மதிப்பூட்டுதல்

மஞ்சள் வேகவைக்கும் கலன்

பயன்

:

நீராவி மூலம் மஞ்சள் கிழங்கை வேகவைப்பதற்கு ஏற்றது.

திறன்

:

நாள் ஒன்றுக்கு 16 குவிண்டால்.

விலை

:

ரூ. 10,000 /-

 

அமைப்பு

:

இக்கலனில் 20 கேஜ் தின்னம் கொண்ட இரும்புத்  தகட்டினாலான தொட்டி உள்ளது. சல்லடைகளலால் ஆன இரண்டு  முதல் நான்கு பாத்திரங்கள் இதனுள் உள்ளன. உட்பாத்திரங்களில் நீரில் நன்கு கழுவிய மஞ்சள் கிழங்கையிட்டு, வெளிப்பாத்திரத்தில் 2 அங்குலம் வரை தண்ணீரை ஊற்றவேண்டும். இந்தக்கலனுக்கு ஏற்ற அடுப்பு ஒன்றின் மீது வைத்து தீயிடவேண்டும். வெளிப்பாத்திரத்தில் உள்ள நீர் ஆவியாவி, நீராவி உள்பாத்திரங்களை அடைகிறது. இதனால் கிழங்குகள் நீராவியால் வேகவைக்கப்படுகின்றன. 15 நிமிடங்களில் மஞ்சள் வெந்தபிறகு உட்பாத்திரத்தை  சுலபமாக வெளியே எடுத்து அடுத்தமுறை மஞ்சளைப்போட்டு உள்ளே வைக்கலாம். ஆவியான அளவிற்கேற்ப தண்ணீர் மீண்டும் சேர்க்கப்படவேண்டும். இதனால் நேரமும் எரிபொருளும் மிச்சமாகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

நல்ல நிறம் கிடைக்கும்.
எரிபொருள் சிக்கனம்.
உலரும் நேரம் குறைவு.

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015