நோய் மேலாண்மை

டீரோகார்பஸ் மார்சுபியம்

குடும்பம் : லெகுமினேசியே
தமிழ் பெயர் : வேங்கை
பயன்கள்:
தீவனம் : இலைகள் ஆடுகளுக்கு தீவனமாக பயன்படுகின்றது.
வேறு பயன்கள் : இலைகள் தழை உரமாக பயன்படுகின்றது.
விதைகள் சேகரிக்கும் நேரம் : ஜனவரி – மார்ச்
ஒரு கிலோவிற்கு விதிகளின் எண்ணிக்கை : 2100
முளைத்திறன் : 6 மாதங்கள் வரை
முளைப்புச் சதவிகிதம் : 90%
விதை நேர்த்தி : மாட்டு சாண கரைசலில் 2 நாட்கள் வரை தோய்த்தல் வேண்டும்.
நாற்றாங்கால் தொழில்நுட்பம் : விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை அல்லது படுக்கைகளில் விதைக்கவேண்டும். முளைதலின் பிறகு பாலிதீன் தொட்டிகளில் நடவு செய்யவேண்டும்.30 ´ 40 செ.மீ தொட்டிகளில் மண், மணல் மற்றும் தொழுஉரம் சம அளவில் இருக்கவேண்டும். நாற்று 4 மாதங்களில் 6 அடி உயரம் இருக்கும்.
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016