மீன் வளம் :: மிதமான மீன் பிடிப்பு வலைகள்
மிதமான மீன் பிடிப்பு வலைகள்
செவுள் (அ) பொருத்தப்பட்ட வலைகள்

செவுள் வலை என்பது வலையை கடல் அடிமட்டம் வரை அல்லது கடல் மத்தியில் விரித்துவிடுவார்கள். அதில் மீன்கள் மாட்டிக் கொள்ளும். இது ஒரு பலமையான மீன்பிடிப்பு முறையாகும். வலைகளில் மாட்டிய மீன்கள் வெளியே செல்ல முயற்சிக்கும். பெரிய வகை மீன்கள் செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும். மீன் இனம் மற்றும் மீன் அளவுக்கு ஏற்றது போல் வலை விரிக்க வேண்டும்.
மா பாச்சு வலை

இவ்வகை வலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. வெளி மற்றும் உற்பகுதியை சாதாரண கண்ணி மூலம் ஆனது. ஆனால் நடுபகுதியை உயர்ந்த கண்ணியால் பொருத்தப்பட்டுள்ளது. வலையை செங்குத்தாக மிதக்கும் படி தொங்கவிடும் போது மீன்கள் மாட்டிக்கொள்ளும்.

சிக்கவைக்கும்
வலை

இந்த வலை செவுள் வலையை போன்றது. ஆனால் பிரிந்திருக்கும். சிறிய அளவு மற்றும் குறைவாக மிதக்கும். இதில் செவுள் வலையை விட நிறைய மீன்களை பிடிக்கலாம்.

ஆயிரங்கால
தூண்டில்

இது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களை பிடிக்கலாம், பெரிய வகை தூண்டில் (50-100 கி.மி). இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டு பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இன கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக்கொள்ளும்.

கழிதூண்டில்
மீன்பிடிப்பு

கழிதூண்டில் மூலம் ஒரே இன மேற்பரப்பில் உள்ள மீன்களை பிடிக்கலாம். சூரை மீன்களை பிடிக்க இந்த தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்த தூண்டிலில் இறையை பயன்படுத்தி படகுக்கு பக்கததில் உள்ள மீன்களை கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை மூலமாக மீன்களை பிடிக்கலாம்.

போலி
இரை மீன்பிடிப்பு

கணவாய் மீன்களை பிடிக்க போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதை தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களை பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும் போது மாட்டிக்கொள்ளும். ஒளி ஈர்ப்பு மூலம் எப்பொழுதும் இரவில் போலி இரை மீன்பிடிப்பை பயன்படுத்துவார்கள்.

 

பொறி
மீன்பிடி பொறி

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசிவிடுவார்கள். மாட்டிய மீன்களை வலையிலிருந்து தப்பி செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேலையில் பெரிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்த பொறி மூலம் பிடிக்கலாம்.
வலைக்கு ஏற்றவாரு பொறியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத (அ) குறைந்த இடைகொண்ட மீன்களை திரும்ப கடலிலேயே விட்டுவிடுவரர்கள். இந்த பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகள் மாட்டிக்கொள்ளும்.


மீன்களை
கவரும் சாதனங்கள்

மீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களை சார்ந்து வாழ்கின்றது. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளது. அப்பொழுது சில சாதனங்களை பயன்படுத்தி மேலே உள்ள மீன்களை பிடிக்கலாம். மீனவர்கள் இந்த சாதனங்ளை படகுடன் இணைத்து மீன்களை கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடி பொறி, தூண்டில், இன்னும் பல.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014