தவேப வேளாண் இணைய தளம் :: உயிரித் தொழில்நுட்பம்

1. வேளாண் உயிரித்தொழில்நுட்பம் என்றால் என்ன?

வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம் என்பது ஒருவகையான கருவிபோன்று மரபுவழிப் பயிர் பெருக்கத்தின் முறைகளில் உயிரள்ள காரணிகளை மாற்றவும் (அ) அதன் பகுதிகளை உருவாக்கவும், மாற்றி அமைக்கவம் ஆகும்.  தாவரம் மற்றும் விலங்குள் (அ) நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வேளாண்மைக்கு உதவிட இவ்வாறு செய்யப்படுகிறது.  நவீன உயிரித்தொழில்நுட்பத்தின் கருவி என்பது மரபுப் பொறியியல் ஆகும். 

2. வேளாண் உயிரித் தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுகின்றது?

உயிரித்தொழில்நுட்பமானது, விவசாயிகளுடன் இணைந்து குறைந்த செலவில் உற்பத்தித் திறனையும் மற்றும் அதிக மேம்பாட்டிற்கும் உதவுகிறது.  உதாரணமாக சில உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் குறிப்பிட்ட களைக் கொல்லிகளுக்கு தாங்கும் திறன் கொண்டு நன்கு வளர்கிறது.  மற்றப் பயிர்களில் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு சிக்கனமாகவும், அதிக ஆற்றலும் கொண்டவாறு உள்ளது.  இதனால் அனங்ககப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துதல் குறைகிறது.

3. உயிரித் தொழில்நுட்பத்தால் என்ன பயன்கள் கிடைக்கின்றன?

உயிரித் தொழிலநுட்பத்தை விவசாயத்தில் ஈடுபடுத்தும்போது விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றம் நுகர்வோர் அனைவரும் பயனுறுகிறார்கள்.  உயிரித்தொழில்நுட்பமானது எளிய முறையில் பாதுகாப்பாக பயிரில் நோய் மற்றும் பூச்சித்தாக்குதலில் இருந்து காக்கிறது.  உதாரணமாக மரபுப்பொறியியல் நோய் தாங்கும் திறன் கொண்ட பருத்தியில் குறைந்தளவே அனங்கக மற்றும் பூச்சிக் கொல்லியின் அளவும் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடிநீர் மாசு அடையாமல் இருக்கின்றது.  உயிரித்தொழில்நுட்பம் பயிர்கள் பயிரிடுவதால் அதன் தரம் மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.  மேலும் பயிர் வேலைகள் குறைவதுடன், பாதுகாப்பு மேம்பட்டு விவசாயிகளுக்கு உதவியாக உயிரித்தொழில்நுட்பப் பயிர்கள் உள்ளது.

4. பி.டி.என்றால் என்ன?

‘பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ்’ என்பதன் சுருக்கமே பி.டி.ஆகும்.  இது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா.  பி.டி.என்பது பூச்சிக்கொல்லியாக இந்தப் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகிறது.

5. பி.டி.பொதுவாக எங்கு காணப்படுகிறது?

பி.டி.பொதுவாக எங்கும் காணப்படும்.  மேலும் மண் மற்றும் தாவர இலை, தளைகள் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களிலும் காணப்படும்.

6. பி.டி.பூச்சிகளை என்னசெய்கிறது?

பி.டி.யில் உள்ள விஷப்புரதமான ‘இன்சக்ட்டிடால் கிரிஸ்டல்’ (அ) ‘டெல்டா எண்டோ டாக்சிக்’ என்பவை பூச்சிகளைக் கொல்கிறது.  இவ்வகை விஷப்புரதமானது மனிதர்களுக்கும் மற்ற பூச்சியற்ற இனத்திற்கும் தீங்கற்றவை.  பி.டி.யைக் கொண்டு பல்வேறு விஷப்புரத மரபணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

7. பி.டி.பூச்சிகளிடம் எப்படி செயல்படுகிறது.?

‘டெல்டா என்டோ டாக்சின்கள்’ வயிற்று நஞ்சு ஆகும்.  இது பூச்சிகள் உண்டவுடன் மிகவும் வலிமையுள்ள நஞ்சாக மாறி, உட்சென்றவுடன் அமிலத்தன்மை கொண்டதாக செயல்பட்டு பூச்சிகளைக் கொன்று விடுகிறது.

