||| | | | | |
தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: எண்ணை பணை
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

முன்னுரை

எண்னை பனையானது வருடத்திற்கு சராசரி மழையளவு 2000 மி.மீட்டர் உள்ள இடங்களில் பொதுவாக நன்கு வளரக்கூடியது. இருந்தபோதிலும் சிறிதளவு வறட்சியுடன், அதிக நீர்பிடிப்பு திறன் உள்ள மண் மற்றும் குறைவான நீர் மட்டம் உள்ள இடங்களிலும் எண்ணை பனை வளர்கிறது. மூன்ற முதல் நான்கு மாதங்கள் வரை வறட்சியை தாங்கி வளரக்கூடியதாக இருந்தாலும் தொடர்ந்து நீர்ப் பற்றாக்குறை இருக்குமேயானால் மகசூல் வெகுவாக பாதிக்கும்.

எண்ணை பனை வளர்ச்சிக்கும், மகசூலுக்கும், வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாக திகழ்கிறது. கரு மற்றும்  பூக்கள் உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. 19 டிகிரி செல்சியசுக்கு குறைவான வெப்பநிலை எண்ணை பனை வளர்ச்சியை குறைப்பதோட, மட்டை எண்ணிக்கையையும் குறைக்கிறது. மேலும் அதிகமான ஆண் பூக்கள் உற்பத்தியாகிறது. 29-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ள இடங்களில் அதிகப்படியான குலைகள் உற்பத்தியாகிறது. பகல் இரவு நேர வெப்பநிலைகளில் அதிக வித்தியாசம் உள்ள வறண்ட பகுதிகளில் பூக்களில் மலட்டுத் தன்மை அதிகமாக காணப்படுகிறது. எண்ணை பனை வளர்ச்சிக்கு ஆண்டு ஒன்றுக்கு 1800 - 2000 மணி நேர சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது.

எண்ணை பனை பல வகையான மண் வைககளில் வளர்வதற்கு ஏற்றதாக உள்ளது. இருந்துபோதிலும் ஈரமான, நன்கு வடிகால் வசதியுடைய கரிம சத்துக்கள் அடங்கிய மண் மிகவும் உகந்ததாகும். சரளை மற்றும் பெரும்பகுதி மணல் கலந்த மண் குறிப்பாக கடற்கரை மணல் கலந்த மண் எண்ணை பனை வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதில்லை.

நாற்றாங்கால் மற்றும்  அதன் பராமரிப்பு

1.இரட்டை நிலை நாற்றாங்கால்

முளைத்த எண்ணை பனை விதைகள் நேரடியாக வயலில் நடுதல் பரிந்துரைக்கப்படுவதில்லை. எனவே முளைத்த விதைகள் முதலில் நாற்றாங்கால் அல்லது பாலித்தீன் பைகளில் வளர்த்து ஐந்து இலை வந்தவுடன் பெரிய பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது. பைகளை நிரப்பவுதற்கு வயல் மண், மணல் மற்றும் மக்கிய எரு ஆகியவைகளை சம அளவு கலந்து பயன்படுத்தவேண்டும். சிறிய பைகள் 13 x 23 செ.மீ அளவு இருத்தல்வேண்டும். நல்ல நிலையிலுள்ள முளைத்த விதை ஒன்றினை 2.5 செ.மீ ஆழத்தில் நடவேண்டும். பைகளில் உள்ள மண் பகுதியை சூரிய ஒளி படாத வண்ணம் மரத்தூள், கடலை தோல் மற்றும் சிறுசிறு பண்ணை கழிவு ஆகியவற்றைக் கொண்டு மூடலாம். இதனால் பைகளில் உள்ள நீர் ஆவியாகாமல் தடுக்கலாம். சரியான அளவு நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஒரு மாதமான செடிக்கு ஒரு பங்கு அம்மோனியம் சல்பேட், ஒரு பங்கு சூப்பர் பாஸ்பேட், ஒர பங்கு பொட்டாஷ் மற்றும் இரு பங்கு மெக்னீசியம் சல்பேட், 15 கிராம் என்ற அளவிலும், 3ஆம் மாதம் 45கிராமும், 6ஆம் கிராமும் பரிந்துரைக்கப்படுகிறது. இரட்டை நிலை நாற்றாங்கால் முறையில் எட்டு வார வயதுடைய நாற்றானது (5 இலைகள் உள்ளது) சிறிய பையிலிருந்து பெரிய பைக்கு 40 x 45 செ.மீ அளவுள்ள பாலித்தீன்  பைகள் உபயோகப்படுத்தப்படுகிறது. பாலித்தீன் பைகளின் கீழ் பாதியில் 7.5 செ.மீ இடைவெளியில் தண்ணீர் வடிவதற்காக சிறுசிறு துளைகள் இடவேண்டும். ஒரு பாலித்தீன் பையானது 15-18 கிலோ கொள்ளளவு உடையதாகும்.

