||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: சீரகம்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : கோ 1 மற்றும் கோ 2

மண் மற்றும் தட்பவெப்பநிலை : ஆழமான வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மண்ணில் நன்கு செழித்து வளரும். குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 3000 மீட்டர் வரை பயிர் செய்யலாம்.

பருவம் :

மலைப்பகுதிகளுக்கு : மே - ஜுன்,
சமவெளிப் பகுதிகளுக்கு : அக்டோபர் - நவம்பர்  அதிக மழை பெய்யும் காலங்களில் பயிர் செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

விதையும் விதைப்பும்

நேரடி விதைப்பிற்கு எக்டருக்கு 9-12 கிலோ நாற்று விட்டு நடவு செய்ய 3-4 கிலோ, ஒரு எக்டர் நடவு செய்ய நாற்றாங்காலுக்கு 100 சதுர மீட்டர் அளவுள்ள பரப்பு தேவை. தேவைக்கேற்ப மேடைப்பாத்திகள் அமைத்து, விதைகளை பாத்திகளின் மேல் சீராகத் தூவி, கைக்கொத்தினால் மண்ணுடன் நன்கு கலக்கச்  செய்யவேண்டும். விதைகள் முளைக்க 5 முதல் 9 நாட்கள் ஆகும்.

நடவு : 5-6 வாரங்கள் ஆன நாற்றுக்களைப் பிடுங்கி 60 x  30 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்பு, 3 முதல் 4 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும். பிறகு மண்ணின் ஈரத்தைப் பொறுத்து 7 முதல் 15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரமாக எக்டருக்கு தொழு உரம் 10 டன்கள், 25 கிலோ தழைச்சத்து, 10 கீலொ மணிச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

மேலுரம் : செடிகள் பூ விடும் தருணத்தில் எக்டருக்கு 25 கிலொ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)

இப்கோ டிஏபி,  யூரியா இடவேண்டிய அளவு
(கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

டிஏபி

யூரியா

சீரகம்

அடியுரம்

25

10

0

22

46

 

மேலுரம்

25

0

0

0

55

 
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு ஒரு லிட்டர் பென்டிமித்திலின் களைக்கொல்லி தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை கைக்கிளை எடுக்கவேண்டும். 3வது மாதத்தில் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

அசுவினிப் பூச்சி : இப்பூச்சியைக் கட்டுப்படுத்த டைமித்தோயேட் 30 இசி 2 மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல்நோய் : நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் எக்டருக்கு 25 கிலோ தூவும் கந்தகம் மருந்தை உபயோகிக்கவேண்டும்.

அறுவடை

பயிர் 7-8 மாதத்திற்குள் அறுவடைக்குத் தயாராகிவிடும். 10-15 நாட்கள் இடைவெளியில் காய்ந்த பூங்கொத்துக்களை அறுவடை செய்யவேண்டும். பிறகு இவற்றை வெய்யிலில் 4-5 நாட்கள் உலர்த்தி, பின் குச்சியில் தட்டி விதைகளைத் தனியாகப் பிரித்து எடுக்கவேண்டும்.

மகசூல் : எக்டரிலிருந்து 500-750 கிலோ விதைகள் ஒரு வருடத்திற்கு.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008