8. பி.டி.பூச்சிகளை எவ்வாறு கொல்கிறது?

‘டெல்டா என்டோ டாக்சின்கள்’ பூச்சியின் உணவு செறிமான மண்டலத்தை நேரடியாகத் தாக்கி அழிக்கிறது.  எனவே பயிர்த்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.  இம் மாற்றமானது நடைபெற சற்று நாட்கள் ஆகும்.  மேலும் இவை சற்று வித்தியாசமாக மற்ற மரபு வழியில் பயிரிடப்படுவதிலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது

9. பி.டி.நஞ்சில் வேறு வகைகள் இருக்கிறதா?

மற்ற பி.டி. இரகப்புரதமானது ‘தழைப் பூச்சிக் கொல்லி புரதம்’ ஆகும். இவை தீங்குயுரி அல்லாத இனத்தில் பாதுகாப்பானதாகவும் உள்ளது. மேலும் பல்வேறு முறை மற்றும் வகைகள் பி.டி.புரதங்கள் உள்ளன.

10. பி.டி.மூலம் எப்படிப்பட்ட தீங்குயுரிகளைக் கட்டுப்படுத்தலாம்?

‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ பல்வேறு விதமான வகையில் ‘டெல்டா என்டோடாக்சினை’ உற்பத்தி செய்கிறது.  அவை காய்ப்புழுவிற்கும் (உ.தா.ஐரோப்பிய காயப்புழு), ஈக்கள் (உ.தா.கொசுக்கள்) (அ) வண்டுகள் ஆகும்


11. பி.டி.இரகப் பூச்சிக் கொல்லிகள் புதியனவா?

பி.டி.பூச்சிக் கொல்லிகளான ‘டார்மண்ட் பி.டி. மற்றும் டெல்டா என்டோ டாக்சின்’ 30 ஆண்டுகளுக்கு முன்னரே உபயோகப்பட்டுள்ளது.  (உ.தா.பேக்டிமாஸ், பயோபிட், டைபெல், ஜாவ்லின், டெக்னர், வெக்டோபெக்).  இவை முதல் நிலையிலேயே புழுக்கள், பூச்சிகள் மற்றும் கருப்பு கூட்டுப் புழு மற்றும் கொசுக்களை அழிப்பதில் பல்வேறு பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது.

12. பி.டி.பாதுகாப்பானதா?

‘டெல்டா என்டோ டாக்சின்’ மிகவும் தேர்வு செய்யப்பட்ட மற்றும் மனித, பிற நஞ்சுயிரியற்ற காரணிகளுக்கு பிற மரபு வழியில் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளை விடப் பாதுகாப்பானது.  அவை பூச்சி, புழுக்களின் குறிப்பிட்ட மண்டலங்களை மட்டும் தாக்கி அழிக்கும்.  பொருளாதார ரீதியான பி.டி.பூச்சிக் கொல்லிகள் பொதுவாக பாதுகாப்பானது என சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல் பல அங்கக சான்றளித்தலிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

13. பி.டி.சோளம் என்றால் என்ன?

‘டெல்டா என்டோ டாக்சின்’  ஒற்றை செல்லின் மூலம் பாக்டீரியாவால் கட்டுப்படுத்தி, பின் மாறுபாடு செய்து சோளப்பயிரில் அமைப்பது ஆகும்.  சோளப் பயிரில் உள்ள இம் மரபணு ‘டெல்டா என்டோ டாக்சின்’ உற்பத்தி செய்து அவை பூச்சிகளுக்கு நஞ்சாகி விடுகிறது. 

14. ஏன் பி.டி.மரபணு சோளத்தில் பயன்படுத்தப்படுகிறது?

‘டெல்டா என்டோ டாக்சின்கள் பயிரில் தெளிக்கும்போது புற ஊதாக்கதிர்களால் பாதிப்படைகிறது.  அதேபோல் மற்ற மரபு வழிப் பூச்சிக் கொல்லிகளால் அதிக செலவும், பூச்சியினைக் கட்டுப்படுத்துவது சற்றுக் குறைகிறது.  ஆனால் பயிரின் திசுக்களில் ‘டெல்டா என்டோ டாக்சின்கள்’, தாங்கு திறனுக்காகவும், உயிரித் தொழில்நுட்பத்தில் பி.டி.மரபணு சோளத்தில் உட் செலுத்தப்படுகிறது.

