்.  சிறிது சர்க்கரையை மாவின் மேல் துாவி விடவும்.
படி 4: இந்த கேக்கிற்கு ஜெல்லி தடவி, பேக்கிங் டின்னை பசையாக்கி கொள்ளவும்.  பேக்கிங் பாத்திரத்தை சூட்டடுப்பில் வைத்து, 180° சி க்கு சூடேற்றவும்.  பிறகு பேக்கிங் பாத்திரத்தை கவனமாக வெளியே எடுத்து, கேக் மாவை ஊற்றவும்.
படி 5: ராகி கேக்கை 30 நிமிடம், 180° சி இல் சுட்டெடுக்கவும்.  சூட்டடுப்பில் இருந்து வெளியே எடுத்து, கத்தி/பல் குத்தியால் குத்தி பார்க்கவும்.  கத்தி சுத்தமாக வெளியே வந்தால் நன்றாக சூடேறி வெந்துவிட்டது என்று அர்த்தம்.  கேக்கை வெளியே 10-15 நிமிடம் வைத்து பிறகு துண்டு துண்டாக வெட்டவும்.

மேலே செல்க


ராகி லட்டு

தேவையான பொருட்கள் (8-10 லட்டு)

  • 1 கப் ராகி மாவு

  • 1/2   டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்

  • 1/2  டேபிள் ஸ்பூன் உருக்கிய நெய்

  • 3 பால்/கிரீம்

  • 1 கப் பொடி செய்த சர்க்கரை

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ஊட்டச்சத்து பானங்கள்


ராகி மால்ட்

ராகி மால்ட், ஏழை மக்களின் ஊட்டச்சத்து பானம் ஆகும். இது எளிதில் கிடைக்கக் கூடியதாவும், குறைந்த விலையுள்ளதாகவும், ஊட்டச்சத்து மிக்கதாகவும், வயிற்றை நிரப்பக் கூடியதாகவும் உள்ளது.

தேவையான பொருட்கள்: 2 கப்

  • 1 டேபிள் ஸ்பூன் ராகி மாவு

  • 1 கிளாஸ் தண்ணீர்/பால்

  • 2 டீஸ்பூன் சர்க்கரை (அ) பொடியாக்கிய வெல்லம்

  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்ப் பொடி

தயாரிக்கும் முறை

படி 1: 1 கப் ராகி மாவு எடுத்துக் கொள்ளவும்.  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். நன்றாக  கட்டியில்லாமல் கலக்கிவிட்டு, பேஸ்ட் ஆக்கவும். மாவை  நேரடியாக கொதிக்கும் போது போடக்கூடாது.  அப்படி செய்தால் கட்டியாகிவிடும்.
படி 2:  ஒரு பாத்திரத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் (அ) பால் எடுத்துக் கொள்ளவும்.  தனியாக பாலில் மட்டும் இந்த பானத்தை தயார் செய்யாமல்,  தண்ணீர் கலந்து கொள்ளலாம்.
படி 3: தண்ணீர் கொதிக்கும் வரை சூடேற்றவும்.  கரைத்து வைத்துள்ள ராகி மாவை கொதிக்கும் தண்ணீர்/பாலில் கலக்கவும்.  கொதிக்கும் முன் மாவை சேர்த்தால் மாவு தனியாக பிரிந்துவிடும்.  குடிப்பதற்கு நன்றாக இருக்காது.  எனவே, தண்ணீர் கொதித்தவுடன் கலக்கவும்.  நல்ல சுவையான ராகி மால்ட் தயார் செய்வதற்கு, இந்த கொதி தண்ணீரில் மாவு கலக்கும் தருணம் அவசியம்.
படி4:  சுவைக்கேற்ப சர்க்கரை (அ) வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்க்கவும்
 படி 5: அடுப்பை மிதமான சூட்டில், சிம்மில் 5 நிமிடம் வைத்து கலக்கி விடவும்.  அடுப்பை நிறுத்தவும்.  சிறிது நேரம் குளிர வைத்து, டம்ளர் (அ) கப்பில் ஊற்றி பரிமாறவும்.

மேலே செல்க


முளைத்த ராகி கூழ்

முளைத்த ராகி கூழ் குழந்தைகளுக்கான ஒரு சத்தான கூழ் ஆகும்.

தேவையான பொருட்கள்

  • ராகி         -  1 கப்

  • கோதுமை தானியம்- 1 கப்

  • பச்சைப் பயறு      - 1 கப்

  • பாதாம்    - 2-3

  • 1 சிட்டிகை ஏலக்காய் பொடி

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி சூப் (ராகி கஞ்சி)

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு        - 2 ஸ்பூன்

  • தண்ணீர்                   -  2 கப்

  • தயிர்                       -  1/2  கப்

  • உப்பு                        - தேவைக்கேற்ப

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க


ராகி மோர்க் கூழ்

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு               - 100 கிராம்

  • மோர் மிளகாய்                -  2

  • புளித்த மோர்                   - 200 மில்லி

  • கடுகு                          - 1/2 டீஸ்பூன்-

  • உப்பு                           - தேவைக்கேற்ப

  • எண்ணெய்                   -  தேவைக்கேற்ப

செய்முறை

செயல்வழிப் படம் காண இங்கே "கிளிக்" செய்யவும்"

மேலே செல்க

காட்சியகம்