முதல் நிலை நாற்றாங்காலில் சொல்லப்பட்டது போலவே இதிலும் முளைக்க வைத்த விதைகள் நடப்படுகின்றன. முளைத்த விதைகள் இரண்டு இலை நிலையை அடையும் வரை நிழல் அவசியம் தேவை. எண்ணை பனை இலைகளை பாலித்தீன் பைகளைச் சுற்றி நடுவதன் மூலம் நல்ல நிழல் கிடைக்கும். ஒற்றை நிலை நாற்றாங்கால் முறைக்கு அதிக வேலையாட்கள் தேவைப்பட்டாலும் நடவு நேரத்தில் இரண்டு மாதங்கள் மிச்சமாகிறது. நாற்றுக்களின் தண்ணீர்த் தேவையானது அதன் வயதுக்கேற்றவாறு மாறுபடுகிறது.

வயது (மாதம்)

நாள் ஒன்றுக்கு (மி.மீட்டர்)

0-2

4

2-4

5

4-6

7

6-8

10

தேவையான தண்ணீர் அளவை இரண்டாகப் பிரித்து காலை மாலை என இரு வேளைகளில் தெளிப்பது மிக்க பலனைத் தருவதோடு தண்ணீர் வீணாவதையும் தடுக்கிறது. ஒரு நாற்றுக்கு ஒரு வாரத்துக்கு 9-18 லிட்டர் தண்ணீர் தேவையாகும். இது மண்ணின் தன்மைக்கேற்றவாறு மாறுபடுகிறது. அதிக வெப்பம் உள்ள காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் நாற்றாங்காலில் தேவைப்படுவதில்லை. மாதம் ஒரு முறை கையால் களைகளை பறிக்கவேண்டும்.

நாற்றாங்காலின் வயது

வறட்சி இல்லாத இடங்களில் 10-16 மாத வயதுள்ள நாற்றுக்களை நடவு செய்யலாம். 12-14 மாத வயதுள்ள நாற்றுக்களே நடவுக்கு மிகவும் உகந்ததென கண்டறியப்பட்டுள்ளது. இந்த வயதில் கன்றானது தரையிலிருந்து 1-1.3 மீட்டர் உயரமும், 13 செயல்படும் இலைகளும் கொண்டதாக இருக்கும். இந்தக் கன்றுகளே பெரிய இலைகளை தருவதாகவும், நல்ல காய்ப்புடையதாகவும், அதிக எண்ணை சத்துடைய கனிகளை தருவதாகவும் இருக்கும்.

வயலில் நடவு செய்தல்

எண்ணை பனை நடவு செய்யும் வயலை நடவு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தயார் செய்யவேண்டும். நடவு செய்யும் நிலம் காட்டுப்பகுதியாக இருப்பின் நிலத்தைச்சுத்தம் செய்து, கழிவுகள் அனைத்தையும் எரித்துவிடவேண்டும். குறைந்த நீர் உறிஞ்சும் தன்மையுள்ள நிலங்கயில் நீர் தேங்குவதைத் தடுக்க வடிகால் வசதிகள் செய்யப்படவேண்டும். சரிவான நிலங்களில் 3-4 மீட்டர் விட்டம் உள்ள வட்டப்பாத்திகள் அமைக்கப்படவேண்டும்.

கன்றுகளை தேர்ந்தெடுத்தல்

நோய் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு  ஆளான, வளர்ச்சியடையாத கன்றுகளை தவிர்த்து விடவேண்டும். வளமான நாற்றுக்களின் உயரமானது 90 செ.மீ முதல் 159 செ.மீ இருக்கும். இது 14 மாதங்களுக்குப் பிறகு சமமாகக் காணப்படும்.

நடவு காலம்

எண்ணை பனை நடவானது பருவ மழை ஆரம்பிக்கும் நேரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அதற்குத் தக்கவாறு நாற்றாங்கால் தயாரித்து நடவு காலத்தில் கன்றின் வயதானது 12 முதல் 14 மாதங்களாக இருக்கவேண்டும்.

இடைவெளி

எண்ணை பனையில் சரியான இடைவெளி என்பது ஒரு அலகு பரப்பிலிருந்து அதிகப்படியான விளைச்சலை கொடுப்பதாக இருக்கவேண்டும். சரியான எண்ணிக்கையில் இருந்து குறையும்போது தனி மரத்தின் விளைச்சல் அதிகமான பொழுதும் மொத்த விளைச்சல் குறைந்தே காணப்படும்.

அதிகப்படியான மர எண்ணிக்கையும் தனி மரத்தின் விளைச்சலை வெகுவாக பாதிக்கிறது. ஏனெனில் அதற்கு தேவையான நீர், சத்துக்கள் மற்றும் வெளிச்சம் ஆகியவை குறைவுபடுதலேயாகும். தொடக்க நாட்களில் அதிக விளைச்சலை கொடுத்தாலும் பிறகு மரங்கள் வளர வளர அதன் அடிப்படை தேவையின் பற்றாக்குறையின் காரணமாக மகசூல் வெகுவாக பிற்காலங்களில் பாதிக்கப்படுகிறது.

