||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: மிளகு
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : பன்னியூர் 1,2,3,4,5 கரிமுண்டா, கொட்ட நாடன், ‚கராஈ சுபகார, பஞ்சமி, பவுர்ணமி, ஒட்டப்பிளாக்கல் 1 , கல்லுவள்ளி, பாலன்கொட்டா, ஐஐஎஸ்ஆர் சக்தி, ஐஐஎஸ்ஆர்தேவம், ஐஐஎஸ்ஆர்கிரிமுண்டா, ஐஐஎஸ்ஆர் மலபார் எக்செல், உதிரன் கொட்டாஈ பன்னியூர் 1 இரகம் வீரிய இரகம் ஆகும். இவ்வகை படர் மரங்களில் எழுச்சியுடன் பற்றி வளரும். ஏனைய வகைகளைக் காட்டிலும் கூடுதல் மகசூல் கொடுக்கவல்லது. பன்னியூர் 5 வகை நிழலைத் தாங்கி வளரும். பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது.

 

மண் மற்றும் தட்பவெப்பநிலை : தமிழ்நாட்டில் மிளகு கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களிலும் மற்றும் கழ்பவானி மலைப்பகுதிகளிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. மிளகு நல்ல வடிகால் வசதியுள்ள மண் வகைகளிலும் பயிராகும். இருந்தாலும் களிமண் பூமியிலும், மணல் சாரியான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராது. மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 முதல் 6.6 வரை இருப்பின் நல்லது. மிளகுக்கு நல்ல மழையும், அதிக வெப்பநிலையும் தேவை. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள மலைப்பகுதிகளில் மிளகு நன்கு வளரும்.

பருவம் : ஜூன் - டிசம்பர், நல்ல மிளகு பொதுவாக மானாவாரியாகவே பயிர் செய்யப்படுகிறது.

இனவிருத்தி : மிளகு, கொடி மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள மிளகு ஒடுக்கொடியினை தாய்ச் செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்யவும். வேர் பிடித்த இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.

விதையும் விதைப்பும்

நாற்றாங்கால் தயாரிப்பு : நல்ல நிழல் இருக்கும், வளமுள்ள தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் 5.6 மீட்டர் நீளமும் கொண் உயரப்பாத்திகள் அமைக்கவேண்டும். மண்ணை நன்கு கொத்தித் தேவையான தொழு உரம், மணல், செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்கவேண்டும்.

விரும்பத்தகள் நல்ல குணங்களைக் கொண்ட தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஒரு கொடிகளை தண்டுத் துண்டுகளாக தேர்ந்தெடுக்கவேண்டும். இவற்றின் பக்கத்தில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்கவேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஒடுகொடிகளை தாய்க்கொடியில் இருந்து வெட்டி நீக்கவேண்டும். பின்பு ஒடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியில் பகுதியை தண்டுத்துண்டுகள் (cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்கவேண்டும். இளசான ஒடு கொடிகளையும், முதிர்ந்த ஒடு கொடிகளையும் தவிர்க்கவேண்டும். பின்னர் ஒடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியர் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தண்டுத் துண்டுகளில் இலைக் காம்பை மட்டும் விட்டு இலைப்பரப்பை நீக்கவேண்டும்.

பின்னர் இத்தகைய தண்டுத் துண்டுகளின் கீழ்ப்பகுதியை 1000 பிபிஎம் இண்டேல் புட்ரிக் அமிலம் கலவையில் சிறிது நேரம் முழ்கவைத்து எடுத்து பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நடவேண்டும்.

பாலித்தீன் பைகளில் (7x5 அங்குல அளவு) 2 பாகம் வளமான மேல் மண், ஒருபாகம் ஆற்று மணல் ஒரு பாகம் தொழு உரம் கலந்த உரக்கலவை பாலித்தின் பைகளில் நிரப்பவேண்டும். உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இடவேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டுத் துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்கவேண்டும். இரு முறை தேவையான அளவு பூவாளியால் நீர் ஊற்றவேண்டும். வளரும் சிறு பதியன்களுக்கு உரமாக 10 லிட்டர் தண்ணீரில் யுஸரியா 40 கிராம் கரைத்து பைக்கு 250 மில்லி என்ற அளவில் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வரவேண்டும். பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்கி, பந்தல் அமைப்பது அல்லது மூங்கலி தப்பைகள், பாலித்தீன் உறை இவைகளைக் கொண்டு கூடாரம் அமைப்பது சிறந்த முறையாகும். பாலித்தீன் பையில் நட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத்தொடங்கி, நடுவதற்குத் தயாராகிவிடும்.