15.பி.டி.சோளம் முழுவதும் நஞ்சுத்தன்மையானதா?

இரு காரணிகளைப் பொருத்தது. (அ) நிகழ்வு (ஆ) வளர்ச்சிக்காரணி இவையே ‘டெல்டா என்டோ டாக்சினைக் கட்டுப்படுத்தவும், பயிரின் அளவில் இருக்கும் உற்பத்திக்கும் காரணம் ஆகும்.  பல்வேறு விதை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு விதமான ‘நிகழ்வு’ மற்றும் வளர்ச்சியை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான ‘டெல்டா என்டோ டாக்சினை’ உற்பத்தியை தருகின்றன. 

உட்செலுத்தும் ‘நிகழ்வு’ என்பது பி.டி. மரபணுவை சோளப் பயிரின் மரபணுத்திசுவில் வைப்பதாகும்.  இதுதான் பி.டி.மரபணு பயிரின் எப்பகுதியில் வைக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.  மரபணு இடம்-டெல்டா என்டோ டாக்சினின் உற்பத்தி மற்றும் அளவைத் தீர்மானிக்கும்.  இதுவரை பி.டி. மரபணு இடத்தினைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் நம்மிடம் இல்லை.  ஆகவே ‘நிகழ்வு’ நடக்கும்போது ‘டெல்டா என்டோ டாக்சினின்’ அளவு மற்றும் உற்பத்தி மாறுபடுகிறது. 

‘வளர்ச்சிக்காரணி’ என்பது மரபியல் பொத்தானாக உட்செலுத்தப்பட்ட பி.டி. மரபணு எப்பொழுது மற்றும் எங்கே? ‘டெல்டா என்டோ டாக்சின்’ உற்பத்தி செய்யப்படுகிறது என்பதனைத் தீர்மானிக்கிறது.  பல்வேறு விதமான வளர்ச்சிக் காரணிகள் ‘டெல்டா என்டோ டாக்சின்’ சோளப்பயிரிலும், வீரிய ஒட்டு உருவாக்குதலில் பயன்படுத்தப்படுகிறது.

16. பி.டி.சோளத்தில் எத்தனை வகைகள் உள்ளன?

பல்வேறு விதமான பி.டி.சோள வீரிய ஒட்டு இரகங்கள் உள்ளன.  அவற்றில் ஒன்று (அ) அதற்கு மேற்பட்ட ‘நிகழ்வுகள்’  கொண்டவையாக உள்ளன.

17. பி.டி.சோளம், மோனார்க் வண்ணத்துப் பூச்சிக்கு நஞ்சு என நான் கேள்விப்பட்டது உண்மையா?

மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் ‘புழு’ நிலையில் அவை பால்களை உண்கிறது.  அவ்வாறு அவை உண்ணும் பால்களைச் சுற்றி பி.டி. சோளமானது இருக்கிறது.  சில மாறுபாடுகள் ஆய்வகத்தில் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரிகிறது.  இன்னும் பல விடை தெரியாத கேள்விகள் மோனார்க் வண்ணத்துப்பூச்சி பற்றி தீர்மானமாகக் கூற முடிவதில்லை.

18. மோனார்க் வண்ணத்துப்பூச்சி பால்களை (அ) சோள வயலின் அருகில் முட்டைகள் இடுமா?

ஆம், சற்று அதிகமான முட்டைகள் சோளவயலின் அருகில் இடப்பட்டிருந்தன என்பதனைப் பல சுற்றுச்சூழல் ஆய்வுகள் மேற்கொண்டதில் அறியப்பட்டது.


19. மோனார்க் வண்ணத்துப்பூச்சி  பால்களையில் நீடித்திருப்பது பி.டி. சோளம் மற்றும் பி.டி.சோளமற்ற சோளம் என வேறுபாடு உள்ளதா?.

