தோட்டக்கலை :: பழப்பயிர்கள் ::நாவல் பழம்

நாவல் பழம் (சைஜிஜியம் கியும்நி)

அறிமுகம் ஊடுபயிர்
மண் கவாத்து செய்தல்
காலநிலை பூச்சிகள்
வகைகள் நோய்கள்
இனப்பெருக்கம் பூத்தல் மற்றும் காய் பருவம்
நடவு அறுவடை மற்றும் மகசூல்
உரமிடுதல் சேமித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்
நீர்ப்பாசனம் பயன்கள்
அறுவடை பின்சார் தொழில் நுட்பம்

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.இது நிரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பயிரிடுவது குறைவாக உள்ளது ஏனெனில் சாகுபடி முறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாதது, குட்டையான மற்றும் அதிக மகசூல் வகைகள் கிடைக்கப்பெறாதது ஆகியவையாகும்.

1.அறிமுகம்

      நாவல்பழம் உள்நாட்டில் வர்த்தக மதிப்பு மிக்க பழமாகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கருப்பு பிளம்ஸ், இந்திய கருப்பு செர்ரி மற்றும் ராம் நாவல் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த மரம் உயரமாக மற்றும் அழகாக தோற்றமளிக்கும். இம்மரத்தை சாலை ஒரங்களில் நிழலிற்காகவும், காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கப்படுகிறது.

இதன் தாயகம் இந்தியா அல்லது கிழக்கிந்திய தீவுகள் ஆகும். இது தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மடகாஸ்கர் மற்றும் சில நாடுகளிலும் காணப்படுகிறது. இது புளோரிடா, கலிபோர்னியா, அல்ஜீரியா, இஸ்ரேல் போன்ற வெப்பமண்டல பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை இமயமலையில் 1300 மீட்டர் வரை மற்றும் குமோன் மலைகளில் 1600 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றது. இது பரவலாக கங்கை சமவெளியிலிருந்து தென் தமிழ்நாடு வரை வளர்க்கப்படுகிறது.

2.மண்

           நாவல் மரம் அனைத்து மண்ணிலும் வளரும். எனினும் அதிக உற்பத்தி திறன் மற்றும்  தரமான வளர்ச்சிக்கு களிமண் அல்லது நன்கு வடிகால் வசதியுள்ள மண் தேவை. இத்தகைய மண் போதுமான ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்கிறது. இதனால் வளர்ச்சி நன்றாக இருப்பதோடு அதிக பழங்களையும் அளிக்கிறது. நாவல் உப்புத் தன்மை மற்றும் நீர் தேங்கிய நிலையிலும் நன்றாக வளரும். எனினும், அடர்ந்த அல்லது இலகுவான மணற்பரப்பில் நாவல் மரம் வளர்ப்பது இலாபமாக இருக்காது.

3.காலநிலை

           நாவல் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காலநிலையில் நன்கு வளரும். பூ மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் வறண்ட வானிலை தேவைப்படுகிறது. மித வெப்ப மண்டல பகுதிகளில், மழைப் பொழிவு பழம் பழுக்கும் தருணத்தில் இருப்பதால்  பழங்களின் எடை, நிறம் மற்றும் சுவை அதிகரிக்கும்.

4.வகைகள்       

            இந்தப் பழ சாகுபடியில் எந்த வகைகளும் இல்லை. பொதுவாக வட இந்தியாவில் வளர்க்கப்படும் வகை “ராம் நாவல்” ஆகும். பழங்கள் பெரியதாகவும், நீள்சதுர வடிவாகவும், முழுமையாக பழுத்த நிலையில் அடர் ஊதா அல்லது நீல கருப்பு நிறத்திலும் இருக்கும். நன்கு பழுத்த பழத்தின் கூழ் ஊதா நிறத்தில் இருக்கும். பழம் அதிக சாறுடையதாகவும் இனிப்பாகவும் இருக்கும். கொட்டை அளவு சிறியதாக இருக்கும். இந்த வகைகள் ஜ%ன், ஜ%லை மாதங்களில் பழுக்கும். இவை கிராமப்புற மற்றும் நகர்புற சந்தைகளில் அதிகமாக காணப்படும்.
மற்றொரு வகையானது, பழங்கள் சிறிய அளவாகவும், சற்று உருண்டையாகவும் இருக்கும். பழுத்த பழங்கள் அடர் ஊதா நிறம் அல்லது கருமையாகக் காணப்படும். சதை ஊதா நிறமாக இருக்கும். இது குறைவான சாறுடையது, எடை மற்றும் சதையின் இனிப்புத் தன்மை ராம் நாவலைவிடக் குறைவு ஆனால் கொட்டை அளவு பெரியதாக இருக்கும். பொதுவாக இவ்வகைப் பழங்கள் ஆகஸ்ட் மாதத்தில் பழுக்கும்.
தற்பொழுது, பல வகைகள் இந்தியாவில் உள்ளதால் நல்ல இரகங்களைத் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

