Seed Certification
விதைச்சான்று :: அங்ககச் சான்றளிப்பு

அங்ககச் சான்றளிப்பு

தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நவீன வேளாண்மையால் மண்ணில் வாழும் நுண்ணுயிர் மட்டுமின்றி மண்ணின் வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேளாண் உற்பத்தி குறைந்து விவசாயிகள் கடனாளியாக ஆக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. நவீன விவசாயம் நமது மண், நீர் மற்றும் காற்று ஆகியவற்றையும் மாசுபடுத்தி மக்களின் சுகாதாரமான சூழ்நிலையையும் பெரிய அளவில் பாதித்துவிட்டது.

நவீன வேளாண்மையின் பாதிப்பினால் “அங்கக வேளாண்” முறைகளை விவசாயிகள் மட்டுமின்றி உற்பத்தியாளர்கள், சுத்திகரிப்பாளர்கள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் மத்தியல் வரவேற்பு அதிகரித்துள்ளது. அங்கக வேளாண் உற்பத்தி முறையினால் மட்டுமே சுகாதாரமான, சுவையான, ஊட்டச்சத்து மிகுந்த உணவு மற்றும் வளமான மண், மாசற்ற நிலம், நீர், காற்று ஆகியவற்றை உருவாக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அங்கக உற்பத்திப் பொருட்களுக்கு உள்நாட்டு சந்தையில் மட்டுமின்றி வெளிநாட்டு சந்தையிலும் அதிக தேவை இருப்பதால் வேளாண் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்க வழிவகை உண்டு.

ஆ) அங்ககச் சான்றளிப்பு

ஆய்வு மற்றும் சான்றளிப்பிற்காக தமிழ்நாடு அரசாங்கம் தனித் துறையை மே மாதம் 2007 அன்று நிறுவியுள்ளது. இந்த நிறுவனம் இந்த தேசிய அரசாங்கம் வருடம் 2000 ன் கீழ் செய்யப்பட்டு வருகிறது. இது அக்டோபர் மாதம் 2001 ம் வருடம் பன்னாட்டு வாணிபம் மற்றும் வளர்ச்சி விதியின்படி அங்கீகாரம் பெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அங்ககச் சான்றளிப்பு விதைச்சான்று இயக்குநரகம் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமைச் செயலகம் கோயமுத்தூரில் உள்ளது.

அங்ககப்பண்ணையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள், கால்நடை ஒட்டுமொத்த தீவனம் மற்றும் மரபுவழி உயிரினங்கள் உட்படுத்தப்படாத பண்ணைக்கு மட்டும் அங்ககச் சான்றளிப்பு வழங்கப்படுகிறது.

ஆய்வு மற்றும் சான்றிப்பு பணிகள் மட்டும் இல்லாமல் இந்த நிறுவனம் தரக்கட்டுப்பாட்டு கையேடு பயிற்சி மற்றும் இந்தியத் தரக்கட்டுப்பாமு 65க்கு இணையான பொதுவான தரக் கையேடு ஆகியவற்றை வெளியிடுகின்றன. அபிடா (வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனம், புதுடில்லி மற்றும் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம், இந்திய அரசாங்கம் ஆகியவற்றிடமிருந்து அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கக சான்றளிப்புத் துறை பதிவுசெய்யப்பட்ட அங்கக விவசாயிகளுக்குத் தேவையான தரம், மற்றும் செய்முறை சம்பந்தப்பட்ட பயிற்சியை அளித்து வருகிறது.

கட்டண விபரம்

சான்றிதழ் பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்திற்கான பதிவு கட்டணம் முறையே ரூ .25 மற்றும் ரூ .5, 000, 000

தொடர்புக்கு

விதைச் சான்றிதழ் இயக்குநரகம்,
1424-தடாகம் சாலை,
G.C.T. போஸ்ட்,
கோயம்புத்தூர் 641 013.
தொலைபேசி:0422- 2432984.

Updated on: Feb, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam