தவேப வேளாண் இணைய தளம் ::அணுகுமுறைகள்

வளம் குன்றா வேளாண்மைக்கான கொள்கைகள் - இந்தியா

இந்திய அரசின் கொள்கைகள் பொதுவாக உணவு தானியங்கள் தன்னிறைவு பெறுவதையே வலியுறுத்தும். ஆனால் வேளாண்மையை நிலைபெறச் செய்ய முக்கியத்துவம் தருவதில்லை. 1970 மற்றும் 1980 களில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறும் வகையில் வளர்ந்து, 1990களில் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையை 2000 -ம் ஆண்டில் மிகவம் மோசமடைந்தது. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி மற்றும் உணவு தானிய உற்பத்தி 2000-01 லிருந்து 2002-03 வருட காலங்களில் (இந்திய அரசு, 2002) எதிர்மறை வளர்ச்சியை காண்பித்தது. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறைவு என்பது மிக முக்கியமான பிரச்சனையாக மாறியது. அதனால், வளம் குன்றா வேளாண்மை வளர்ச்சிக்கான அணுகுமுறைகள் மிக முக்கியமானது. இந்த ஆய்வு இந்தியாவின் எதிர்கால உணவு தன்னிறைவை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல்  சர்வதேச சந்தைகளின் விளைவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட வேண்டும்.

இந்திய வேளாண்மையின் சுற்றுச்சூழல் சவால்கள்
இந்திய வேளாண்மையின் சவால், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணித்து, உற்பத்தியை அதிகரித்தலாகும். நிலம், நீர் மற்றும் காற்று போன்ற வேளாண் செயல்திறனை நிர்ணயிக்கும் வளத்தின் தரத்தை பாதுகாப்பதில் அடங்கும். இருப்பினும் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது மகசூல் குறைப்புகள், ஓரளவு நிலம் மற்றும் நீர் சுரண்டல் விளைவாக இருக்கலாம். மகசூல் குறைவு பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது, நிலம் மற்றும் நீரின் சுரண்டலினாலும் இருக்கலாம்.
நிலம் தரமிழப்பு இந்திய விவசாயத்தின் ஒரு முக்கிய பின்னடைவு. 1980 களின் ஆரம்பத்தில் தோராயமாக 53 சதவீதம் (173.6 மில்லியன் ஹெக்டேர்கள்) இந்திய புவியியல் பகுதியில் வேளாண் அமைச்சகத்தின் படி தரமிழந்த நிலமாகக் கருதப்பட்டது (GOI, 2001a): நீர் தேங்கி சாகுபடி பரப்பு சுமார் 6 சதவிகிதம் பாதிக்கப்படும் போது கார மற்றும் அமில நிலங்கள் இரண்டும் சேர்ந்து சுமார் 3 சதவிகிதம் பாதிக்கப்படும். நில சீரழிவின் முக்கிய செயல்முறையாக மண் அரிப்பு இருக்கிறது (நீர் மற்றும் காற்றின் அரிப்பு காரணமாக) (GOI, 2001a). தேசிய தொலை உணர்வு முகமை (NRSA) தொகுத்த தரவுகள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதம் (2000 NRSA) தரமிழந்த சாகுபடி செய்யக்கூடிய பாலைவன நிலத்தைக் கொண்டதாகும் என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு, மனித நடவடிக்கைகள் மூலம் தரமிழக்கப்பட்டது, கிட்டத்தட்ட அரைப்பங்கு மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் (2000 NRSA) தரமிழக்கப்பட்டது. சாதா ஈ.டி.ஏ.எல்.(2004), 1980 மற்றும் 1990 களில் நிலம் தரமிழத்தல் மற்றும் உணவு தானிய உற்பத்திக்கிடையே ஒரு எதிர்மறை மற்றும் குறிப்பிடத்தக்க எதிர்மறை உறவு காணப்படுவதைக் கண்டுபிடித்தது.
இந்திய விவசாயத்தில் நீர் மற்றொரு முக்கிய காரணியாகும். விவசாயம், பாசனம் மூலம், (2003 வியாஸ்) 1990 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த நீரின் பயன்பாடு 83 சதவீதம் ஆகும். பசுமைப் புரட்சியின் போது, விவசாயத்தில் தண்ணீர் உபயோகம் கடுமையாக உயர்ந்தது,  1970-71 மற்றும் 2000-01 இடையே 31.1 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 54.68 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்த போது ஒரு தடவைக்கு மேல் பாசனம் பெறும் பரப்பு 7.09 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 20.46 மில்லியன் ஹெக்டேராக இதே காலத்தில் அதிகரித்தது. நிலத்தடி நீர், பாசன இந்தியாவின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று, அது துரிதமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரின் இருப்பை விட 85 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் எடுப்பது 1984- 85 மற்றும் 1998-99 க்கு இடையே 5700 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் 253 லிருந்து 428 இருண்ட தாலுக்காக்களாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறையும் பிரச்சினை ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மானாவாரி மாநிலங்களில் காணப்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அமைப்புகள் அறிமுகம், கூடுதலாக அதிகமான தண்ணீரின் பயன்பாட்டை ஊக்குவித்தல் என்றால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களைப் போன்ற இடுபொருட்களின் பயன்பாடுகள் ஆகும். 1970 மற்றும் 2002 க்கும் இடையில் உரத்தின் பயன்பாடு ஐந்து மடங்கு உயர்ந்து 17360 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. ரசாயன ஊட்டச்சத்துக்களின் சமச்சீரற்ற விகிதம் இந்திய உர பயன்பாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பூச்சிக்கொல்லியின் பயன்பாடு  1970-71 ல் 24.32 மில்லியன் டன்னிலிருந்து 1999-00 ல் 46.2 மில்லியன் டன் வரை அதிகரித்துள்ளதுடன்  1988-89ன்  போது 75.42 மில்லியன் டன் என்ற உச்ச பயன்பாடாக இருந்தது. (சி.எஸ்.இ. 1999). அதிக மகசூல் விதை வகைகள் ஒரு பயிர்சாகுபடிக்கும்  விவசாயிகளின் ஒரே நேரத்தில் பல பயிரிடும் நெகிழ்வுத் தன்மையும்  விவசாய பல்லுயிர் வகைகளும் குறைய வழிவகுக்கிறது.
இந்திய அரசாங்கம் மேலாண்மை மற்றும் முதல் ஐந்து வருடத் திட்டத்திலிருந்து விவசாய அபிவிருத்தி வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தை உணர்ந்தது என்றாலும், ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளே போதுமானதாக இருந்திருக்கும். உதாரணமாக, அரசாங்கத்தின் முயற்சிகளால் மட்டுமே தரமிழந்த மொத்தப் பரப்பில் 17.28 சதவீதம் மறு உற்பத்தி செய்ய முடிந்தது. (173.6 மில்லியன் ஹெக்டேர்; ஜி.ஓ.ஐ.2001ஏ). இந்தியாவின் தேசிய விவசாய கொள்கை (என்.ஏ.பி.) (2000 ஜி.ஓ.ஐ.) மேலாண்மை மற்றும் வளங்களைப் பாதுகாத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கொள்கையை நாட்டின் இயற்கை, பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தரமுள்ள சூழல்  மற்றும் நாட்டின் இயற்கை வளங்களில் சமூகத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட பயன்பாடுகளான நிலம், நீர் மற்றும் மரபணு மானியம் நிலையான வேளாண்மை மேம்பாட்டிற்காக உயர்த்துகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என்.ஏ.பி. நிலம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தல், நீரின் பயன்பாடு மற்றும் தரத்தை மேம்படுத்தல் மற்றும் விவசாய சமூகத்தின் உணர்வு (ஜி.ஓ.ஐ. 2000) உயர் முன்னுரிமை பெறும் என்று கூறியது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம் (2002 ஜி.ஓ.ஐ.), 2002 முதல் 2007 வரை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மறு உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் நிலத்தடி நீர் சுரண்டலைக் கட்டுப்படுத்தல், நீர்பிடிப்பு பகுதி மேம்பாடு, நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மேலாண்மை மூலம் இயற்கை வள மேலாண்மைக்கு  முக்கியத்துவம் கொடுத்தலாகும்.  உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களான பயன்பாடு குறித்து திட்டம்  சொல்வது என்னவென்றால் சரிவிகிதமற்ற தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து  இடுவதால் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை அதிகரிக்கும் மற்றும் மண்ணின் அங்கக கார்பனைக் குறைக்கும், முழுமையான விவசாய சூழல் அணுகுமுறை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மையை வலியுறுத்துகிறது.
மேலும், பத்தாவது ஐந்தாண்டு ஆவணம் விவசாயத்தில் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் மேலாண்மையில் ஒரு 'வாய்ப்புள்ள பகுதியாக' அங்கக வேளாண்மை அங்கீகரிக்கப்படுகிறது.
இந்திய வேளாண்மையின் சோதனை, எதிர்கால வேளாண் வளர்ச்சி மற்றும் உற்பத்தியையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இல்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில்  நிலையானதாக எடுத்துச்செல்வதாகும். சுற்றுச் சூழல் சவால், குறிப்பாக நிலம் தரமிழப்பு, நிலத்தடி நீர் சுரண்டல், நீர் தேங்குதல், வேதி வேளாண் இடுபொருட்களின் அதிகமான பயன்பாடு எதிர்கால வேளாண்மையின் முன்னால் உள்ள பிரச்சினைகள். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர,அங்கக வேளாண்மை உள்பட நிலையான வேளாண்மையை மேம்படுத்த வலியுறுத்தும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர, வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் மற்றும் கொள்கைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. வேளாண் இடுபொருட்களை வளங்குன்றாமல் வைத்திருப்பதில் அங்கக வேளாண்மை கடினமான பணியாகும், இது நிறைய கொள்கை நடவடிக்கைகளுடன் சந்தை முன்னேற்றத்திற்கு தேவையான தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு பல பிரச்சினைகளில் சம்பந்தப்படுகிறது. இந்திய வேளாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும் சிறு குறு விவசாயிகளை ஒன்றிணைப்பதாகும். ஆனாலும், சிறு குறு விவசாயிகள் அங்கக வேளாண்மை செய்பவர்கள் என கருதப்படுகிறார்கள், கடுமையான வளச் சிக்கலினால்
அங்கக வேளாண்மையை ஒருபடி முன்னே எடுத்துச் செல்லலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013