                        ராம் நாவல்                   மற்றொரு வகை
5.இனப்பெருக்கம்

           விதை மற்றும் நாற்று முறையில் நாவல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பல கருவாக்கம் இருப்பதால், இது மூல விதை மூலம் உருவாகிறது. தாவர முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது ஆனால் இந்த முறை காய் பிடிக்க தாமதமாகும் என்பதால் அறிவுறுத்தப்படுவதில்லை. எனவே விதை இனப்பெருக்கமே பரிந்துரைக்கப்படுகிறது.
புதிய விதைகளை விதைக்க வேண்டும். முளைக்க சுமார் 10 முதல் 15 நாட்களாகும். நாற்றுகளை வசந்த காலத்தில் (பிப்ரவரி முதல் மார்ச்) அல்லது மழை காலத்தில் அதாவது ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நடலாம்.
நாவல் இனப்பெருக்கம் செய்வது எளிதானது. 10 - 14 மி.மீ தடிமனாக இருக்கும்  ஒரு வயதான நாற்றுகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய வேண்டும். குறைவான மழை உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் செய்ய சிறந்த மாதம் ஜ%லை முதல் ஆகஸ்ட் ஆகும். மழை அதிகமாக உள்ள பகுதிகளில் ஒட்டுக்கட்டுதல் மே - ஜ%ன் மாதங்களில் செய்யலாம்.
வளைப்பதியம் கட்டுதல் மூலமும் நாவலை இனப்பெருக்கம் செய்யலாம், ஆனால் இது வணிக ரீதியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இந்த முறையில் தாய் மரத்திலிருந்து எடுத்த மரக் குச்சியை ஒரு தொட்டியில் வைத்து ஜ%ன் மற்றும் ஜ%லை மாதங்களில் வளைப்பதியம் கட்டப்பட்டு ஒரு வருட நாற்றுகள் உருவாக்கப்படுகின்றன. நல்ல வேர் பிடிப்பிற்கு இடைப்பட்ட மூடு பனியில் பதியம் பெறப்படுகிறது. 

6.நடவு

           நாவல் ஒரு இலை உதிரா மரம். இவை வசந்தகாலம் (பிப்ரவரி - மார்ச்) மற்றும் மழைக்காலம் (ஜ%லை - ஆகஸ்ட்) ஆகிய இரண்டு பருவங்களிலும் நடவு செய்யலாம். பிந்தையப் பருவத்தில் நடவு செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்தால் மே மற்றும் ஜ%ன் மாத வறட்சியை தாங்கி வளருவது கடினமாக இருக்கும்.
நடுவதற்கு முன் விளைநிலத்தை சுத்தப்படுத்தி உழ வேண்டும். 1 x 1 x 1 மீ  குழிகளை 10 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பொதுவாக, பருவமழைக்கு முன்பே குழிகள் தோண்டுவதை நிறைவு செய்ய வேண்டும். குழியில் 75% மேல் மணல் மற்றும் 25 % தொழுவுரம் அல்லது மட்கிய உரம் ஆகியவற்றை கலந்து நிரப்ப வேண்டும். பொதுவாக நாவல் மரம் நிழலுக்காக பண்ணை மற்றும் கிணற்றடிகளில் வளர்க்கப்படுகிறது. இங்கே இவை பழங்களைத் தவிர நிழலையும் வழங்குகின்றன.

7.உரமிடுதல்

            நாவலுக்கு பொதுவாக உரமிடுவதில்லை. ஆண்டுக்கு 19 கிலோ தொழுஉரம் இட வேண்டும். மரம் நன்கு வளரும் நிலையில் மரம் ஒன்றுக்கு 75 கிலோ அளிக்க வேண்டும்.
பொதுவாக, நாற்று மூலம் நட்ட செடி காய் பிடிக்க 8 முதல் 10 வருடமாகும். ஒட்டுக்கட்டுதல் மூலம் நட்ட செடி காய் பிடிக்க 6 முதல் 7 வருடமாகும். மண்ணில் அதிக ஊட்டசத்து இருந்தால் இலைகள் அதிகமாக வரும், ஆதனால் காய் பிடிப்பதற்கு தாமதமாகும். இந்த மரங்களுக்கு உரம் மற்றும் பாசன அளவு மிகக் குறைவாக வழங்கப்பட வேண்டும். செப்டம்பர் - அக்டோபர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நிறுத்திவிட வேண்டும். இந்த முறை நாவலில் மொட்டு அரும்புவதற்கும், காய் பிடிப்பதற்கும் உதவுகிறது. சில சமயங்களில் இவையும் பயனுள்ளதாக இருக்காது. அந்த சமயம் வேரை கவாத்து செய்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். மரத்தின் வளர்ச்சி மற்றும் காய் பிடிக்கும் அளவைக் கொண்டு உரத்தை அளிக்க வேண்டும்.

8.நீர்ப்பாசனம்

            ஆரம்ப காலத்தில், தொடர்ச்சியாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பின்னர் பாசன இடைவெளியை குறைக்க வேண்டும். இளம் மரங்களுக்கு ஒரு ஆண்டில் 8 முதல் 10 முறை நீர்ப்பாசனம் தேவைப்படும். வளர்ச்சி அடைந்த மரங்களுக்கு மே - ஜ%ன்  மாதங்களில் 4 முதல் 5 முறை நீர்ப்பாசனம் போதுமானது. இலையுதிர் மற்றும் குளிர் மாதங்களில் மண் உலர்ந்த போது மட்டும் பாசனம் செய்தல் போதுமானது. இது குளிர் காலங்களில் பனியின் மோசமான விளைவுகளில் இருந்த மரத்தைக் காக்கும்.

9.ஊடுபயிர்          

           நடவு செய்த ஆரம்ப ஆண்டுகளில், தோட்டத்தில் அதிக இடைவெளி காணப்படும்பொழுது அதற்கான ஊடுபயிராக பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களை மழைக்காலங்களில் பயிரிடலாம்.

10.கவாத்து செய்தல்

     நாவலுக்கு வழக்கமான கவாத்து செய்தல் தேவையில்லை. உலர்ந்த மற்றும் குறுக்குக் கிளைகளை நீக்கப்பட வேண்டும். தாவரத்தின் கிளைகளை தரைமட்டத்திலிருந்து 60 முதல் 100 செ.மீல் வளர விட வேண்டும்.

11.பூச்சிகள்

            பூச்சிகளில், வெள்ளை ஈ மற்றும் இலைகளை உண்ணும் கம்பளிப் புழுக்கள் மரத்திற்கு அதிக சேதத்தை விளைவிக்கின்றன.
i. வெள்ளை ஈ (டையலியுரொடெஸ் யுஜினிய)
நாவல் மரத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை ஈ சேதப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பழங்கள் மேற்பரப்பில் வெம்பிக் காணப்படும். வெள்ளை ஈக்களை பின்வரும் வழிகளில் கட்டுப்படுத்த முடியும்.