இல்லை.  எவ்வித வேறுபாடும் மத்திய மேற்கு மற்றும் அன்டாரியோவில் நீடித்திருக்கவில்லை. ஆனால் பி.டி.மாற்றப்பட்டு அதனும் ‘நிகழ்வு் 176 மட்டும் விதி விலக்காகும்.

20.மோனார்க் புழுவானது அதிகம் நீடித்திருப்பது, காய்ப்புழு கட்டுப்படுத்துவதுடன் பி.டி. சோளத்துடன் (அ) பூச்சிக் கொல்லிகளுடன் சாத்தியாமா?

இனிப்பு மக்காச்சோளத்தில் மோனார்க் புழு, பூச்சிக் கொல்லி வயலில் அதிகமாகவும், பி.டி.சோளத்தில் சற்று குறைவாகவும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டதில் தெரியவந்துள்ளது.

21.பி.டி.சோளத்தின் ‘அழிக்கும் அளவு’ என்ன?

அது நிகழ்வைப் பொறுத்தது. அதிக அளவு நஞ்சான மகரந்தம்-நிகழ்வு 176 மூலமும் (அதிக வணிக ரீதியாக இருப்பதில்லை) 15-20 மடங்கு  அதிகமான நஞ்சு, மகரந்தத்தில் ‘நிகழ்வு  MON 810’ ஐ காட்லும் உள்ளது.  அழிக்கு அளவு எல்.டி.50’ நிகழ்வு 176 மகரந்தம் 2500 மகரந்த தூள்கள் இரண்டு பால்களை இலைகளுக்கு ஒன்றாக உள்ளது.  850 சோளத்தில் எவ்வித பாதிப்பும் அவ்விரண்டு மாபல்களை இலைகளில் இல்லை.  அதே போன்று பாதிப்படைந்த அறிகுறிகளும் நிகழ்வு MON 810 (அ) நிகழ்வு பி.டி.11, இவற்றில் தென்படவில்லை.  எப்படிப்பார்த்தாலும், பல்வேறு விதமான கேள்விகள் மோனார்க் புழு (அ0 இலக்கற்ற புழுக்களின் நஞ்சுத்தன்மை பற்றி உள்ளன.

22. பி.டி.சோளத்துடன் பால்களைகளும் இருக்கும்போது இவற்றில் பி.டி. சோளமகரந்தத்தின் அவற்றின் ‘அழிக்கும் அளவு’ இருக்குமா?

‘அன்டாரியோ வயலில் காணப்பட்ட பி.டி.சோளத்தின் சராசரியாக 500 ல் பால்களை இலைகளும் காணப்பட்டது.

23. பி.டி.சோளத்தின் மகரந்தம் ‘அழிக்கும் அளவு’ பி.டி.சோள வயலில் அருகே உள்ள பால்களை வயலிலும் காணப்படுமா?

சோளத்தின் மகரந்தமானது அதிகமாக எங்கும் செல்ல முடியாது.  ஆனால் பால்களை தாவர மகரந்தம் ‘அன்பிரியோ’ இடத்தில் சராசரியாக 180 மகரந்தம் 15 அடி தூரமும், சராசரியாக மொத்த வயலில் 9 அடி தூரமும் பயணித்துள்ளன. மழையளவானது மகரந்தத்தின் அடர்த்தியானது ‘பால்களை’ வயலில் குறைந்து காணப்பட்டது.

24. மோனார்க் புழுவானது பி.டி.சோளத்தின் மகரந்தத்தை உண்ணும்போது துணை அழிக்கும் விளைவுகள் தோன்றுமா?

சிறிதளவே தோன்றும்.  எவ்வாறெனில் வளர்ச்சிக் குறைபாடு (அ) தாமதமாக வளர்ச்சி, எப்படிப்பார்த்தாலும், மோனார்க் புழு பி.டி. சோள இலைகளை குறைவாகவும், அவை அல்லா சுத்தமான இலைகளை அதிகமாவும் உண்கிறது.

25. மகரந்ததூள் உதிரும் நேரத்தில் “மோனார்க் புழு” பால்களைச் செடிகளை உணவாக உட்கொள்ளுமா?

