முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை

நாவல் மரத்தில் நல்ல பலன் கிடைக்கிறது

சி .ஐ.ஜெயக்குமார்,
கொடைரோடு
மெட்டூர் ,
தொடர்பு எண் : 98659 25193.

கொடைரோடு மெட்டூரை சேர்ந்த விவசாயி சி ..ஜெயக்குமார் ஒரு ஏக்கருக்கு நாவல்பழ சாகுபடி செய்தார். 96 மரங்கள் உள்ளன . சாதாரணமாக நாவல் மரங்கள் 30 முதல் 35 அடி வரை வளரும் . அவர் ஆண்டுதோறும் கவாத்து செய்வதால் 15 அடி உயரமுள்ள செடிகளாக வளர்ந்துள்ளன . இயற்கை முறையில் உரமிடுகிறார். அசோஸ்பைரில்லம் , ரைசோபியம், சூடோமோனாஸ், மாட்டு எலும்பு சாம்பல், பஞ்சகாவ்யம் போன்ற இயற்கை நுண்ணூட்ட சத்துகளை பயன்படுத்துகிறார் . நோய் தாக்குதலை தவிர்க்க இஞ்சிச்சாறு, மஞ்சள் பொடியை பயன்படுத்துகிறார் . நான்கு ஆண்டுகளில் இருந்து பழம் காய்க்கின்றன . ஒரு மரத்தில் 60 கிலோ வீதம் ஏக்கருக்கு 5.5 டன் கிடைக்கிறது . சாதாரணமாக ஒரு ஏக்கரில் 2 டன் மட்டுமே மகசூல் கிடைக்கும் . பழம் 5 கிராம் மட்டுமே இருக்கும் . பறிக்கும்போதே பாதி பழங்கள் சேதமாகிவிடும் . இங்கு ஒரு பழம் 17 முதல் 20 கிராம் இருக்கிறது . யரம் குறைவாக இருப்பதால் பழங்களை சேதமின்றி பறிக்கின்றனர் . விவசாயி கூறியதாவது : ராஜமுந்திரியில் "ஜம்பு ' ரக நாவலை வாங்கி வந்து பயிரிட்டேன் . ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது. ஒவ்வொரு மரமும் 22க்கு 22 அடி இடைவெளி உள்ளது . அதிக தண்ணீர் தேவை யில்லை . 15 நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்சுவேன் . மே முதல் ஜூலை வரை பழங்களை பறிக்கிறோம்.   நாவல் மரத்தை பொறுத்தவரை ஒரு ஆண்டு நல்ல விளைச்சலும், அடுத்து ஆண்டு அதில் பாதி மட்டுமே கிடைக்கும் . ஒரு கிலோ ரூ. 150 க்கு விற்கிறோம் . சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறேன். எங்கள் பண்ணையில் "நாவல் ஜூஸ் ' தயாரிக்கிறோம் . 700 மி .லி. , ஜூஸ் பாட்டிலை ரூ . 170 க்கு விற்கிறோம் . ஆண்டிற்கு குறைந்தது ரூ. 5 லட்சம் வரை லாபம் கிடைக்கும், என்றார்

Updated on April, 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015