  • மரத்தைச் சுற்றி சுகாதார நிலையை பராமரிக்க வேண்டும்.
  • அனைத்து பாதிக்கப்பட்ட பழங்களையும் பறித்து அளிக்க வேண்டும்.
  • மரத்தின் தண்டுப் பகுதியைச் சுற்றிலும் மண்ணில் குழி தோண்ட வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட பழங்களில் உள்ள புழுக்களின் முட்டைகள் மற்றும் பூச்சிக் கூடு மண்ணில் விழுந்து அழிந்துவிடும்.

ii. இலை உண்ணும் புழு (கேரிய சப்டில்லிஸ்)

         இந்தப் புழு அதிகமாக கோயமுத்தூரில் மட்டுமே காணப்படுகிறது. புழுக்கள் இலைகளை தாக்கும் அதனால் இலைகள் உதிர்ந்துவிடும். ரோகர் 30 EC அல்லது மாலத்தியான் 1 சதவிகிதம் தெளிப்பதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

iii. மற்ற பூச்சிகள்                                                                                
          மேலே கூறிய பூச்சிகளை தவிர, நாவல் மரம் அணில், கிளி மற்றும் காகம் போன்றவைகளால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. முரசு மூலம் சத்தத்தை ஏர்படுத்தியும், கற்களை சுழற்றியும் கட்டுப்படுத்தலாம்.

12.நோய்கள்

i. பழம் அழுகல் நோய்
         பூஞ்சையால், இலைப்புள்ளி ஏற்படும் அதனுடன் பழமும் அழுகும். பாதிக்கப்பட்ட இலைகளில் சிறிய சிதறிய புள்ளிகள் பழுப்பு மற்றும் செம்பழுப்பு நிறத்தில் காணப்படும். இறுதியில் பழங்கள் அழுகி சுருங்கிவிடும். டைதேன் Z - 78ஐ 0.2% அல்லது போர்டியாக்ஸ் கலவை 4:4:50 செறிவை தெளிப்பதன் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

13.பூத்தல் மற்றும் காய் பருவம்

    மலர்கள் சிறுகிளைகளின் கணு இடுக்குகளில் தோன்றுகின்றன. வட இந்திய சூழலில், பூத்தல் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் இறுதி வரை தொடர்கிறது. பருவத்தின் ஆரம்பத்தில் மகரந்த சேர்க்கை அதிகமாக இருக்கும். நாவல் அயல் மகரந்தச்சேர்க்கைப் பயிராகும். மகரந்தச்சேர்க்கை தேனீக்கள், ஈக்கள் மற்றும் காற்று மூலம் நடைபெறுகிறது. 

     பூ மலர்ந்த மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு உதிர்தல் அதிகமாக இருக்கும். பூ மலர்ந்த பின் ஜிஏ3 60 பிபிஎம் (GA3 60 ppm) ஒரு முறை மற்றும் 15 நாட்கள் கழித்து காய்பிடிப்பிற்குப் பின் ஒரு முறை தெளிப்பதன் மூலம் காய் உதிர்தலைக் குறைக்கலாம்.

     நாவல் மரத்தின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்: முதல் கட்டமாக காய் பிடித்ததிலிறூந்து 15 முதல் 52வது நாள் காய் மெதுவாக வளரும் பருவம், இரண்டாவது கட்டம் 52 முதல் 58வது நாள் காய் வேகமாக வளரும் மற்றும் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் 58 முதல் 60ம் நாள் காய் வளர்ச்சி மெதுவாக இருக்கும். காயின் எடை கூடும்.
14.அறுவடை மற்றும் மகசூல்

            நாவல் மரத்தில் நாற்று 8 முதல் 10ம் ஆண்டிலும் ஒட்டுச்செடி 6 முதல் 7ம் ஆண்டிலும் பலன் கொடுக்கும். எனினும், முழுமையான மகசூல் 8 முதல் 10ம் ஆண்டில் கிடைக்கும். தொடர்ந்து 50 முதல் 60 வயது வரை பலன் கிடைக்கும். ஜ%ன் மற்றும் ஜ%லை மாதங்களில் பழம் பழுக்கும். முழுவதும் பழுத்த பழம் பெரிதாக அடர் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும்.
            பழம் பழுத்தவுடன் மரத்திலிருந்து பறித்துவிட வேண்டும். பழுத்த பழங்களை தோளில் பைகளை தொங்கவிட்டபடி மரத்தின் மீது ஏறி ஒவ்வொன்றாக பறிக்க வேண்டும். பழங்களைப் பறிக்கும்போது சேதம் ஏற்படாமல் தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும். நாற்று நடவில் நன்கு வளர்ந்த மரத்திலிருந்து வருடத்திற்கு 80 முதல் 100 கிலோ வரையிலும் ஒட்டுச்செடி மரத்தில் வருடத்திற்கு 60 முதல் 70 கிலோ வரையிலும் பழம் கிடைக்கும். 

