தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: கூரை தோட்டங்கள்

வீட்டு காய்கறித் தோட்டம்

அறிமுகம்:

வீட்டுக் காய்கறித் தோட்டமானது, வீட்டின் பின்புறத்தில் சமையலறையில் வீணாகும் நீரைக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்தல்
இது வீட்டுத் தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், காய்கறித் தோட்டம் என அழைக்கப்படுகிறது.



வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் பயன்கள்:

  • அதிக ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும்.
  • நச்சு மருந்துகள் இல்லாத பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்தல்
  • காய்கறிகள் வாங்குவதற்காக ஆகும் செலவைக் குறைக்க முடிகின்றது
  • வீட்டுக் காய்கறித் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளானது கடைகளில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும்.
  • சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருட்களை உபயோகமாக பயன்படுத்த முடிகின்றது.
  • உடலிற்கும் மனதிற்கும் உடற்பயிற்சியாகும்.

இடத் தேர்வு

வீட்டின் பின்புறம்

அதிக சூரிய ஒளி கிடைக்கும் வெட்ட வெளிப் பகுதி மற்றும் நீர் ஆதாரமுள்ள பகுதி, வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் அளவு மற்றும் வடிவமானது நிலத்தின் அளவு, வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் தோட்டத்தை சீராக பராமரிக்க ஆகும் கால அளவைப் பொறுத்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு, 5 சென்ட் (200 மீ2) இடமானது ஆண்டு முழுவதும் காய்கறிகள் கொடுக்க போதுமானது. செவ்வக வடிவ தோட்ட அமைவானது சதுர வடிவ (அ) நீள் பட்டை வடிவ தோட்டத்தை காட்டிலும் சிறந்ததாகும்.


வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கு ஏற்ற பயிர்கள்

பழங்கள் காய்கறிகள் நறுமணப் பயிர்கள் மலர்கள் மரங்கள்
மா
வாழை
சப்போட்டா
கோவா
பப்பாளி
எலுமிச்சை
நெல்லி
மாதுளை
பேரிச்சை
தக்காளி
கத்தரி
மிளகாய்
வெங்காயம்
பெரிய வெங்காயம்
வெண்டை
பாகற்காய்
புடலங்காய்
பீர்க்கன்காய்
சுரைக்காய்
அமராந்தஸ்
அவரை
பீட்ருட்
முள்ளங்கி
கருவேப்பிலை
முருங்கை
தட்டைப் பயறு
கொத்தவரை
குச்சி கிழங்கு
மஞ்சள்
கொத்தமல்லி
வெந்தயம்
மருந்துப் பயிர்கள்
கற்றாழை
மருந்து கூர்கன்
வசம்பு
வல்லாரை
புதினா
துளசி
தூதுவளை
ஒமவல்லி
கரிசிலாங்கன்னி
கீழாநெல்லி
பொன்னாங்கன்னி
மணத்தக்காளி
வெட்டிவேர்
ரோஜா
செம்பருத்தி
மல்லிகை
அரளி
மண்தாரை

வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் வரைபடம்

  • வேலி – கம்பிகளான வலை (அ) அகத்தி போன்ற உயிர்வேலி அமைத்தல்
  • பல்லாண்டு பயிர்களான மா, சப்போட்டா, எலுமிச்சை, நெல்லி மற்றும் முருங்கை போன்றவற்றை தோட்டத்தின் ஓரப் பகுதிகளில் நிழலில் விழாத வகையில் நட வேண்டும்.
  • ஒன்று (அ) இரண்டு உரக் குழிகளை ஒரு ஓரத்தில் அமைக்க வேண்டும்.
  • வேலியின் நான்கு ஓரங்களிலும், சுரை, பாகல் மற்றும் புடலை போன்ற பயிர்களை படர விட வேண்டும்.
  • சில பயிர்களை நேரடியாக விதைத்தல் (அமராந்தஸ், சுரை, பாகல் மற்றும் புடலை)
  • சில பயிர்களை நேரடியாக விதைத்து நடுதல் வேண்டும். (தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் வெங்காயம்)
  • பயிரிடும் பரப்பை சமமாக பிரித்து, ஓராண்டு காய்கறிப் பயிர்களை பயிரிட வேண்டும்.
  • தொடர்ச்சியாக மற்றும் சிறப்பான பயிரிடுதலை வீட்டுக் காய்கறித் தோட்டத்தை அமைத்தல்
  • தேவையான அளவு அங்கக உரங்களை அடிக்கடி இட்டு மண்ணின் வளத்தை பாதுகாத்தல்
  • ஒவ்வொரு பாத்திக்கும் பார்சால் பாசனம் அமைத்தல்
  • பயிரிடும் பருவம் – ஜீன் - ஜீலை, செப்டம்பர் – அக்டோபர்
  • தேவையான அளவு தேன் கூடு பெட்டிகளை அமைப்பதன் மூலம் போதுமான அளவு மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதுடன் தேன் கிடைக்கும்.
  • நல்ல பயிர் அறுவடை செய்து மகசூல் பெற வேதியியல் உரங்களை இடுதல் அவசியம்.
  • பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் புழுக்களை கைகளால் எடுத்து அழித்தல் மற்றும் வேப்பெண்ணெய் தெளிப்பு லிட்டருக்கு 4 மி.லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 3% என்ற அளவில் அளிக்க வேண்டும்.
  • நச்சு மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
மர நெல்லி முருங்கை பப்பாளி

