வேளாண் வனவியல்  
சமூக பொருளாதார வனகட்டுபாடு

சமூக பொருளாதாரக் கொள்கைளை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி அமைவு,தொழில்நுட்ப ஈடுபாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு வேளாண் காடுகளை பின்வருமாறு மூன்று வகையில் பிரிக்கலாம்.
அ.வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்
ஆ.நடநிலையின் வேளாண் காடுகள் திட்டம்
இ.தன்னிறைவு வேளாண் காடுகள் திட்டம்

அ.வணிக ரீதியான வேளாண் காடுகள் திட்டம்:இத்திட்டத்தின் உற்பத்திப்பொருட்களை மட்டுமே எப்போதும் அளவீடாகிறது. எடுத்துக்காட்டாக
1.தென்னை, ரப்பர் மற்றும் எண்ணெய்ப் பனை முதலானவை தோப்பாக பல ஆண்டுகளுக்கு பராமரிக்கப்படுகிறது
2.நிழல் தாங்கி வளரும் காப்பி, டீ மற்றும் கோ கோ போன்றவை மரங்களின் நிழல்களில் பராமரிக்கப்படுகிறது

நடுநிலை வேளாண் காடுகள் திட்டம்:இத்திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் வளர்ப்பில் நோக்கம் தன்னிறைவை மிஞ்சுகிற வேளையில் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்கின்ற நோக்கமுடையது.

தன்னிறைவு வேளாண்காடுகள் திட்டம்:இத்தகைய வேளாண் காடுகள் திட்டப் பண்ணை உரிமையாளரின் திருப்திக்காகவும் அவருடைய குடும்பத் தேவைகள் மட்டுமே நிறைவு செய்து கொள்கின்ற கருத்துடையது.