மகரந்தத்தூள் மற்றும் சிறிய மோனார்க் புழுவானது பி.டி.சோளத்தில் அவை உண்ணும் வாய்ப்பு குறைவவே ஆகும்.  இருப்பினும், இருக்கும் காலநிலை, இடம் இவற்றைப் பொறுத்து மாறுபடுகிறது.

26. கொலோரடோவில் பி.டி.சோள மகரந்தத் தூளிலிருந்து மோனார்க் வண்ணத்துப்பூச்சியை காப்பதற்கு ஏதேனும் செய்யப்பட்டதா?

மோனார்க் வண்ணத்துப்பூச்சி? கொலோரடோவில் மிகவும் அரிதானது.  சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆலோசனையின்படி, பி.டி.சோளம் அற்ற செடிகளை மகரந்தச் சேர்க்கையில் பி.டி.சோளம் உள்ள நிலததில் விடவேண்டும்.  இவ்வாறு செய்வதால், இலக்கற்ற புழுக்கள் அழிப்பது தடுக்கப்படும்.  ஆகவே கண்டிப்பாக பி.டி.சோளத்துடன் பி.டி.அற்ற சோளத்தையும் பயிரிடவேண்டும்.

27. பி.டி.சோளம் மற்ற பிற பூச்சிகளை பாதிக்கிறதா?

பல்வேறு இனங்களில் புழுக்கள் சோள வயலிலுள்ளன.  அவ்வாறு வளரும் காலங்களில் பி.டி.சோளத்தால் அவை பாதிப்படைகின்றன.  இதே நிலை தொடர்ந்தால் சற்று மாறுபட்டு அமைக்கப்பட்ட தாவரம் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டன.  ஒரு மத்திய மேற்குப் பகுதியில் ‘கருப்பு வாலப்புழு’ பி.டி.சோளத்தால் பாதிப்படையாமல், ஆனால் ‘நிகழ்வு 176’ ல் அழிக்கும் அளவில் மட்டும் பாதிப்படைந்தன. ஆனால், அதிக அளவு ஆராய்ச்சிக்கள் மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளுக்கே நடைபெறுகிறது.  இவ்வகை இனங்களுக்கு நடைபெறுவதில்லை.  ஒரு ஐரோப்பியர்  செய்த ஆய்வில் ‘பச்சை இறகு புழு’ (சோளத்தில் இருக்கும் இரை விழுங்கி) ஐரோப்பிய காயப்புழுக்களை அழித்தும், மாறுபட்டும் இருந்தது.  இவை பி.டி. அற்ற சோளத்தில் சற்று குறைவானதாக இருந்தது.

28. பி.டி.சோளத்தின் வேர்கள் ‘டெல்டா என்டோ டாக்சின்களை மண்ணில் வெளியேற்றுமா?

‘ஆமாம்.  இவ்வாறு வெளியேற்றுவதைப் பல்வேறு ஆய்வகத்தில் செயல்முறை காட்டப்பட்டுள்ளது.  இருப்பினும் மண்ணில் புலப்படாத பல்வேறு நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன.  அதே போன்றுதான் பி.டி. என்பது.  பொதுவான மண்ணிலுள்ள ‘பாக்டீரியா’ இவை, டெல்டா என்டோ டாக்சினை வெளியேற்றுவது என்பது ஓர் பொதுவானது.  இவற்றின் அளவை எடுத்து ஆய்வு மேற்கொண்டபோது 10 மடங்கு அளவு மண்புழு, பிற நுண்ணுயிரிகளுக்கு ஆபத்தானது குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.


29. பி.டி.சோளமானது மரபு வழியிலுள்ள பூச்சிக் கொல்லிகளுக்கு மாற்றாகுமா?  எது அதிக நஞ்சாகும், இலக்கற்ற பூச்சிகளுக்கு (உ.தா.மோனார்க் வண்ணத்துப்பூச்சி)?