நடவு : முள் முருக்கு, சீமை கொன்னை மற்றும் சில்வர் ஓக், சூபாபுல் ஆகியவை மிளகு பற்றி வளரப் பயன்படுத்தலாம். ஊடுபயிராக மிளகை சாகுபடி செய்யும் போது பலா, கமுகு, தென்னை போன்ற பலன் தரும் மரங்களை படர மரங்களாகப் பயன்படுத்தலாம். முள், முருக்கு, சீமை கொன்னை ஆகியவை வெட்டப்பட்ட தண்டுகள் மூலமாக நடப்படுகின்றன. இத்தண்டுகளை மிளகுக் கொடிகளை நடுவதற்கு ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்னமாக நட்டால் போதுமானது. ஏனைய சில்வர் ஓக், சூபாபல் போன்றவை நாற்றுக்களாகவே நடவேண்டும். நாற்றுக்களை மிளகுக் கொடிகள் நடுவதற்கு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே நடவேண்டும். வேர் விட்ட துண்டுகளைப் படர பயன்படும் மரங்களிலிருந்து 15 செ.மீ தூரம் தள்ளி 50 செ.மீ நீள, அகல, ஆழமுள்ள குழிகளைத் தோண்டி நடவு செய்யவேண்டும். ஜூன் - ஜூலை மாதங்கள் நடவு செய்ய ஏற்றதாகும். செடிகள் வளர ஆரம்பித்தவுடன் அவை படரும் மரங்களில் கயிறுகளால் அல்லது தென்னை ஓலையினதல் கட்டிப் பாதுகாக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு கொடிக்கு 10 கிலோ மக்கிய தொடு எருவுடன் 100 கிராம் தழைச்சத்து, 40 கிராம் மணிச்சத்து மற்றும் 140 கிராம் சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை இருபாகங்களாகப் பிரித்து மே - ஜூன் மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் இடவேண்டும். உரங்களைக் கொடியிலிருந்து 30 செ.மீ தூரம் தள்ளி இடவேண்டும். இராசயன உரங்கள் நட்ட ஒரு மாதம் கழித்து கொடி ஒன்றிற்கு 10 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 25 கிராம் மெக்னீசியம் சல்பேட் இடவேண்டும்.

 

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிராம் / ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் / ஒரு மரத்திற்கு)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

மிளகு

100

100

40

140

154

184

167

நீர் நிர்வாகம்

நீர்பாய்ச்சுதல் வசதி இருந்தால் டிசம்பர் - மே மாதங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை குழிகளைச் சுற்றி நீர் விட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

ஜூன் - ஜூலை மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்கவேண்டும்.

கவாத்து செய்தல்

மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள்  அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் எல்லா பூங்கொத்துக்களை உருவி நீக்கிவிடவேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக்கொடி உருவாக்க தேர்ந்தெடுக்கப்படட இலைகளையும் கிள்ளிவிடவேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர்மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

பூச்சிகள்

பொல்லு வண்டு : மஞ்சளான ஊதா நிறத்துடன் கூடிய இவ்வண்டுகள் மிகச்சிறியதாக இருக்கும். வண்டு மிளகுக்காயின் மேல் தோலைச் சுரண்டித் தின்றுவிடும். வண்டுகளின் புழுக்கள் காயைத் துளைத்து உள்ளே சென்று சேதப்படுத்தும். மேலும் புழுக்கள் மிளகு சரக்காம்பை சேதப்படுத்துவதால் சரம் உதிரும்.

கட்டுப்பாடு : தாக்குதல் உள்ள இடங்களில் ஜூலை மற்றும்  அக்டோபர் மாதங்களில் காய்பிடிக்கும் போதும், பின் ஒருமாதம் கழித்தும் எண்டோசல்பான் 35இசி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீர் 2 மில்லி தெளிக்கவேண்டும்.