மிக சரியான அளவு அடிப்படை தேவைகள்  கிடைக்கும் பட்சத்தில் எக்டர் ஒன்றுக்கு 127-135 மரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் அடிப்படை தேவைகளில் பற்றாக்குறை ஏற்படுவதால் எக்டர் ஒன்றுக்கு 138-150 மரங்கள் வரை பரிந்துரைக்கப்படுகின்றன. மிக அதிக அநருக்கமான பயிர் இடைவெளியால் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதால் ஆண், பெண் பூக்களில் எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் ஏற்படுகிறது. நெருக்கமான பயிர் இடைவெளி அதிகப்படியான ஆண் பூக்கள் உற்பத்தி ஏற்படுத்தகிறது. முக்கோண வடிவ நடவு முறை மிகச்சிறந்ததாக அமைகிறது. 9 x 9x 9 மீட்டர் இடைவெளியில் பயிரிட்டால் எக்டர் ஒன்றுக்கு 143 மரங்கள் நடலாம். மிக அதிகமான சூரிய வெளிச்சத்தைப் பயன்படுத்த மரவரிசை வடக்கு, தெற்காக அமைக்கவேண்டும்.

நடவு

60 செ.மீ ஆழத்திற்கு குழி எடுத்து அதில் மேல் மண்ணைக் கொண்டு மூடி பிறகு ஆறவிடவேண்டும். பிறகு பாலித்தீன் பைகளில் அகற்றிவிட்டு மண்நிரப்பப்பட்ட குழிகளில் வைக்கவேண்டும். மரக்கன்றுகளை நடவு செய்யும் பொழுது கையுறை அணிந்து கொள்வதால் இலைக்காம்பில் உள்ள முள் குத்துவதைத் தவிர்க்கலாம். நடப்பட்ட மரக்கன்றுகளை எலி மற்றும் இதரப் பூச்சிகளிலிருந்து வலைகளை அமைத்துக் காப்பாற்றவேண்டும். குழி ஒன்றிற்கு 200 கிராம் என்ற அளவில் பாறை உப்பு  (rock phosphate) இடவேண்டும். பொதுவாக குழியில் நடவு செய்தவுடன், தழைச்சத்து உரம் இடுவதில்லை. ஏனென்றால் தழைச்சத்து உரம் வேர்களைப் பாதிக்கிறது. தழைச்சத்தும், சாம்பல் சத்தும் வழக்கமாக 4-6 வாரங்களுக்கு பிறகு கொடுக்கவேண்டும். மக்னீசியம் சல்பேட் அல்லது ஜிப்சம் உப்பு 200 கிராம் குழிக்கு இடலாம்.

பயிர் எண்ணிக்கையைப் பராமரித்தல்

ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் கன்று நடப்பட்ட இடத்தை ஆய்வு செய்து இறந்த செடிகளுக்கு பதிலாக புதிய செடிகளை நடவேண்டும். அவ்வாறு நடவு செய்யப்பட்ட கன்றுகளை சிறப்பாக கவனித்து மற்ற கன்றுகளுடன் சமமாக வளருமாறு கண்காணித்தல் அவசியம். முதல் முப்பது மாதங்களில் அதிகப் பெண் மலர்களை உற்பத்தி பண்ணும் மரங்களே அதிக விளைச்சலைக் கொடுக்கவல்லது. பெண் மலர்களை கொடுக்கத் தவறியவை சரியான மகசூலைத் தரமுடியாது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உரமும் உரமிடலும்

வயது

உரங்கள் (கிராம் / மரம் / வருடம்)

 

தழை

மணி

சாம்பல்

முதல் வருடம்

400

200

400

இரண்டாம் வருடம்

800

400

800

மூன்றாம் வருடம்

1200

600

2700

3.உரமிடும் முறை

பரிந்துரை செய்யப்பட்ட இராசயன உரங்களை இரு பங்காக மே - ஜுன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் மரத்தைச் சுற்றி 2 மீட்டர் என்ற அளவில் இட்டு மண்ணை மேலாகக் கிளரி மூடவும். அங்ககச் சத்துக்கள், குறைவாக உள்ள நிலத்தில் பசுந்தாள் உரம் மற்றும் மக்கிய பண்ணைக் கழிவுகள் இடவேண்டும். ஒரு மரத்திற்கு வருடத்திற்கு  மெக்னீசியம் சல்பேட் 500 கிராம் என்ற அளவில் இடவேண்டும்.

யூரியா சிறந்த தழைச்சத்து உரமாகும். அதே போல் பாறை பாஸ்பேட் மூரியேட் ஆப் பொட்டாஷ் ஆகியவை மணி மற்றும் சாம்பல் சத்திற்கு சிறந்தவை. மரத்தின் வயதிற்கேற்ப மரத்தின் இலை பரவி இருக்கும் வரையில் உரமிடவேண்டும்.

அ. தழைச்சத்து

எண்ணை பனை மரத்தின் இலைகளின் பரப்பு, ஆண், பெண் பூக்களின் விகிதம மற்றும் குலைகளின் எண்ணிக்கை மற்றும் எடையை அதிகரிக்கப் பயன்படுகிறது. தழைச்சத்து பற்றாக்குறை இருப்பின் மரத்தின் இலைகளில் பச்சையம் குறைந்து முழுவதும் மஞ்சள் நிறத்திற்கு மாறுதல். அதிக அளவில் தழைச்சத்து இடுவதாலும் அதிக அளவில் ஆண் பூக்கள் உருவாகும்.

ஆ. மணிச்சத்து

வேர்களின் உற்பத்தி, பழக்குலைகளின் உற்பத்தி திறன் முற்றும் முதிர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மணிச்சத்து பெண் பூக்கள் மற்றும் குலைகளின் எண்ணிக்கை, குலைகளின் எடை ஆகியவற்றை அதிகரிக்கும். மணிச்சத்து குறைபாட்டினால் இலைகளில் துரு பிடிக்காத மாதிரியான இளஞ்சிவப்பு நிறத் திட்டுகளும் நுனி இலைகள் காய்ந்து போவதும் ஏற்படும்.

இ. சாம்பல் சத்து

சாம்பல் சத்தானது ஒளிச் சேர்க்கையை அதிகப்படுத்துதல், நீராவிப் போக்கை கட்டுப்படுத்துதல், பழக்குலைகளின் எண்ணிக்கை, எடை மற்றும் பெண் பூக்களின் எண்ணிக்கைணை அதிகரித்து மரத்தின் மகசூல் முற்றிய இலைகள் மஞ்சள் நிறமாக மாறி திட்டுத் திட்டாக கரும்புள்ளிகள் காணப்படும். மேலும் இதன் முக்கிய அறிகுறியாக ஆரஞ்சு நிறப்புள்ளிகள் காணப்படும்.

ஈ. மக்னீசியம்

இதன் பற்றாக்குறையினால் இலை முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி நன்கு வெளிப்படுத்தும். இந்த நிறம் முற்றிய இலைகளில் தெரியும். மற்ற இலைகளின் மீது இது வெளிர் ஆரஞ்சு நிறமாக இருக்கும். மக்னீசியம் பச்சையத்தின் முக்கிய மூலக்கூறு. ஆகவே இதன் பற்றாக்குறையை நன்கு கண்டு கொள்ளலாம். இதனைப் போக்க மரத்திற்கு 500 கிராம் மக்னீசியம் சல்பேட் உரத்தை இடவும்.

உ. இதர நுண்ணூட்டங்கள்

இரும்பு, மாங்கனீசு, காப்பர் மற்றும் துத்தநாக குறைபாடுகள் பொதுவாக, நம்
தமிழகத்தில் காணப்படுவதில்லை. போரான் குறைபாடு காணப்படும் இடங்களில் நுனிப்பகுதி ஆரம்ப இலைகளின் நுனிப்பகுதி ஆரம்ப கட்டத்தில் கொக்கியைப் போல் வளைந்தும் பிறகு இலைப்பகுதி சிறிது சிறிதாக சுருங்கி கடைசியில் மீன் முள்போல் சுருங்கி விடும். முற்றிய நிலையில் மட்டைகள் கொத்து போல் ஒன்றோடொன்று சேர்ந்து மர வளர்ச்சி குன்றி காணப்படும். மரத்திற்கு 50-200 கிராம் போராக்ஸ் டெகா ஹைட்ரேட் வயதிற்கு தகுந்தாற்போல சிபாரிசு செய்யப்படுகிறது.

நீர் தேவை

தொடர்ந்து மண்ணில் ஈரப்பததம் இருந்தால் நல்ல வளர்ச்சியும் அதிக மகசூலும் கிடைக்கும். தேவையான அளவு நீர், நில ஆழம், தண்ணீர் சேமித்து வைக்கும் திறன் ஆகியவை மிகவும் அவசியம். நீர் பற்றாக்குறை இருப்பின் இலைகளின் துளைகள் மூடிக்கொள்வதால் வளர்ச்சி குன்றி பெண் பூக்கள் குறைந்த ஆண் பூக்கள் அதிக அளவில் தோன்றும். எண்ணை பனைக்கு மாதத்திற்கு 120-150 மி.மீ என்ற அளவில் நீர் தேவைப்படுகிறது. நல்ல தண்ணீர் வசதியுள்ள இடங்களில் பாத்தி முறை பாசனமும், நீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் சொட்டு நீர் பாசனமும நீர் சிபாரிசு செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசனத்தில் ஒரு நாளைக்கு ஒரு மரத்திற்கு 90 லிட்டர் தண்ணீர் தரவேண்டும்.

களைக் கட்டுப்பாடு

எண்ணை பனை மரத்தைச் சுற்றி உள்ள பாத்தி முழுவதும் களை இல்லாமல் இரப்பது நல்லது. இதை வட்ட வடிவ பாத்தி முறை எடுப்பதினால் செயல்படுத்தலாம். வருடத்திற்கு நான்கு முறை களை எடுக்க சிபாரிசு செய்யப்படுகிறது. களைக்கொல்லிகள் 2,4 டி, 2,4,5 டி டலபான் மற்றும் டிசிஏ ஆகியவை எண்ணெய் பனையை அவற்றைப் பாதிப்பதால் பயன்படுத்துவதை தவிர்க்கவும். களைக் கொல்லி கலவையான 2 கிலோ பேராகுவாட் மற்றும் 3-4 கிலோ / எக்டர் அட்ரசின், மோனோரான் மற்றும் டையூரான் என்ற அளவில் மண்ணில் தெளித்து அல்லது தூவி களைகளை கட்டுப்படுத்தலாம் என்று நைஜீரியாவில்  கண்டறியப்பட்டுள்ளது.

