தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

நோய் மேலாண்மை

I. அடித்தண்டு அழுகல் நோய் - கானோடெர்மா லுாசிடம்
உழவியல் முறை

  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் (பிஎஃப் 1) ஐ மரத்திற்கு 200 கி. வீதம்,  200 கி.  டிரைகோடெர்மா விரிடி உடன் வருடத்திற்கு ஒருமுறை இடலாம்.
  • 200 கி. பாஸ்போபாக்டா், 200 கி. அசோட்டோபாக்டர் இவைகளை 50 கி.கி. தொழு உரத்துடன் கலந்து மரமொன்றிற்கு இடலாம்.
  • பசுந்தாள் உரங்களை வளர்த்து தென்னை பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும்.
  • தொழு உரம் 50 கி.கி. வேப்பம்புண்ணாக்கு 5 கி.கி. வீதம் 6 மாதத்திற்கு ஒரு முறை உரத்துடன் கலந்து இடலாம்.

இரசாயன முறை

  • ஆரியோபங்கின் 2 கி. + காப்பர் சல்பேட் 1 கி. ஐ 100 மில்லி தண்ணீரில் கலந்து அல்லது டிரைடிமார்ஃப் 2 மில்லி ஐ  100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்தலாம்  (பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பை அல்லது பாலித்தீன் பாட்டிலில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும்).
  • மரத்தை சுற்றி 1.5 மீட்டர் தூரத்தில் 40 லி. போர்டோ கலவையை (1%) ஊற்றி மண்ணை நனைக்க வேண்டும்.

II. குருத்தழுகல் நோய் - ஃபைட்டோப்தோரா பால்மிவோரா

நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடை ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும். புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும் (1 லி போர்டோ பசை தயாரிக்க 100 கி. காப்பர் சல்பேட் மற்றும் 100 கி. நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைத்து, இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்).

III. சாறு வடிதல் நோய்
பாதிக்கப்பட்ட மரப்பகுதியினை சுத்தப்படுத்தி விட்டு, போர்டாக்ஸ் கலவையை பூச வேண்டும்.

IV. பென்சில்முனைநோய்
நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையினால் மரத்தண்டின் சுற்றளவு குறைந்தும், இலையின் எண்ணிக்கை மற்றும் அளவு குறைந்தும், மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட உரத்துடன் 225 கிராம் போராக்ஸ், துத்தநாகம் சல்பேட், மாங்கனீசு சல்பேட், இருப்பு சல்பேட், காப்பர் சல்பேட் மற்றும் 10 கிராம் அமோனியம் மாலிப்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தின் அடிப்பகுதியில் இருந்து 1.5 மீட்டர் ஆரத்தில் ஊற்ற வேண்டும்.

1 சத போர்டோக்கலவை தயாரிக்கும் முறை

400 கிராம் தாமிர சல்பேட் 20 லிட்டர் தண்ணீர் கரைத்து கொள்ளவேண்டும். இதேபோல் வேறு பாத்திரத்தில் 400 கிராம்  சுண்ணாம்பை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து கொள்ளவேண்டும். பின்பு தாமிர சல்பேட் கரைசலை சுண்ணாம்பு கரைசலுடன் சீராக நன்கு கலக்கவேண்டும். கரைசலை தயாரிக்க மண்ணால் ஆன அல்லது மரத்தாலான பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்கவேண்டும். உலோகத்திலான பாத்திரங்களை உபயோகிக்ககூடாது. கலவை சரியான விகிதத்தில் கலந்துள்ளதா என்பதை அறிய நன்கு தீட்டப்பட்ட இரும்பு கத்தியை ஒர நிமிடம் கரைசலில் வைக்கவேண்டும். கத்தியில்  துருபோன்று படிவு  இருந்தால் சிறிதளவு சுண்ணாம்பு கரைசல் சேர்க்கவேண்டும். சுண்ணாம்பு கரைசலைக் கத்தியில் துரு படியாது இருக்கும் வரை சேர்க்கவேண்டும்.

போர்டோப் பசை தயாரிக்கும் முறை

200 கிராம் தாமிரசல்பேட் தண்ணீரில் கலக்கவேண்டும். பின்பு வேறு பாத்திரத்தில் 200 கிராம் சுண்ணாம்பு ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவேண்டும். பின்பு மூன்றாவது பாத்திரத்தில் இவ்விரண்டு கரைசலையும் கலந்து பசை போன்று உபயோகித்துக் கொள்ளலாம்.

அறுவடை மற்றும் அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள்

தோப்புகளில் தேங்காய் விளைச்சலுக்கேற்ப 30-45 நாட்கள் இடைவெளியில் நன்கு முற்றிய 11 மாதங்களைக் கடந்த தேங்காய்களை அறுவடை  செய்யவேண்டும். வீட்டு உபயோகத்திற்காக இருந்தால் தேங்காய்களை நேராக வைக்கவேண்டும். தேங்காய்களை எடுத்து சூரிய ஒளியிலோ அல்லது தேங்காய் பருப்பு காய வைக்கும் இயந்தியரங்களிலோ வைத்து காய வைக்கவேண்டும். காய்ந்த பருப்புகளை 5-6 சதம் நீராவி வரும் வரை காயவைத்து  இருப்பு வைக்கவேண்டும். மேலும், காய் வைத்த கொப்பரைகளை பாலித்தீன் தார்பூசிய சணல் பைகளில் இருப்பு வைப்பது சிறந்தது.

Update : December 2014