குறைந்த அளவு ஆய்வுகளே பி.டி.சோளமானது இலக்கற்ற பூச்சிகளுக்கு பயன்படுத்துதலில் மேற்கொள்ளப்பட்டது.  முதல் நிலை முடிவுகளில் அவற்றின் பாதிப்புகள் சற்று குறைவே ஆகும்.  இருப்பினும் பல இலட்சம் ஏக்கர் ‘ஜிப்சி மாவுப்பூச்சி’ மற்றும் மற்ற பூச்சிகள் உடன் பி.டி.பூச்சிக் கொல்லிகளும் கடந்த 30 ஆண்டுகளாக சிறிதளவு பாதிப்பையே ஏற்படுத்தியுள்ளன.  அதே போல் மரபு வழி பூச்சிக் கொல்லிகள் பல இலக்கற்ற பூச்சி இனங்களில் பாதிப்படையச் செய்வது குறைந்த அளவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

30. நான் கேள்விப்பட்டதில் பி.டி.சோளமானது உடல் நலத்திற்குத் தீங்கானது, இது உடலில் சிலருக்கு ‘ஒவ்வாமை’ ஏற்படுத்தும்.  இது சரியா?

சில ஆய்வுகளில் மரபு வழி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கும்.  மரபு வழிமாற்றப்பட்ட பயிர்களை பதிவு செய்யும்போது, சுற்றுசூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பல்வேறு ஒவ்வாமை ஏற்படும்.  ஆய்வுகள், வேறு பல பூச்சிக்கொல்லி பகுதிகள் உள்ளதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.  முதல் ஆய்வானது, அமிலச் சூழலில் ‘ஒவ்வாமை’ தோற்றுவிக்கும் காரணிகள் எவ்வளவு நேரம் உள்ளது என்பதும், அதிக அளவு நேரம் இரத்த மண்டலத்திலும், ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும்.  தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘டெல்டா என்டோ டாகசின்கள்’ அதிவிரைவில் வயிற்றுப்பகுதியில் சிதைந்துவிடுகின்றன.  அவை உடலுக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிப்பதில்லை.

31. உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்ன?  அவை மரபியல் முறைப் பயிர்ப்பெருக்கத்தில் எவ்வாறு வேறுபடுகிறது?

உயிரித் தொழில்நுட்பம் என்பது, நவீனமான தொழில்நுட்பமான மரபுப்பொறியியல் மூலம் தாவரத்தினை மாற்ற (அ) மேம்படுத்தவும், விலங்குகளில், பிற நுண்ணுயிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.  விவசாயத்தைப் பொறுத்தவரை இவைப் புதியன அல்ல.  நூறாண்டுகளுக்கு முன்பே விவசாயிகள், பண்ணைப்பணியாள் மற்றும் பலர் இனக்கலப்பு செய்து தரமுள்ள புதிய உணவை கண்டறிந்தனர்.  மரபு வழிப் பயிர்பெருக்கத்தில் ஆயிரக்கணக்கான மரபணுவை கலந்து பல ஆண்டுகளாக மற்றும் பல தலைமுறைகளாக மிகவும் வேண்டப்பட்ட தீர்வை அடைந்தனர்.

32. உயிரித் தொழில் நுட்பத் தாவரத்தில் விளைச்சலைத் தவிர வேறு பலன்கள் என்ன?

விவசாயத்தைப் பொருத்தவரை உயிரித் தொழில்நுட்பப் பொருட்கள் மூலம் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்படும்.  விளைச்சலும் அதிகரித்தது.  உதாரணமாக பி.டி.பருத்தியானது, பருத்தியைத் தாக்கி அழிக்கும் பல பூச்சிகளை அளித்தது.  இவை மறைமுகமாக நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலில் குறைந்த அளவு இரசாயனம் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது.  பல்வேறு பொருட்கள் அதன் ஊட்டச்சத்து அளவினை மேம்படுத்தப்படுகிறது.  உதாரணமாக புதிய அரிச இரகம், ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ‘ராக்ஃபெல்லர் பவுண்டேசன்’ ‘வைட்டமின் ஏ’ சத்துடன் அறிமுகம் செய்தது.  மேலும் கால்நடைத் தீவன சோய மொச்சையின் சத்தை அதிகரித்தும் மற்றும் சோளத்தின் பாஸ்பரஸ் அதிகரித்து எளிதில் கால்நடைகள் எடுக்கும்படி செய்யப்பட்டுள்ளது.


33. தொழிற்துறை நாடான அமெரிக்காதான் மரபுப் பொறியியல் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ததா?