பாதைகளை பராமரித்தல்

எண்ணை பனை வயல்களை  சுற்றிப்பார்த்து, பராமரிக்கவும், அறுவுடை செய்யவும் களைக் கட்டுப்பாடு செய்யவும் வயல்களில் பாதைகளை நன்கு பராமரித்தல் அவசியம்.

பூக்கள் நீக்கம் (Ablation)

பாமாயில் மரங்கில் நட்ட நாளிலிருந்து இரண்டரை ஆண்டுகள் வரை பூக்களை நீக்க (Ablation) செய்யவேண்டும். இளம் பூக்களை கைகளாலே நீக்கி விடலாம். சற்று முற்றிய பூக்களை உளி, கத்தி கொண்டு நீக்கலாம். ஆரம்ப கட்டங்களில் குலைகளின் அளவு மிகச்சிறியமாக இருப்பதாலும், அவற்றின் எண்ணெயின் அளவு மிகக் குறைவாக இருப்பதாலும் பூ நீக்கம் தேவைப்படுகிறது. மேலும் பாமாயில் மரம் வீரியமாகவும் அடிப்பகுதி பெருத்தும், போதுமான வேர்த் தொகுப்புடன் வளர்வதற்கும் பிற்காலத்தில் விளையும் பழக்குலைகள் மற்றும் மட்டைகளின் எடையைத் தாங்கும் சக்தியை மரம் பெறுவதற்கு வசதியாக கவாத்து செய்தல் இன்றியமையததாகிறது. 3 வருடங்களுக்கு மேற்பட்டு பழக்குலைகளின் அளவு பெரிதாவதால் அவைகள் அறுவடைக்குத் தயாராகி விடுகின்றன.

எண்ணை பனை இலைகளை கழித்தல்

எண்ணை பனை ஒரு மாதத்திற்கு இரண்டு இலைகளை உற்பத்தி செய்கிறது. அதிகமாக உள்ள இலைகளை வெட்டி பராமரித்தல் அவசியம். இது பழக்குலைகள் எளிதாக அறுவடை செய்வதற்கு மிக முக்கியமாகும். எனவே, 4-7 வயதுள்ள மரத்தில் 48-56 இலைகளும், 8-14 வயதுள்ள மரங்களில் 40-49 இலைகளும் 15 வயதிற்கு மேற்பட்ட மரத்தில் 32-40 இலைகளை பராமரித்தல் அவசியம். தேவையற்ற இலைகளை கழிப்பது மழைக்காலங்களிலும் மற்றும் ஆட்கள் பற்றாக்குறை இல்லாத காலங்களிலும் செய்வது சாலச்சிறந்தது.

எண்ணை பனை மரத்தில் மகரந்த சேர்க்கை

எண்ணை பனை மரங்களில் ஆண் பூ, பெண் பூ தனித்தனியாக தோன்றுவதால் ஆண் பூவில் உள்ள மகரந்தம் பெண் பூவிற்கும காற்று மூலம் பரவி மகரந்த சேர்க்கை ஏற்படுகிறது. ஆனால் காற்று மூலம் நடக்கும் இம்மகரந்த சேர்க்கை குறைந்த அளவில் ஏற்படுகிறது. அதனால் மகசூலும் குறைவாகவே அதிக அளவு எடைடோவியல் காமரூனிகஸ்  என்ற கூன்  வண்டின் நடமாட்டத்தினால் எண்ணை பனை மரங்களில் அதிக அளவு மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, அதிக மகசூலும் கிடைக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். நம் நாட்டில், இவ்வண்டின் காரணமாக 36 முதல் 56 சதம் வரை அதிகப் பழங்கள் உண்டாகிறது என்று ஆய்வு முடிவுகள்ட கூறுகின்றன.

இந்தச் சிறிய கூன் வண்டு ஆண் பூக்கள் மலர ஆரம்பித்தவுடனேயே பூவிற்கு வரத் தொடங்கிவிடும். இது பூக்கள் முற்றிலும அதன் வாசனைக்கு கவர்ந்து இழுக்கப்பட்டு, ஆண் பூக்களை மொய்த்து விடும். இவ்வாறு அதிக வண்டுகள் மொய்ப்பதால் பூக்களில் இருக்கும் மகரந்தம் காற்றில் சிதறி பெண் பூவிற்கு பரவுவதற்கு ஏதுவாக இருக்கிறது. இவ்வண்டுகள் தங்கள் உடலில் ஒட்டிக்கொண்டு இருக்கும் மகரந்தத்தைதப் பெண் பூவின் வாசனைக்கு கவரப்பட்டு அங்கு செல்லும் பொழுது மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்துகிறது.
இவ்வண்டுகள் மகரந்தத்தை சாப்பிடுவதில்லை. பெண் பூக்களில் வளர்ச்சி பெறுவதும் அதை சாப்பிட்டு சேதப்படுத்தவதும் கிடையாது. இதைத் தவித பாமாயில்  குடும்பத்தை சார்ந்த தென்னை, பாக்கு, பனை மரங்களில் பூக்களை அண்டி வாழ்வதில்லை என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. வண்டுகளை வருடம் முழுவதும் பராமரிக்க வேண்டுமானால்  ஆண் பூக்க்ள தொடர்ந்து இருக்கவேண்டும். எண்ணை பனை தோட்டங்களில் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