இலைக்கழலைப்பேன் : இது இளம் இலை ஓரத்தினைச் சுருட்டி அதனுள் இருந்துகொண்டு சாறை உறிஞ்சும். அதனால் சுருட்டப்பட்ட பாகம் தடித்துவிடும். அப்பாகம் பச்சை நிறமிழற்து இலையின் உருவ அமைப்பு மாறிவிடும். இதனால் கொடியின் வளர்ச்சி குன்றி மகசூல் குறையும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருடன் மோனோகுரோட்டோபாஸ் 1.5 மில்லி அல்லது டைமித்தோயேட் 2 மில்லி அல்லது குளோரிபைரிபாஸ் 2 மில்லி அல்லது பாஸ்போமிடான் 1 மில்லி, இவற்றுள் ஏதாவது ஒன்றிளை புதிய இலைகள் துளிர்விடும் சமயத்தில் மூன்று முறை ஒரு மாதத இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

மாவு மற்றும் செதில் பூச்சிகள் : இவை இலைகளில், கொடிகளில், காய் சரத்திலும் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த 3 மில்லி பாஸ்போமிடான் மருந்துக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

நோய்கள்

திடீத் வாடல் நோய் : மிளகுப் பயிரைத் தாக்கும்நோய்களில் மிக முக்கியமானது வாடல் நோய் ஆகும். நன்கு வளர்ந்த மிளகுக் கொடி திடீரென பட்டுப்போய் விடும். இது ஒரு வகை பூசண நோய் ஆகும். இது ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவக் காற்று மழையினால் அதிகம் பரவுகின்றது. நோய் தாக்கிய 10 அல்லது 15 நாட்களுக்குள் மிளகுக்  கொடி இலை அனைத்தும் உதிர்ந்து இறந்துவிடும். உதிரும் இலைகள் பசுமை நிறம் கொண்டவையாக இருக்கும். தூர் பாகத்திற்கு மிக அருகில் இருக்கும் தளிர் மற்றும் முதிர்ந்த இலைகளில் கருமையாக மாறிவிடும். தூர் பாககம் முதலில் அழுக ஆரம்பித்து பின் வேர்பாகம்  முழுவதும் அழுகி செடி இறந்துவிடும். இந்நோய் கீழ்பழனி மலைகளில் அதிகமாகக் காணப்படும்.

தடுப்பு முறைகள்

  1. மழைக்காலத்தில் இந்நோய் வேகமாகப் பரவுவதால் நல்ல வடிகால் வசதி செய்து, நோயின் தாக்கத்ததைக் குறைக்கவும்.
  2. நாற்றாங்காலில் ஒரு கிலோ மண் கலவைக்கு 1 கிராம் ட்ரைக்கோடெர்மா விரிடி என்ற விகிதத்தில் கலந்து பிறகு நடவேண்டும்.
  3. கொடி ஒன்றிற்கு அரைக்கிலோ  வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
  4. 1 சதவிகித போர்டோக் கலவையை மண்ணில் ஊற்றவேண்டும். வருடத்திற்கு இரண்டு முறை அதாவது மே - ஜூன் மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஊற்றவேண்டும்.
  5. இலை வழியாக ஒரு சதவிகித சூடோமோனோஸ் புளுரசன்ஸ் அளிக்கவேண்டும்.

 அறுவடை

மிளகு நட்ட மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கொடிகள் நல்ல மகசூல் கொடுக்கத் துவங்கும். மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவடும். மிளகுக் கொடியில் 10 சதம் மிளகுக் காய்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த சிவப்பு நிறமாக மாறும் போது அனைத்துமிளகு சரங்களையும் அறுவடை செய்துவிடவேண்டும். நன்கு முற்றிய மிளகுக் காய்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்யவேண்டும். கைகளினால் அறுவடை  செய்தல் வேண்டும். அறுவடை செய்த காய்களை 80 சென்டிகிரேடு கொதி நீரில் 1 நிமிடம் மூழ்கவைத்துபி பின்னா 7-10 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்தி கொதி சூரிய ஒளியில் உலர்த்தி எடுக்கவேண்டும். இவ்வாறு கொதி நீரில் நனைப்பதால் மிளகிற்குச் சீரான அடர் கறுப்பு நிறம் கிடைக்கும்.

மகசூல் : ஒரு வருடத்திற்க ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008