||| | | | | |
தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: பெல்லாரி வெங்காயம்
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்
சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்
வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள் : பெல்லாரி சிகப்பு,  பூசா சிவப்பு, என்பி 53, அர்கா நிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு, அக்ரி பவுண்ஃப் அடர் மற்றும் அர்கா பிந்து.

அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு
அக்ரி பவுண்ஃப் அடர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணல் கலந்து அல்லது வண்டல் மண் கலந்து இருமண் பாட்டு நிலத்தில் நன்கு வளரும். அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாத மிதமான தட்பவெப்பநிலை மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8-6.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : மே - ஜூன்

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 10 கிலோ விதைகள், விதைகளை விதைப்பதற்கு முன்பு 1 கிலோ விதைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லாம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து, நிழலில் 30 நிமிடம் உலரவைத்து பின்பு விதைக்கவேண்டும்.

நாற்றாங்கால் தயாரித்தல் : ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றாங்கால் தேவை. நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ  என்ற அளவில் விஏஎம் என்ற நன்மை செய்யும் பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றாங்காலுக்கு செண்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல வாளிப்பான நாற்றுக்கள் கிடைக்கும். நாற்றாய்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைகளை விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுக்கள் பொரியாமல், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை ஒன்று அல்லது இரண்டு முறை உழவு செய்யவேண்டும். அதிகமாக உழவு செய்தால் வெங்காயம் மண்ணினுள் இறங்கிவிடும்.

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம், 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை இட்டுக்கலந்து விடவேண்டும். பின்பு தேவையான அளவில் பாத்திகள் அமைத்திடவேண்டும். நடவு  செய்யும் முன்னர் ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து 150 கிலோஈ சாம்பல் சத்து, 75 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

மேலுரமிடுதல் : நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக தழைச்சத்து 60 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

பெல்லாரி வெங்காயம்

நடவு செய்யும் முன்னர்

50

150

75

289

46

469

 

நட்ட 30 நாட்கள் கழித்து

60

0

0

0

130

0

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒர தண்ணீரும், பின்னர் மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அறுவடை வரை 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போது நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றம் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு

இலைப்பேன், வெங்காய ஈ, வெட்டுப்புழு போன்றவை வெங்காயத்தை தாக்கி சேதப்படுத்துவதில் முக்கியமானதாகும். கட்டுப்பாடு முறைகளை சின்ன வெங்காயம் சாகுபடி குறிப்பில் காணவும்.

அறுவடை

அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர் பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். சுமார் 75 சதம் தாள்கள் காய்ந்து படிந்தவுடன் அறுவடை செய்யவேண்டும். வெங்காயம் நன்றாக முதிர்ந்த பின் அறுவடை செய்யவேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் ள மாலிக்ஹைட்ராக்சைடு என்ற பயிர் ஊக்கியை 2500 பிபிஎம் என்ற விகிதத்தில் கலந்து இலையின் மேல் தெளிக்கவேண்டும். இந்தப்பயிரி ஊக்கி வெங்காயத்தின் நடுக்குருத்துப் பகுதியை  அடைந்து அறுவடையான பின், சேமித்து வைக்கும்போது முளைக்காதவாறு தடுக்கிறது. இந்த முறையில் நேர்த்தி செய்த வெங்காயங்களை அறுவடை செய்த 6-7 மாதங்கள் வரை முளைத்துவிடாதவாறு சேமித்து வைக்கமுடியும். வெங்காயத்தை நன்றாக காய வைத்துப் பிறகு சேமிக்கவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 140-150 நாட்களில் 15 முதல் 18 டன்கள்.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

துல்லிய பண்ணைய விவசாயிகள்
பயிர் சாகுபடியாளர்கள்
aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்
வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa

பழப்பயிர்கள்
காய்கறிப் பயிர்கள்
வாசனை மற்றும்
மலைத்தோட்டப் பயிர்கள்
மலரியல் மற்றும் நில
எழிலூட்டுதல்
மூலிகை மற்றும்
நறுமணப் பயிர்கள்

 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008