பூச்சி நிர்வாகம்

எண்ணைப் பனையானது மற்ற நாடுகளிலிருந்து விதையாகவோ அல்லது சிறு நாற்றகளாகவோ தருவிக்கப்படுவதால் எண்ணை பனை பரவலாக பயிர் செய்யப்படும் நாடுகளிலிருந்து பூச்சிகள் பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இருப்பினும் பனைக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னை, பாக்கு, பனை முதலியவற்றிலிருந்து எண்ணை பனைக்கு பூச்சிகளின் தாக்குதல் பரவ வாய்ப்பு உள்ளது. எண்ணை பனையை தாக்கும் பூச்சிகளில் 14 தென்னை மரத்தைத் தாக்குகின்றன. 19 பாக்கு மரத்தை தாக்குகின்றன. இந்தியாவில் எண்ணை பனையைத்  தாக்கும் பூச்சிகள் பெரும்பாலும மலேசியாவிலும் வடக்கு ஆசிய நாடுகளிலும காணப்படுகிறது.

எண்ணை பனை தாக்கும் பூச்சிகள்

1. காண்டாமிருக வண்டு

காண்டாமிருக வண்டு தென்னை தாக்கும் முக்கிய பூச்சிகளில் ஒன்றாகும். சமீப காலங்களில் இதன் தாக்குதல் எண்ணை பனை மரத்திலும்  தென்படுகிறது. வளர்ந்த வண்டானது எண்ணை பனையின் குருத்து பகுதியியல் சென்று சேதம் விளைவிக்கிறது. இதனால் தாக்கப்பட்ட மரத்தில் இருந்து வெளிவரும் இலையானது சேதமுற்று காணப்படும். பராமரிப்பு சரிவர செய்யப்படாத எண்ணை பனை தோட்டங்களில் இவ்வண்டின் தாக்குதல் பெருமளவு காணப்படுகிறது. அறுவடைக்கு முழுமையாக வராத பெண் பூக்களின் குவியல், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் மட்டைகள் பழங்களைப் பிரித்தபின் மீதமுள்ள குலைகளின் குவியல் ஆகியவைகளில் இவ்வண்டு உற்பத்தியாகும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  1. வயலில், மட்டைகள், ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் காய் பிரித்த பின் மீதமுள்ள பகுதி இல்லாமல் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
  2. காண்டாமிருக வண்டு தாக்குதலுக்கு உண்டான  எண்ணை பனைகளில் குறிப்பாக இளம் பனைகளில் தாய் வண்டுகளை அதற்கென பிரத்யேகமாக உள்ள வண்டுகளை குத்தி எடுக்கும் கம்பிகளை பயன்படுத்தி அழிக்க வேண்டும்.
  3. கரும்புச்சாறு அசிட்டிக் அமிலம், ஈஸ்ட்  முதலியவற்றினைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிவப்பு கூன் வண்டுகளை மெட்டாரைசியம் மற்றும் வைரஸ் கிருமிகளான பாக்குகனோ வைரஸ் (Baculovirus) முதலியவற்றை பயன்படுத்தலாம்.
  4. ஒரு எண்ணை பனை ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு பாச்சை (நாப்தலின்) உருண்டை என்ற விகிதத்தில்  மட்டையின் இடையில் வைப்பதன் மூலம் காண்டாமிருக வண்டு தாக்குதல் தடுக்கலாம்.

சிவப்பு கூன் வண்டு

சிவப்பு கூன் வண்டானது, எண்ணை பனை பயிர் செய்யப்படும் அனைத்துப் பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும் மரமானது முழுவதுமாக காய்ந்து மடிந்து விடுகிறது. இவ்வண்டின் புழுக்களானது பனையின் தண்டுப் பகுதியின் உட்பகுதியியல் உண்ணுகின்றன. இலைகள் மஞ்சளாகி கொஞ்சம் கொஞ்சமாக மரம் முழுமையாக காய்ந்து விடுகின்றது.

கட்டுப்படுத்தும் முறைகள்

வயலை சுத்தமாக பராமரிக்கவேண்டும். ஊடுபயிரை நெருக்கமாக பயிர் செய்யக்கூடாது.

சிவப்பு கூன் வண்டு தாக்குதலுக்குள்ளான எண்ணை பனையில் சேதாரம் அதிகபட்சம் காணப்படும் சூழலில் மரம் ஒன்றுக்கு 5 முதல் 8 மில்லி மேனோ குரோட்டோபாஸ் மருந்தினை ஊசி மூலம் செலுத்தி கட்டுப்படுத்தவேண்டும்.

எலித் தொல்லை

எண்ணை பனை நாற்றாங்காலில் எலிகளின் தொல்லைகள் அதிகமாக காணப்படுகின்றது. இதனால் கன்றுகளுக்கு பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்த சிங் பாஸ்பேட், அலுமினியம் பாஸ்பேட், டையலான் போன்ற எலி மருந்துகளை பயன்படுத்தலாம். மேலும் எலிகளை பிடித்து அழிக்க பிரத்யேகமாக உள்ள கிட்டிகளை பயன்படுத்தலாம்.

நோய்கள்

எண்ணை பனை நம் நாட்டிற்கு ஒரு புதிய பயிர். இதில் பலவிதமான நோய்களின் தாக்குதல் தென்படுகிறது. அவற்றில் ஒன்று குருத்து அழுகல் நோய் ஆகும. இது குறிப்பிடத்தக்க அளவில் பொருளாதார இழப்பை உண்டாக்குகிறது.

குருத்து அழுகல்

இது இளம் வயது மரங்களில்  அதிகமாகக் காணப்படுகிறது. குருத்து இலையின் அடிப்பகுதியில் மரத்தில் வளரும் நுனித் திசுக்களுக்கு அருகில் ஆரம்பித்து குருத்து இலை முழுவதும் பரவுகிறது. நோய் தாக்கிய குருத்து இலையை பிடித்து இழுத்தால்  கையோடு வந்துவிடும். இந்நோயைக்கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட திசகு்களை முழுவதுமாக மருந்து ஊற்றவேண்டும். செதுக்கப்பட்ட பகுதியும் குருத்துப் பபுதியம நன்கு நனையும் படி 0.1 சத கார்பன்டாசிம் மருந்து ஊற்றவேண்டும். நோய் கட்டுப்படுத்தப்பட்டு மரங்களில் ஆரம்பத்தில் புதிதாக வெளிவரும் இலைகள் சிறியதாகவும் வளைந்தும் காணப்படும். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு தான் இலைகள் நல்ல வளர்ச்சியுடன் வெளிவரும்.

இலைப்புள்ளி நோய்கள்

கர்வுலேரியா என்கிற பூஞ்சாளத்தினால் ஏற்படும் இலைப்புள்ளி நோயில் குருத்து மற்றும் இளம் ஓலைகளில் சிறிய வட்டமான மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். இந்தப் புள்ளிகள் பெரிதாகி பழுப்பு நிறத்திற்கு மாறி இலைகள்  காய்ந்து விடும். பெஸ்டோலாஷியாப்ஸிஸ் என்ற பூஞ்சாளத் தாக்குதலால், இலைகளின் ஒழுங்கற்ற பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும். புள்ளிகளின் மையப்பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். புள்ளிகளின் மேல் கறுப்பு நிறப்பூசண வித்துக்கள் காணப்படும். நோய் தீவிரமடையும்போது புள்ளிகள் பெரிதாகி,  பல புள்ளிக்ள மேல் கறுப்பு நிற பூசண வித்துக்கள் காணப்படும். நோய் தீவரமடையும்போது புள்ளிகள் பெரிதாகி, பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து, ஓலை கருகிவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எடுத்து எரித்துவிட்டு 0.2 சத மான்கோசெப் மருந்து தெளிக்கவேண்டும்.

கொல்லாண்ட்

மண்ணில் ஈரம் குறையும்போது இந்த இடர்பாடு ஏற்படுகின்றது. நாற்றாங்காலில் எல்லாப் பருவங்களிலும் இந்த இடர்பாடு காணப்படும் என்ற போதிலும் முதல் நாற்றாங்காலில் இது அதிகமாகக் காணப்படும். மழை இல்லாத காலத்தில் நடவு ளவயலில் நடும் போதும் இந்த இடர்பாடு காணப்படும். இந்த இடர்பாடினால் ஓலைகள் சரியாக விரியாது. ஓலைகளின் மத்தியில் நூலாக கட்டி வைத்து போன்ற ஒரு சுருக்கம் காணப்படும். ஓலைகளின் நரம்பு புடைத்து காணப்படும். இலைகள் நிமிர்ந்து நேராக நிற்கும். நீர்ப்பாசனம் செய்வதின் மூலம் இந்த இடர்பாட்டினை நீக்கலாம்.