15.சேமித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல்

          நாவல் பழங்கள் இயற்கையில் விரைவில் அழுகக்கூடியது. பழங்களை சாதாரண வெப்ப நிலையில் 3 முதல் 4 நாட்களுக்கு மேல் சேமிக்க முடியாது. எனினும், குளிர்விக்கப்பட்ட பழங்கள் பாலித்தீன் பைகளில் குறைந்த வெப்பநிலை 8 முதல் 100C மற்றும் 85 முதல் 90% ஈரப்பதத்தில் மூன்று வாரங்கள் வரை சேமிக்கலாம்.
            சந்தைப்படுத்த நன்கு பழுத்த தரமான பழங்களை தேர்வு செய்ய வேண்டும். சேதமடைந்த, நோயுற்ற மற்றும் சரியாக பழுக்காத பழங்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பழங்கள் கவனமாக மரக் கூடைகளில் அடுக்கப்பட்டு உள்ளூர் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.

16.பயன்கள்

            நாவல் பழம் கணிசமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. கனிமங்கள், சர்க்கரை மற்றும் புரதங்கள் தவிர இதில் இரும்புச் சத்தும் அதிகமாக உள்ளது. இப்பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண் ஊட்டச்சத்து சதவிகிதம்
1 ஈரம் 28.2
2 புரதம் 0.7
3 கொழுப்பு 0.1
4 தாது 0.4
5 நார் 0.9
6 மாவுச்சத்து 19.7
7 கால்சியம் 0.02
8 பாஸ்பரஸ் 0.01
9 இரும்பு 1.0
10 கலோரி பெறுமானம் 83/100 கிராம்

ருசியுடைய மற்றும் நறுமணமுடைய பழங்கள் உணவிற்குப் பெரும்பாலும் பயன்படுகின்றன. பழம் பொதுவாக உப்புடன் சேர்த்து உண்ணப்படுகிறது. நாவல் பழம் பொதுவாக சற்றே புளிப்பு சுவையுடன் இருக்கும்.
பழமாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், நாவல் பழத்தைக் கொண்டு சுவையான பானங்கள், ஜெல்லி, ஜாம், பழக்கூழ், வினிகர் மற்றும் ஊறுகாய் தயாரிக்கலாம். சிறிய அளவு பழச்சாறு வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழச் சாறு மற்றும் மாம்பழச் சாறை சமஅளவு கலந்து சர்க்கரை நோயளிகளுக்கு கொடுத்தால் தாகம் தணியும். நாவல் பழம் குறிப்பாக கோவாவில் மது தயாரிக்கப் பயன்படுகிறது.
சற்று பழுத்த பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் வினிகர் பசியை தூண்டும். இறைப்பை குடல் வழி நீக்கி, சிறுநீர்ப் பெருக்கியாகவும் பயன்படுகிறது. குளிர்ச்சி மற்றும் செரிமான பண்புகளையும் கொண்டுள்ளது.
மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு நோக்கத்திற்காகப் பயன்படுகிறது. இம்மரத்தின் இலைகள் மற்றும் பழங்கள் தென் அமெரிக்காவில் வயிறு கோளாறு சரி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.பொடி செய்யபட்ட விதைகள் சர்க்கரை நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
நாவல் விதைகள் மிக விரைவில் நிரந்தரமாக சிறுநீரில் சர்க்கரையின்  அளவைக் குறைக்க உதவுகிறது. இது படர்தாமரை நோயை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கவும் உதவுகிறது. நாவல் விதைகளில் அதிக அளவில் புரதம், மாவுச் சத்து மற்றும கால்சியம் உள்ளதால் விலங்குகளுக்கு அடர் தீவனமாகக் கொடுக்கப்படுகிறது. இதன் மரம் இரயில்களில் படுக்கைகள் அமைக்கப் பயன்படுகிறது. இம்மரம் பூச்சி மற்றும் பூஞ்சாணங்களால் தாக்கப்படாது. இதைத்தவிர நாவல் பழங்களில் அதிக பயன்பாடுகள் உள்ளன.