Seed Certification
துவரை
நிலத்தேர்வு
  • விதை உற்பத்திக்குத் தேர்வு செய்யப்பட்ட நிலம் தான் தோன்றிப் பயிர் அற்றதாக இருத்தல் வேண்டும். அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே இரகப் பயிர் பயிரிடப்பட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிடப்பட்டிருந்தால் சான்றளிப்புத் துறையினால் சான்றளிக்கப்பட்ட அதே இரகமாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்
  • விதை உற்பத்திக்கு விதைப் பயிரானது பிற இரகம் மற்றும் சான்று பெறாத அதே இரகத்திலிருந்து வயலைச் சுற்றி 100 மீட்டர் இடைவெளி விட்டு இருத்தல் வேண்டும்
நிலத்தேர்வு

தழைப் பருவம் பூக்கும் நிலை காய் உருவாதல்

விதைக்கும் முன் விதை நோ்த்தி
  • விதையை நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் (10கி/100 லிட்டர் தண்ணீர்) 3 மணி நேரம் ஊற வைத்து (ஒரு பங்கு கரைசலில் மூன்று பங்கு விதை) பின் நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் மற்றும் 5 மி.லி. தண்ணீர் கலந்த கலவையை விதைகளுடன் நன்றாக கலந்து நிழலில் உலர்த்தவும்.
  • அதன் பிறகு ரைசசோபியம் கொண்டு (ஒரு கிலோவிற்கு 50 கிராம்) முலாம் பூசி விதைக்க வேண்டும்.
இலை வழி உரம் தெளித்தல்
  • பூக்க ஆரம்பித்தவுடனும், பிறகு 15 நாட்கள் கழித்தும் என இருமுறை 2 சத டிஏபி கரைசலை நல்ல விதைப்பிடிப்பிற்காகத் தெளித்தல் வேண்டும்.
  • என்.ஏ.ஏ.(நாப்தலின் அசிடிக் அமிலம்) 40 பிபிஎம்கரைசலை பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும் அடுத்த 15 நாட்களில் மற்றொரு முறையும் பூக்கள் உதிர்வதைத் தடுக்கத் தெளித்தல் வேண்டும்.
  • நாப்தலின் அசிடிக் அமிலத்தை பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லியுடன் கலந்தும் தெளிக்கலாம்.
இலைவழித் தெளிப்பு

அறுவடைக்கு முன் விதைப் பாதுகாப்பு
  • பயிர் வண்டு பாதிப்பைத் தடுக்க அறுவடைக்கு 3 முதல் 5 நாட்களுக்கு முன் 0.07 சத எண்டோசல்பான் 35 இசி அல்லது 0.05 சத மாலத்தியான் 50 இசி பூச்சிக் கொல்லினைத் தெளிக்கவும்.

அறுவடை
  • காய்கள், 50 விழுக்காடு பூக்கள் பூத்த 40 நாட்களுக்குப்பின் அறுவடை செய்யவும்.
  • காய்களை 2-3 பறிப்புகளாக அறுவடை செய்வதால் விதை நலம் மற்றம் தரம் பாதுகாக்கப்படும்
காய் முதிர்ந்த நிலை

விதைச் சுத்திகரிப்பு

  • காய்களை உடனடியாக 12-13 சத ஈரப்பதத்திற்கு உலர்த்தி பின் விதைகளை வளையும் மூங்கில் குச்சி கொண்டு அடித்து பிரித்தெடுக்கவும்.
  • பெரிய விதை கொண்ட இரகங்களை பிஎஸ்எஸ் 5×5 சதுர கண் அளவு கொண்டட சல்லடைகளைக் கொண்டும் சிறிய விதை கொண்ட இரகங்களை பிஎஸ்எஸ் 6×6 சதுர கண் அளவு கொண்ட சல்லடைகளைக் கொண்டும் நல்விதைகளைப் பிரித்து எடுக்கலாம்.
  • உடைந்த மற்றும் நிறம் மாறிய விதைகளை விதைக்காக தேர்வு செய்தல் கூடாது.

உலர்த்துதல்

  • விதைகளை 7-8 சத ஈரப்பதத்திற்கு உலர்த்த வேண்டும்

விதை நேர்த்தி

  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் கார்பென்டாசிம் மருந்தினை 5 மிலி நீரில் கலந்த கலவை கொண்டு விதை நேர்த்தி செய்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
  • விதை மற்றும் தானிய சேமிப்பு முறையாக விதைகளுடன் மஞ்சள் பொடி அல்லது வேப்பிலைப் பொடியினை (ஒரு கிலோ விதைக்கு 50 கிராம் என்ற அளவில்) உலர் கலவையாக கலந்து சேமிக்கலாம்.
  • விதைகளை ஒரு கிலோ விதைக்கு 3 கிராம் என்ற அளவில் ஹாலோஜன் கலவையினை (கால்சியம் ஆக்ஸி குளோரைடு, கால்சியம்  கார்பனேட் மற்றும் அரப்புத் தூள் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்த கலவை) உலர் கலவையாகக் கலந்து வைக்க வேண்டும்

விதைச் சேமிப்பு
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக (8-9 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்.
  • விதைகளின் ஈரப்பதத்தினை 8 முதல் 9 சதமாகக் குறைத்து பின் உள்உறை கொண்ட சாக்குப் பைகளில் மத்திய/இடைக்கால சேமிப்பிற்காக (12-15 மாதங்கள்) சேமித்து வைக்கலாம்
  • விதையின் ஈரப்பதத்தினை 8 சதவிதத்திற்கும் குறைவாக உலர்த்தி 700 காஜ் கன அளவு கொண்ட அடர் பாலித்தீன் பைகளில் நீண்ட கால (15 மாதங்களுக்கு மேல்) சேமிப்பிற்கும் சேமித்து வைக்கலாம்

தகவலுக்கு:
பேராசிரிய மற்றும் தலைவர்,
விதை மையம்
தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர்-641003.
தொலைபேசி எண்:0422-661232.
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2021.

Fodder Cholam