Seed Certification
உளுந்து
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்கு தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரக்திலிருந்து வயலைச் சுற்றி 5 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்.
நிலத் தேர்வு

பாத்தி முறை பூக்கும் நிலை காய் உருவாதல்

விதைப்பு முன் விதை நேர்த்தி
  • நிறம் மாறிய விதைகளைப் தவிர்த்து தாயாதி  விதையின் நிறம் கொண்ட நல்ல விதைகளை மட்டுமே விதைக்கப் பயன்படுத்த வேண்டும்.
  • வண்டு தாக்கிய விதைகளை விதைப்பிற்குப் பயன்படுத்தக் கூடாது.
  • விதைக்குவியலில் 10 சதவீத்திற்கு மேல் கடின விதைகள் இருந்தால் வர்த்தக கந்தக அமிலம் கொண்டு ( 1கிலோவிற்கு 100 மிலி) 2 நிமிடத்திற்கு விதை நேர்த்தி செய்து நன்கு கழுவி நிழலில் உலர்த்தி விதைக்கப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • மானாவாரி விதைப்பிற்கு விதைகளை படினப்படுத்தி விதைத்தல் வேண்டும், பச்சைப் பயிறு விதைகளை 100 பிபிஎம் மாங்கனீசு சல்பேட் கரைசலில் ஒரு பங்கு கரைசலுக்கு 3 பங்கு விதை என்ற அளவில் 3 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் விதையின் முந்தைய ஈரப்பதத்திற்கு வரும் வரை உலர்த்துதல் வேண்டும். உளுந்து விதைகளை 100 பிபிஎம், துத்தநாக சல்பேட் கரைசலில் பச்சைப் பயிறுக்குக் கூறியது போல் கடினப்படுத்தி விதைக்கலாம். (அல்லது)
  • விதைகளை 100 பிபிஎம் மெக்னீசியம் சல்பேட் கரைசல் (பச்சைப் பயிறு) 100 சதவிகிதம் துத்தநாக சல்பேட் கரைசல் (உளுந்து) மற்றும் 3 மணி நேரம் ஊறவைத்து (3 பங்கு விதைகளில் ஒரு பங்கு கரைசல்) பின் பாலிமர் பூச்சு (ஒரு கிலோவிற்கு 3 மிலி) பாலிமரை கொடுத்து கார்பென்டசிம் (ஒரு கிலோவிற்கு 2 கிராம்) 5மிலி நீரில் கலந்து நிறமேற்றுதல் மற்றும் இமிடாகுளோபிரிட் (ஒரு கிலோவிற்கு 1 மிலி) கலந்து விதை நேர்த்தி செய்தல். (ஒருமித்த விதை நேர்த்தி முறை).
  • இரு பயிர்களிலும் இயற்கை வழி விதை நேர்த்தி முறையாக 3 சதவிகிதம் முளை கட்டிய தட்டைப் பயிறு பாலில் 3 மணி நேரம் ஊற வைத்து (ஒரு பங்கு கரைசலுக்கு 3 பங்கு விதை) பின் உலர்த்தி விதைகளை விதைக்க வேண்டும்


உர மேலாண்மை

  • நைட்ரஜன் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரக் கலவையினை ஒரு ஹெக்டேருக்கு 25:50:25 கிலோ என்ற அளவில் 5 கிலோ (ஒரு ஹெக்டேருக்கு) நுண்ணூட்டக் கலவையுடன் சேர்த்து இடுதல். இம்முறை விதை வடிவமைப்பு நிலக்கரி படிவு மண் வகைகளுக்கும் ஏற்றது.

இலைவழி உரம் தெளித்தல்

  • நாப்தலின் அசிடிக் அமிலத்தை 40 பிபிஎம் என்ற அளிவல் முதல் பூக்கள் பூக்கும் பருவத்தில் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் தெளிப்பதால் பூக்கள் உதிர்வதைத் தடுக்கலாம். நாப்தலின் அசிடிக் அமிலத்தை பூச்சி மற்றம் பூஞ்சாண கொல்லிகளுடன் கலந்தும் உபயோகிக்கலாம்.
  • இரண்டு சத டை அமோனியம் பாஸ்பேட் அல்லது 0.1 சத பிராசினோலாய்டு கரைசலை முதல் பூக்கள் பூக்கம் பருவத்தில் ஒரு முறையும் 15 நாட்கள் கழித்து இரண்டாவதாக ஒர் முறையும் இலை வழி மூலம் தெளிப்பதால் விதை பிடிப்புக் கூடும்.


அறுவடை
  • உளுந்து பயிரில் 50 சத பூக்கள் பூத்த 30 நாட்களுக்குப் பின் 80 சத காய்கள் ,உளுந்துப் பயிரில்  கருப்பு நிறமாகவும் மாறும் போது அறுவடை செய்தல் வேண்டும்.
  • அறுவடையின் போது காய்களின் ஈரப்பதம் 17 முதல் 18 சதமாக இருக்கும், பின் காய்களை 13 முதல் 15 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்.
  • இரகங்களின் பூக்கும் பருவம் நீண்டதாக இருப்பின் காய்களைப் 2-3 பறிப்புகளாக அறுவடை செய்தல் வேண்டும்.
விதைகளைப் பிரித்தெடுத்தல்
  • காய்களிலிருந்து விதைகளை, வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்தும், பயிறு வகைக் காய்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுக்கம் இயந்திரங்களின் மூலமாகவும் பிரித்து எடுக்கலாம்.

காய் முதிர்ந்த நிலை

உலர வைத்தல்
  • விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதத்திற்கு உலர வைத்தல் வேண்டும்.
விதைச் சுத்திகரிப்பு
  • விதைகளை 7×7 சதுர கண் அளவு கொண்ட (பி.எஸ்.எஸ்.) சல்லடை கொண்டு சலித்து நல்ல விதைகளைப் பிரித்தெடுக்க வேண்டும்.
  • நிறம் மாறிய விதைகளைப் பிரித்து அகற்றி விடுதல் வேண்டும்.

விதை நேர்த்தி

  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்த கலவை கொண்டு விதை நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும். (அல்லது)
  • விதை மற்றும் தானிய சேமிப்பு முறையாக விதைகளை ஊக்குவிக்கப்பட்ட களிமண் நொச்சி, அரப்ப இலைப் பொடிகள், பூச்சிக்காய் மற்றும் சீயக்காய் பொடிகள் (ஒரு 10 மில்லி) போன்ற ஏதாவது ஒன்றுடன் கலந்து சேமிக்கலாம்.
  • விதைகளை 8 சத ஈரப்பதத்தில் 50 சதவிகிதம் கரியமில வாயுவினைக் கொண்டு (50 கிலோ மூட்டைக்கு 4 நாட்கள்) 15 நாட்களுக்கு ஒரு முறை என மூன்று முறை விதை நேர்த்தி செய்தல்

விதைச்சேமிப்பு
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய, இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்.
பிறமேலாண்மை முறைகள்
  • தானிய பயிர்களைப் போன்றே பின்பற்றலாம்

தகவலுக்கு
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.

Fodder Cholam