 

நுழைவு 
உரக்குழி காக்சீனியா
எலுமிச்சை மாதுளை நாற்றங்கால் படுக்கைகள்
அவரை கறிவேப்பிலை பாகல்
தவசிக் கீரை மூலிகைச் செடிகள் (ஜிம்னியா, தூதுவளை, ஓமவள்ளி, துளசி)
புதினா அமராந்தஸ்
புடலை பொன்னாங்கன்னி   பெருவள்ளிக்
கிழங்கு
சேனக்
கிழங்கு
பீர்க்கன்
கொத்தமல்லி மிளகாய் சிறுவள்ளிக் கிழங்கு கொத்தவரை
வெந்தயம் கத்தரி சேப்பங்
கிழங்கு
காராமணி
சின்ன வெங்காயம் பெல்லாரி வெங்காயம் தக்காளி மரவள்ளி முள்ளங்கி பீட்ரூட்


பயிரிடும் முறைகள்:

பயிரின இடைவெளி

தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய்  : 60 x 60 செ.மீ
தட்டைபயறு    : 60 x 45 செ.மீ
பாகற்காய்    : 2 x 2 மீ
வெங்காயம்        : 15 x 10 செ.மீ
குச்சி கிழங்கு   : 60 x 60 செ.மீ
கிழங்கு     : 60 x 60 செ.மீ

முதன்மையாக பாத்தியில் நீர்ப்பாசனம் செய்யும் முன் நாற்றுகளை சரியான இடைவெளியில் நட்டு பின் மூன்றாவது நாள் உயிர் நீர் மறவாமல் அளிக்க வேண்டும்.
1 – 3 விதைகள் நேரடி விதைப்பில் பின்பற்றுவதுடன் போதுமான அளவு பாசனம் செய்வதுடன் 2 நாற்றுகள் விட்டு மீதமானவற்றை பிடுங்கிவிட வேண்டும்.




வீட்டு காய்கறித் தோட்ட மேலாண்மை:

வேலியை ஒட்டிய பகுதியில் தாவரங்களை வளர்த்து படரவிட வேண்டும். சமையலறையில் வீணாகும் குப்பைகளை உரக்குழயில் இட்டு ஈரப்பதத்தை வைத்திருக்க வேண்டும்.

நீர்ப்பாசனம்:

தேவையான போது நீர் ஊற்ற வேண்டும்.

உரங்கள்:

மட்கிய சமையலறை கழிவுகளை உரமாக மாற்றி எல்லா பயிருக்கும் இட வேண்டும். கலப்பு உரத்தை பயிருக்கு 5 கிராம் என்ற வீதம் நட்ட 30, 60 மற்றும் 90வது நாட்களில் இட வேண்டும்.

களையெடுத்தல்:

தேவையானபோது களையெடுக்க வேண்டும்.

அறுவடை:

பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் (அ) சிவப்பு நிறமாக காய்கள் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.

பயிர் பாதுகாப்பு:

பழங்கள் மற்றும் காய்கறிகளில் இருக்கும் புழுக்களை கைகளால் எடுத்து அழித்தல் மற்றும் வேப்பெண்ணெய் தெளிப்பு லிட்டருக்கு 4 மி.லி அல்லது வேப்பங்கொட்டை சாறு 3% என்ற அளவில் அளிக்க வேண்டும். நச்சு மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.

அங்கக முறை பயிர் பாதுகாப்பு:

வேப்பெண்ணெய்
வேப்பங்கொட்டை சாறு
பஞ்சகாவ்யா
வீட்டுக் காய்கறித் தோட்டத்திற்கு உபயோகப்படுத்தும் உபகரணங்கள்
மண் வெட்டி
களைக் கொத்து
கைத்தெளிப்பான்
பூவாளி
வெட்டுக் கத்தரி

ஆதாரம்:

முனைவர்.சத்தியமூர்த்தி, காய்கறிப் பயிர்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்

Last Update :February 2015