நோய் மேலாண்மை

பௌஹினியா வேரிகேட்டா

குடும்பம் : லேகுமினேசி
தமிழ் பெயர் : சிவப்பு மந்தாரை
பயன்கள்:
எரிபொருள் : நல்ல எரிபொருள்
தீவனம் : நல்ல தீவனம்
வேறு பயன்கள் : சிறிய மரக்கட்டைகளாகப் பயன்படுகிறது.   
விதைகள் சேகரிக்கும் நேரம் : பிப்ரவரி  - ஜூன்
விதைகளின் எண்ணிக்கை / கிலோ : 2500 - 3000
முளைத்திரன் : ஒரு வருடம் வரை
முளைப்பு சதவீதம் : 90 %
விதை நேர்த்தி : குளிர்ந்த நீரில்  4 – 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : மே – ஜூன் மாதங்களில்  விதைகள் விதைக்கப் படுகின்றன. முளை விடுதல் ஒரு வாரத்தில் தொடங்கி 15 நாட்களில் முடிந்து விடும். நாற்றுகள் அடுத்த பிப்ரவரியில் நடு வயலில் நட வேண்டும். அடுத்த ஜனவரியில் செடிகளை பிடுங்கிட வேண்டும். இந்த நிலையில், செடிகளின் வயது ஒரு வருடம் ஒன்பது மாதங்கள். 13 x 25 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நாற்றுகளை நடும் பொழுது, நான்கு அடி உயரம் வளரும். 30 x 45 செ.மீ. அளவிலான பாலித்தீன் பைகளில் நாற்றுகளை நடும் பொழுது, எட்டு அடி உயரம் வளரும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016