Agriculture Engineering
பண்ணைக் கருவிகள் :: களை எடுக்கும் கருவிகள்


எஞ்சினால் இயங்கும் களை எடுக்கும் கருவி

 

பயன்       : வரிசைப்பயிர்களில் களை எடுப்பதற்கு பயன்படுகிறது.
திறன்      : நாளொன்றுக்கு 1 முதல்1.2 எக்டர் வரை களை எடுக்கலாம்
பரிமாணம்: 2400 x 1750 x 1100 மி.மீ
எடை:
200 கிலோ
விலை      : ரூ.100,000/-
அமைப்பு  : இக்கருவி 8.38 குதிரைத்திறன் கொண்ட டீசல் என்ஜினால் இயக்கப்படுகிறது. களையெடுக்கும் அமைப்பானது சுழல் கலப்பை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பை பின்புறம் பொருத்தப்பட்டு, நன்செய் நிலங்களிலர் களை எடுக்க பயன்படுகிறது. இந்தக் கலப்பையில் வளைந்த இரும்புக் கொழுக்களைப் பொருத்தி சுழலும்படி ஏற்பாடு செய்திருப்பதால், மற்ற எல்லா வகையான களையெடுக்குமி கருவிகளைவிட மிகவும் சிறந்த முறையில் நிலத்திலுள்ள களைகள் மற்றும் புல் âண்டுகள் ஆகியவையும் வெட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவதால் மண்ணின் உரத்தன்மையும் அதிகமாகிறது. மேலும் இக்கருவியில் களைவெட்டும் தகடு மற்றும் சால் அமைக்கும் இணைப்புக்களையும் பொருத்திக் கொள்ளலாம். களை வெட்டும் தகட்டின் பின்புறம் உள்ள சக்கரம்ளரே ஆழத்தில் சீராகக் களை எடுக்க உதவுகிறது. களை எடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும் இக்கருவியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பருத்தி, மரவள்ள, மக்காச்சோளம், தக்காளி, கரும்பு போன்ற வரிசைப் பயிர்களில் (குறைந்தது வரிசைக்கு வரிசை இடைவெள 50 செ.மீ. இருக்க வேண்டும்) களை எடுக்க இக்கருவி ஏற்றது. இக்கருவியைக் கொண்டு தென்னை, பாக்கு மற்றும் பழத்தோட்டங்களிலும் களை எடுக்கலாம்

சிறப்பு அம்சங்கள் :  

  • மரவள்ளிக் கிழங்கு, பருத்தி, கரும்பு, மக்காசோளம், தக்காளி மற்றும் பயறு வகைகள் போன்ற வரிசைப்பயிர்களின் நடுவே களை எடுக்க ஏற்றது
  • மற்ற களை எடுக்கும் கருவிகளில் ஒப்பிடும்போது அதிக பரப்பில் எளிதில் களை எடுக்கலாம்
 

முதல் பக்கம் | புகைப்படத் தொகுப்பு | கட்சியாகத் தொகுப்பு | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016