முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்


பாக்குத் தோப்புகளில் பூஞ்சான மருந்து தெளிக்கும் கருவி

பயன் : பாக்கு மரங்களில் மருந்து தெளிக்க
திறன் : மணிக்கு 20 மரங்கள்
பரிமாணம்: 600 x 600 x 1500 மி.மீ
எடை: 22 கிலோ
தேவையான ஆட்கள்: மூன்று நபர்கள்
விலை :
 ரூ.15,000/-

அமைப்பு

இத்தெளிப்பானில் ஒன்றுக்குள் ஒன்று செல்லக்கூடிய இரண்டு 8 மீட்டர் அலுமினியக் குழல்கள் உள்ளன. இக்குழல்கள் ஒரு தாங்கு சட்டத்தின் மையத்தில் நேராக நிறுத்தி உயர்த்தலாம். அலுமினியக் குழல், சட்டத்தின் மத்தியில் எளிதாக சுழலும் வண்ணம் அமைந்துள்ளது, மருந்தை பூச்சி அடிக்கும் தெளிப்பான முனை குழாயின் மேல் முனையில் பதப்பட்டுள்ளன. உட்குழலானது வெளிக் குழலின் உள்ளே அடங்கி உள்ளது. ஒரு கையினால் சுழலும் கப்பியின் மூலம் மெல்லி எஃகு கம்பியினால் உட்குழலை மேல் நோக்கி ொருத்தப்பட்டு 8 மீட்டரிலிருந்து 15 மீட்டா் வரை உயர்த்தப்படுகின்றது. தெளிப்பான் முனையை காற்றழுத்தத்தால் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்பினாலும் மேலும் கீழும் நகர்த்தலாம். இதனால் தரையில் இருந்து கருவியை இயக்குபவர் பூஞ்சானம் மருந்தை விரயமாகாமல் பாக்குக் குலையில் படும்படி தெளிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள் :

  • எளிதாக எடுத்துச் சென்று உபயோகிக்க இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தெளிப்பானை பாக்கு, தென்னை மற்றும் பாமாயில் மரங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தலாம்
  • தெளிப்பானை சுமார் 18 மீட்டர் வரை உயரமுள்ள மரங்களுக்கு பயன்படுத்தலாம்.

 

 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016