தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: சீரகம்

சீரகம் (ஃபியோனிகுலம் வல்கேர்)
ஏபியேசியே

சீரக செடி

இரகங்கள் :கோ 1, கோ 2, யூ எஃப் 32, பி ஃப் 35 மற்றும் குஜராத் சீரகம் 1

கோ 1

மண் : ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும்.

தட்பவெப்பநிலை : குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலையில் நன்கு வளரும்.

பருவம் :

மலைப்பகுதிகளுக்கு : மே - ஜுன்,
சமவெளிப் பகுதிகளுக்கு : அக்டோபர் - நவம்பர்.  அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

விதையளவு
நேரடி விதைப்பிற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றாங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை.

நிலம்  தயார்படுத்துதல்

  • நடவு வயலை நன்றாக உழ வேண்டும்.
  • ஹெக்டருக்கு 10 கிலோ தொழுவுரம் கடைசி உழவின் போது இட வேண்டும்.
  • பாத்திகளை அமைக்க வேண்டும்.
  • முளைக்கும் முன் ஹெக்டருக்கு 1 கிலோ பென்டிமெத்திலின் தெளிக்க வேண்டும்.

நடவு : 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 x  30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.

பயிர்க்கலைத்தல் :
நேரடி விதைப்பு முறையில் 4-5 வார வயதுள்ள நாற்றுகளை 25-30 செ.மீ இடைவெளியில் கலைத்தல் வேண்டும்.

நீர் நிர்வாகம் :
விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்பு, 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கிலோ மணிச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

மேலுரம் : செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை இடவேண்டும்.

பயிர்

இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)

இப்கோ டிஏபி, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

தழை மணி சாம்பல் டிஏபி யூரியா
சீரகம்

அடியுரம்

25

10

0

22

46

மேலுரம்

25

0

0

0

55

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி :
களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை கைக்கிளை எடுக்கவேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினிப் பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல்நோய் : நோய் தோன்றும் போது எக்டருக்கு 25 கிலோ சல்பரை தூவ வேண்டும் அல்லது லிட்டருக்கு 2 கிராம் நனையும் கந்தகம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

சீரக பூ

அறுவடை :
பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துக்களை அறுவடை செய்யவேண்டும். பிறகு இவற்றை வெய்யிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும்.

சீரக விதைகள்


மகசூல் : எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.