நோய் மேலாண்மை

ஐலான்தஸ் எக்செல்சா

குடும்பம் : சைமரூபேசி
தமிழ் பெயர் : பெருமரம்
பயன்கள்:
தீவனம் : இலைகள் தீவனமாகப் பயன்படுகிறது.
வேறு பயன்கள் : மரம் மெருதுவாக இருப்பதனாலும் வெள்ளையாக இருப்பதனாலும் தீக்குச்சி தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : மார்ச் – ஜூன்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 15000
முளைத்திரன் : ஆறு மாதங்கள். விதைகளைத் தாமதமின்றி விதைத்திட வேண்டும்.  
முளைப்பு சதவீதம் : 10 %
விதை நேர்த்தி : விதைகள் மேலிருக்கும் விதைத்தோலை நீக்கியப்பிறகு முளைப்புத் தன்மை அதிகரிக்கும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : மே – ஜூன் மாதங்களில், மெல்லிய மணலில், மேட்டுப் பாத்தியில், விதைகள் விதைக்கப்படும். விதைகள் 15 நாட்களில் முளைத்து விடும். முறையாக நீர்ப பாய்ச்ச வேண்டும். முறையான களையெடுத்தல் செய்ய வேண்டும். முதல் வளரும் பருவத்தில் நாற்றுகள் 15-23 செ.மீ வளர்ந்து விடும். கொள்கலனிலும் நாற்றுகளை நடலாம்.     
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016