அறுவடை

எண்ணை பனை பழக்குலைகளை சரியான நேரத்தில் செய்வது மிகவும் அவசியம். அதன் மூலம் எண்ணையின் மேம்படுத்தப்படுகிறது. எண்ணைப் பனை நட்ட நான்கு வருடங்களிலிருந்து பரன கொடுக்கத் துவங்குகிறது. சுமார் 25 வருடம் வரை பலன் கிடைத்துக் கொண்டே இருக்கும். எண்ணை பனைக்குலைகள் நன்கு முதிர்ந்தபின் தக்க சமயத்தில் அறுவடை  செய்யவேண்டும். நன்கு முதிாந்த குலைகளில் .ருந்து ஓரிரு  பழங்கள் மரைத்தின் அடியில் விழுந்துவிடும். அந்தத் தருணத்தில் பழங்கள் மஞ்சள் முதல் கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். பழங்கள் குலையிலிருந்து விழத்துவங்கியவுடன் பழங்களில் எண்ணைச் சத்து அதிகரிப்பது நின்று விடும். ஆதலால் அச்சமயத்தில் குலைகளை அறுவடை செய்யவேண்டும்.

அறுவடை  இடைவெளி

எண்ணை பனை சராசரியாக 7-14 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யவேண்டும். எண்ணைப் பணை குலைகளை மரத்தில் ஏறி அறுவடை செய்ய முடியாது. ஏனெனில் மட்டையில் பெரிய முட்கள் உள்ளன. ஆகவே கீழே இருந்து தான் அறுவடை செய்யப்படவேண்டும். சிறிய மரமாக இருந்தால் கத்தியைக் கொண்டு அறவடை செய்யலாம். அறுவடை செய்வதற்கு முன்பாக குலைக்கு கீழேயுள்ள மட்டைகளை வெட்டிவிடவேண்டும்.  மட்டைகள் இருந்தால் அறுவடை செய்வதற்கு சிரமமாக இருக்கும்.

பெரிய மரத்தில் அறுவடை செய்வதற்கு மூங்கில் அல்லது அலுமினியக் கம்பியில் கத்தியைக் கட்டிக்கொண்டு அறுவடை செய்யவேண்டும். குலையின் தண்டுப்பகுதியை வெட்டினால் குலை கீழே விழுந்துவிடும். அதைப் பிறகு பதப்படுத்துவதற்கு ஆலைக்கு அனுப்பவேண்டும். கீழே விழுந்து பழங்களையும்  சேகரித்துப் பதப்படுத்தலாம். மேலை நாடுகளில்  டிராக்டர்களில் ஏணி பொறுத்தப்பட்டு மரத்திற்கு தக்காவாறு ஏற்றியும், இறக்கியும் அறுவடை செய்யப்படுகிறது.

வரவு - செலவு

எண்ணெய் பனையின் வளர்ப்புக்கு ஆகக்கூடிய வரவு செலவு கணக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை, வேலையாட்களின் கூலி, எண்ணெய் விலை மேலும் பல்வேறு வரவு செலவுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நான்காம் ஆண்டு முதல் பத்தாம் ஆண்டு வரை குலைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதன், பிறகே நிலையான மகசூல் பெறப்படுகிறது. முதலாம் ஆண்டு பாசன செலவு மானாவாரி சாகுபடியில் ஆகும் பாசன செலவை விட மூன்று மடங்கு ஆகும். பாசனத்திற்கு ஆகும் செலவை முதல் அறுவடையில் சரிசெய்து விட முடியும். முதல் அறுவடை நான்காம் ஆண்டு முதல் செய்யலாம். ஆறாம் ஆண்டு முதல் வரவு - செலவைிட அதிகமாக இருக்கும். அதாவது மரக்கன்றுக்கு இடக்கூடிய நீர் இறைப்பு இயந்திரம், மேலும் சொட்டு நீர் பாசன  அமைப்பு இதற்கு ஆகும் செலவை விட அதிகமாக இருக்கும்.

மகசூல்

நல்ல பராமரிப்பில் வளர்க்கப்பட்ட எண்ணை பனை மரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய மகசூல் விபரம்.

எண்ணை பனை மரத்தின் வயது

மகசூல் விபரம்
டன் / எக்டர் / வருடம்

3 முதல் 4 வருடம்

5

4 முதல் 5 வருடம்

12

5 முதல் 6 வருடம்

25

6 முதல் 25 நாட்கள் 30 வருட மகசூல்

30

எண்ணெய் பனை உற்பத்தி செலவு (ரூ. / எக்டர்)

 

செலவு

வேலையாட்கள் @ தினக்கூலி ரூ. 80/-

16,000

உரச்செலவு

12,500

பயிர்பாதுகாப்பு செலவு

400

மொத்த செலவு

28,900

எண்ணெய் பனை வருமானம் (குலைகளின் உற்பத்தியைப் பொறுத்து)

வ.எண்

விபரம்

மகசூல் டன் / எக்டர்

வருமானம் ரூ. / எக்டர்

நிகர லாபம் வருமானம் - செலவு ரூ.15  / எக்டர்

1

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 10 கிலோ குலைகள் காய்த்தால்

14.3

35,750

6,850

2.

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 15 கிலோ எடையுள்ள 12 குலைகள் காய்த்தால்

25.7

64,250

35,350

3.

வருடத்திற்கு ஒரு மரத்திலிருந்து 20 கிலோ எடையுள்ள 12 குலைகள் காய்த்தால்

34.3

85,750

51,850

(ஒரு டன் பழக்குலையின் விலை ரூ. 2500 /-)

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008