பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

வேரழுகல் நோய்: ரைசக்டோனியா பெடடிகோலா
அறிகுறிகள்

  • இந்நோய் இளம் செடிகளிலும் வளர்ந்த செடிகளிலும் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இலைகள் வாடத் தொடங்குகின்றன.
  • பின்பு இலைகள் காய்ந்து செடியும காய்ந்து விடுகின்றது. நோய் தீவிரமாகப் பரவினால் தாக்கப்பட்ட செடிகளில் ஆணிவேரைத் தவிர மற்ற வேர்கள் யாவும் அழுகிவிடுகின்றன.
  • ஆணி வேரின் மேல் பட்டை அழுகிச் சிதைந்து நார் நாராக உரிந்து விடுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட செடியை மெதுவாக இழுத்தாலும் எளிதாகக் கையோடு வந்துவிடும்.
  • தாக்கப்பட்ட வேர்ப்பகுதியில் இழை முடிச்சகுள் இணைந்திருக்கும்.

கட்டுப்பாடு

  • பருத்தியடன் பனிப்பயிரை ஊடுபயிராக விதைத்தால் இந்நோய் குறையும்.
  • விதைக்கும் நேரத்தை மாற்றி அமைத்து (அதாவது வெப்பநிலை அதிகமாக இருக்கும் நேரத்தில்) விதைக்கலாம்.
  • விதையை பினோமைல் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து விதைக்கலாம்.
  • 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியுடன் 50 கிலோ தொழு உரத்தை கலந்து மண்ணில் போடலாம்.

 

Cash Crops Cotton Cash Crops Cotton Cash Crops Cotton
நோயற்ற இலை

நோயுற்ற வேர்ப்பகுதி


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015