||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: வெந்தயம்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : கோ 1 ,கோ 2 மற்றும் பூசா எரிலி பன்ஃசிங்

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுள்ள கரிசல் அல்லது அங்ககச்சத்து மிகுந்த மணங்பாங்கான நிலத்தில் நன்கு வளரும். மிதமான தட்பவெப்பநிலை ஏற்றது.

பருவம் : ஜுன்  - ஜுலை மற்றும் அக்டோபர் - நவம்பர்

விதையும் விதைப்பும்

விதையளவு  : எக்டருக்கு 12 கிலோ விதைகள்

விதைப்பு : நிலத்தை நன்கு உழுதபின்பு, 3.5x1 அளவுள்ள பாத்திகளாகப் பிரித்து விதைகளை விதைக்கவேண்டும். விதைக்கும் முன்னர் ஒரு எக்டருக்கு தேவையான விதையுடன் 1.5 கிலோ அசோஸ்பைரில்லம் கலந்து விதைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : எக்டருக்கு 25 கிலோ தொழு உரத்தை கடைசி உழவின் போது இடவேண்டும். மேலும் 30 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 40 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும்.

மேலுரம் : விதைத்த 30 நாட்கள் கழித்து மேலுரமாக எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரத்தை இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள் (கிராம் செடி ஒன்றிற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு
(கிராம் செடி ஒன்றிற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

வெந்தயம்

அடியுரம்

30

25

40

97

45

25

 

மேலுரம்

20

0

0

0

44

0

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பிறகு மூன்றாம் நாளும் அதனைத் தொடர்ந்து 7-10 நாட்களுக்கு ஒரு முறையும் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களை எடுத்தல் : களைகள் முளைக்கும் முன்னர் எக்டருக்கு 700 மில்லி  பெண்டிமித்திலின் களைக்கொல்லி மருந்ஐத 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். பிறகு இரண்டு அல்லது மூன்று முறை களை எடுக்கவேண்டும். பின் 3 மாதம் கழித்து மண் அணைக்கவேண்டும்.

பின்செய்நேர்த்தி : விதைத்த 20-25 நாட்களுக்குப் பிறகு பயிர் களைதல்வேண்டும். களைந்த பயிரை பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

வேரழுகல் :  நோய் தோன்றும் போது 0.5 கிராம் கார்பன்டாசிம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகத்தில் ஊற்றவேண்டும். அல்லது ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி கலந்து  விதைநேர்த்தி செய்து விதைக்கவேண்டும். எக்டருக்கு 50 கிலோ புண்ணாக்கை நோய் தோன்றும் போது இடவேண்டும்.

அறுவடை

விதைத்த 20-25 நாட்கள் கழித்து அறுவடை செய்து பசுங்கீரையாக உபயோகப்படுத்தலாம். 90-100 நாட்களில் விதைகள் உருவாகிவிடும்.

மகசூல் : எக்டருக்கு பசுங்கீரை 4000 - 5000 கிலோ, விதைகள் 500-700 கிலோ.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008