பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்

நன்செய் நிலங்களில் நேரடி நெல் மற்றும் தக்கைப்பூண்டு விதைக்கும் கருவி

பயன் : ஒரே சமயத்தில் மூன்று வரிகள் நெல் மற்றும் மூன்று வரிகள் தக்கைப் பூண்டு விதைகளை நேரடியாக நன்செய் நிலங்களில் விதைக்கலாம்
மொத்த பரிமாணம் : 1650 x 1600 x 690 மி.மீ
திறன் : நாளொன்றுக்கு 0.8 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்                       
விலை : ரூ.6000/-
எடை : 15  கிலோ

அமைப்பு : இக்கருவியில் இரண்டு உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப் பெட்டிகளில் 150 மிமீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. கருவியின் நடுவில் 600 மிமீ வட்டமுள்ள சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஒருவர் இழுத்துச் செல் கைப்பிடி ஒன்றும் உள்ளது. சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கேற்ப இரண்டு வழுக்குத் தகடுகள் உள்ளன.

சிறப்பு அம்சங்கள் :

  • நெல் நாற்று நடவு தவிர்க்கப்படுகிறது. தனியே பசுந்தாள் பயிரிடுவதும் தவிர்க்கப்படடுகிறது.
  • இதனால் எக்டருக்கு ரூ.3000 வரை சாகுபடி செலவு குறைகிறது.
  • நெல் வரிசைகளுக்கு இடையே பசுந்தாள் உரப்பயிர்கள் வளருவதால் களைகள் வளருவது கட்டுப்படுத்தப்படுகிறது.
  • நெல் வரிசைகளில் விதைக்கப்படுவதால் கருவிகளைக் கொண்டு களை எடுப்பது எளிதாகிறது.
  • நாற்று நடும் போது நாற்றுகளுக்கு உண்டாகும் அதிர்ச்சி தவிர்க்கப்படுகிறது. இதனால் பயிர் பத்து நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடுகிறது.