| 
      |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 வனவியல் தொழில்நுட்பங்கள்          | 
      |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 
                அறிமுகம் முக்கிய மர இனங்களுக்குரிய நாற்றங்கால் தொழில்நுட்பம்             இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு  திடமான சுற்றுச்சூழல் பேணுவதற்கும், சமூதாய பொரளாதார மற்றும் கிராம முன்னேற்றங்களுக்கு,  வனவியல் துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. வனங்கள், விறகு, தீவனம் சிறிய மற்றும் கட்டிடத்திற்கான  தடி மரம் போன்ற பல்வேறு பொருள்களுக்கு பாரம்பரிய மூலதனமாகவும் மற்றும் பெறுபான்மையான  மக்களுக்கு ஆதாரமாகவும் இருந்திருக்கின்றன. வனங்களால் கிராமப்புரங்களில் ஏற்படுத்தக்குடிய  வேலை வாய்ப்புகளால் வரும் கிராம வருமானம் மற்றும் வருமை ஆற்றல் போன்ற வாய்ப்புகள்  முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. தடி மரம், விறகு, தீவனம் மற்றும் மற்ற பிற வனப்பொருட்களை  சட்டவிரோதமாக அகற்றுவதால் நாட்டின் வனங்கள் பெரிய நிர்பந்தத்திற்குள்ளாகியுள்ளன.             நாட்டின் மூன்றில் ஒரு பங்குள்ள பூகோள  பகுதிகள் வனங்கள் / மரங்களால் இருக்க வேண்டும் என்று தேசிய வனக் கொள்கை வலியுறுத்துகிறது.  இதை முன்னிட்டு 10 வது ஐந்தாண்டு கால திட்டத்தில் அணுகுமுறை  படிவமாக 25 சதவிகித நிலங்கள் புத்தாண்டு கால திட்ட இறுதியில் வனங்களாகவோ / மரங்களாலோ  இருக்குமாறு மற்றும் பதினொன்றாம் திட்ட காலத்தின் இறுதியில் இது 33 சதவிகிதமாக இருக்குமாறு  இலக்கை வைத்தனர். இத்திட்டம் நீர்வளம் உள்ள பகுதிகளில் நவீன நாற்றங்கால்கள் அமைத்து  தரமான நாற்றுகள் அளிப்பதற்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. நிரந்தரமாக அழிந்து வரும்  வனவளங்கள் மற்றும் அதிகரித்து வரும் காடு அழித்தல்கள் போன்றவைகளை முன்நிறுத்தி, சமுதாய  மக்களையும் சுறுசுறுப்பாக காடு வளர்ப்பு திட்டங்களில் பங்கு பெற வைத்தால் தான் இத்திட்டங்கள்  வெற்றி பெரும். கிராம சமூகம் நேரடியாக பயன் பெரும் வரை சிறிய ஊக்குவிப்பு பணம் அவர்களுக்கு  வழங்கப்படுவது நன்றாக அறிந்த விஷயமாகும். கிராமப்புரங்களில் நாற்றங்கால்கள் அமைப்பதற்கு  கடனுதவி செலவுகள் மூலம் எளிய மற்றும் சரியான நேரத்தில் நாற்றுகள் கிடைக்குமாறு செய்வதன்  மூலம் கிராமப் பகுதிகளில் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.  சமுதாய மக்களை வன நாற்றங்கால்கள் அமைப்பதற்கு ஈடுபடுத்துவது, எதிர்காலத்தில் வன மறுமலர்ச்சி  திட்டங்களில் முக்கிய அம்சமாக இருக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள நாற்றங்கால் அமைக்கும்  நிதியுதவி முறை பெரிய அளவில் வனம் வளர்ப்பதற்கு பேருதவியாக இருக்கும்.              விவசாயிகள், சுய உதவிக் குழுக்கள், மாநில  வன மேம்பாட்டு நிறுவனங்கள், வனம் சார்ந்த நிறுவனங்கள், அரசு-சாரா நிறுவனங்கள் போன்றவைகள்  ஒருங்கிணைக்கப்படாத நாற்றங்கால்களை அமைக்கலாம். உள்ளூரில் நல்ல வரவேற்புள்ள / தேவைக்கேற்ப திட மரங்கள், விறகு, தீவனம், பழங்கள், மரம் அல்லாத வனப் பொருட்கள் மற்றும் அழகு அம்சம் கொண்ட இனங்களின் ஆரோக்கியமான நாற்றுகளை நாற்றங்கால் அமைத்துத் தரலாம். 0.25 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதியில் 1.25 லட்சம் நாற்றுகள் வளர்ப்பது லாபகரமாக கருதப்படுகின்றது. கடன் வாங்குபவரின் பிரிவு, கொள்திறன் மற்றும் நாற்றங்காலின் தேவைக்கேற்ப நாற்றங்கால் பரப்பளவு அதிகரிக்கப்படும். சரியான வடிகால் வசதிக்காக நாற்றங்கால்கள், சீரான சரிவு நிலங்களில் அமைக்க வேண்டும். களை எடுத்தல் மற்றும் உழுதல் மூலம் நிலம் தயார் செய்யப்படும். முதலில் நாற்றங்கால்கள் படுக்கைகளில் வளர்த்து பின்னர் தொட்டிகளில் வளர்க்கப்படும். நாற்றங்காலிற்கு நிரந்தர நீர் ஆதாரம் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்ப நிலை மற்றும் செலவை குறைக்க இது உதவும். 100m x 25m அளவு கொண்டு செவ்வக வடிவில் அமைக்க வேண்டும். 
 
 
 
             முதலாம் வருடத்தில் 1.25 இலட்சம் நாற்றுகளை  உற்பத்தி செய்ய ஆகும். ஒட்டுமொத்த செலவு Rs.2,172 இலட்சமாகும். முதலாம் ஆண்டிற்கான  முதலீட்டுச் செலவு Rs.0.802 இலட்சமாகும். திருப்பி செலுத்த வேண்டிய தொகை Rs.1.37 இலட்சம்.  ஒரு நாள் ஆட்கூலி Rs.50 என்ற அனுமானத்தில், வகை மற்றும் வருடத்திற்குரிய பிரிவு செலவுகள்  பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.  1.25 இலட்சம் நாற்றுகள்  
   
 சாகுபடி மற்றும் வருமானம் 
 0.25 ஹெக்டேர் வன நாற்றங்கால் பொருளியல் 
 PWC  @ 15% 529259.89             நபார்டின் விதிப் பிரிவிற்கேற்ப அதாவது  சிறிய மற்றும் பிற விவசாயிகள் 5 முதல் 25% வரையிளான பணத்தை பயனாளிகள் செலுத்தலாம்.  பயனாளிகள் தங்களது வேலை ஆட்களையும் பங்களிப்பாக பணத்திற்கு ஈடு செய்யலாம்.             கூட்டுறவின் கீழுள்ள தரிசு நில மேம்பாடு  திட்டங்களின் மூலம் தனிநபர் விவசாயிகளோ மற்றும் தனிநபர் குழுக்கள், 100% வங்கிக் கடனை  நீட்டிப்பதற்க மறுநிதி யை நபார்டு வங்கியின் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.             மறுநிதி வழங்குவதற்கான வட்டி விகிதம் நபார்டிடமிருந்து  அவ்வப்போது வரும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் இருக்கும். உச்சமாக  கடன் பெறுபவர்களுக்கு வட்டி விகிதத்தை நிதியுதவி வங்கிகள் தீர்மானிக்கும். எனினும்  12% வட்டி விகிதத்தை நிதியுதவி இயங்குவதற்கு மற்றும் ஏற்றுக் கொள்ளுக்கூடிய வகையில்  கணக்கிடப்பட்டுள்ளது.  | 
      |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016  | 
      |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||