அமெரிக்கா மட்டும் மரபுப்பொறியியல் விவசாய பொருட்களை உற்பத்தி செய்யவில்லை.  பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் முதலியன பல்வேறு உயிரி தொழில்நுட்ப இரகங்கள் சோளம், சோயா மொச்சை பிற பயிர்களில் உருவாக்கப்பட்டது.  மேலும் பல ஐரோப்பிய கம்பெனிகள் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்களை மேம்படுத்தவும் வணிக ரீதியாக உற்பத்தியை பெருக்கவும் செய்கின்றன. உதாரணமாக ‘அகா ஈவோ’ என்னும் ஜெர்மன் கம்பெனி, நோவர்டிஸ் எனும் ஸ்விட்சர்லாந்து கம்பெனி இரண்டும் இணைந்து, மரபணு  மாற்றம் செய்யப்பட்ட சோளம் மற்றும் சோயா மொச்சையினை அமெரிக்க விவசாயிகளுக்கு அளிக்கிறார்கள்.  ஒன்றை மடங்கு விண்ணப்பங்கள், ஐரோப்பிய யூனியன் ஒழுங்குமுறை ஆணையத்தில, மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகத்திற்கு உருவாக்க ஐரோப்பிய யூனியன் கம்பெனிகள் முடிவு செய்து அளித்துள்ளன.

34. உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பயிர்கள், மரபு வழியில் பயிரிடும் பயிர்களைப் போன்று சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதா?

ஆம். அறிவியல் வளர்ச்சியில் உயிரித் தொழில்நுட்பத்தால், சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என எவ்வித சான்றும் இல்லை.  பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், தேசிய வளர்ச்சி குழுகமங்கள், விவசாய நிறுவனங்கள், பலவும் இம்முடிவை ஆமோதித்துள்ளனர்.  உயிரித் தொழில்நுட்பமானது சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பின்றி, மரபு வழியில் பயிரிடுவதைக் காட்டிலும் அதிகமாக இலாபத்தைக் கொடுக்கிறது.


35. உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் உணவுகளால் ஒவ்வாமை தோன்றுமா?

உணவுகளை உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும்போது சில சமயம் ‘ஒவ்வாமை’ தோன்றும்.  உணவு மற்றும் மருந்து நிர்வாக நிறுவனம் ‘ஒவ்வாமை’ ஆய்வு மேற்கொண்ட பின்னரே உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.  சராசரியாக 90 சதவீதம் உணவு சம்பந்தப்பட்ட ஒவ்வாமை புரதங்கள் இருப்பவையான கொட்டைகள், சோயா மொச்சை, பால், முட்டை, மீன் மற்றும் கோதுமை இவற்றில் வேளாண்மை உயிரித் தொழில்நுட்ப கம்பெனிகள் ‘ஒவ்வாமை’ பொருட்கள் மரபணுவில் இல்லாதவாறு பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

36. வேளாண்மை உயிரித் தொழில்நுட்பப் பொருட்கள் தற்போது உள்ளவற்றுக்கு ஏதேனும் உதாரணம் உள்ளதா?

1989 ஆம் ஆண்டு முதன் முதலில் வேளாண் உயிரித் தொழில்நுட்பம் மூலம் உணவை மாற்றியமைக்கப்பட்டு ‘கால்ஜீன் கழகம்’ என்பபை தக்காளியில் ‘ப்ளேவர் சேவர்’ என்ற பெயரில் அதன் வாழ்நாள் அதிகரித்து காணப்படுகிறது.  பி.டி. சோளம், உருளைக் கிழங்கு மற்றும் பருத்தியில் குறிப்பிட்ட மரபணு மூலம் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியான ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ மூலம் ஐரோப்பிய சோளப்புழு, கொலராடோ உருளை வண்டு மற்றும் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.  அதே போன்று வணிக ரீதியான உருளை, ஸ்கூவாஸ், வெள்ளரி, தர்பூசணிப்பழம் மற்றும் பப்பாளி முதலியவற்றில் ‘வைரஸ்’ ஐ தாங்கும் படி குறுக்குப் பாதுகாப்பு முறையில் தாங்கும் திறன் அதிகரிக்கப்படுகிறது.

37. உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய பயிர் இரகங்களை விவசாயிகள் பயன்படுத்துகிறார்களா?

ஆமாம்.  விவசாயிகள் உபயோகிக்கிறார்கள்.  ஆனால் முன்பு விவாதிக்கப்பட்ட அதே பிரச்சனைகள் சில சமயங்களில் தோன்றுகின்றன.  உலக அளவில் வேளாண் உயிரித் தொழில்நுட்பம் மூலம் 2003 ஆம் ஆண்டு 167 மில்லியன் ஏக்கர்கள், 18 நாடுகளில் 7 மில்லியன் விவசாயிகள் செயல்பட்டு வருகிறார்கள்.  மூன்றில் ஒரு பங்கு அளவு வளர்ந்த நாடுகளில் 85 சதவீதம் விவசாயிகள் உயிரித் தொழில்நுட்பப் பயிரைப் பயன்படுத்துகிறார்கள்.  அமெரிக்காவில் 105 மில்லியன் ஏக்கர் 2003 ஆம் ஆண்டுக்குள் உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் பயிரிடப்பட்டன.  அதே ஆண்டில் அர்ஜென்டினா மற்றும் சீனாவில் 10 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமாக பயிரிடப்பட்டன.  2003 ஆம் ஆண்டு சீனா மற்றும் பிரேசிலில் 5 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமாக உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் பயிரிடப்பட்டன. 

38. ‘டெர்மினினேட்டர்’ தொழில்நுட்பம் என்றால் என்ன?

‘டெர்மினினேட்டர்’ தொழில்நுட்பம் என்பது விதை, செடிகளை ஆய்வு செய்து ‘கிருமி’ இல்லாத விதைகளை உற்பத்தி செய்வதாகும்.  இப்போது வரை, விதை மேம்பாட்டு நிறுவனம் மூலம் மட்டுமே இத் தொழில்நுட்பம் பின்பற்றப்படுகிறது.  எந்தத் தனியார் நிறுவனம் இதில்  ஈடுபடவில்லை.  மரபணுவானது உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மரபுவழித் தொழில்நுட்பம் இவற்றில் அழிந்துவிடமால் காக்க எதிர் காலத்தில் உதவும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது.

39. மீன் வளர்ப்பியலில் உயிரித் தொழில்நுட்பமானது உதவுமா?

ஆமாம்.  உயிரித் தொழில்நுட்பம் உபயோகப்படுத்துவதால் தரமிக்க உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கவும், குறைந்த விலைக்குப் பொருட்களை நுகர்வோருக்கு வழங்கவும் மற்றும் மீனின் தட்டுப்பாட்டினைப் போக்கவும் முடியும்.  உதாரணமாக, அக்வா அட்வாண்டேச் என்ற சாலமன் என்னும் மீன் விதையானது, அக்வாஃபவுண்டரி பண்ணை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது.  12-18 மாதங்களில் இதையே மரபுவழியில் 2-3 வருடங்கள் ஆகும். மத்திய ஒழுங்குமுறை ஆணையமானது, உணவு மற்றும் சுற்றுச்சுழலுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பானதாக உள்ளதா? என பல்வேறு கடுமையான சோதனை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.  புதிய உயிரித் தொழில்நுட்பம் மூலம் ‘சாலமன்’ இரகம் அதன் வளத்தை ஈடுசெய்யவும், மேலும் குறைந்த விலையில் கிடைக்கவும் செய்கிறது.  மலட்டுத் தன்மை கொண்ட, பெண் இனத்தை பயன்படுத்தும்போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும், இல்லையெனில் தப்பித்துவிட வாய்ப்புள்ளது.

40. வேளாண்மை உயிரித் தொழில்நுட்பமானது பெருகி வரும் உலக மக்கள் தொகைப் பெருக்கத்தின் உணவுத் தேவையை நிறைவேற்றுமா?

ஆமாம்.  உயிரித் தொழில்நுட்பமானது ஒர் கருவியாகும்.  மேற்கண்ட வினாவிற்கு, தேசிய மற்றும் உலக அளவில் உள்ள அறிவியல் நிறுவனங்கள் சமீபத்தில் கொடுக்கப்பட்ட விவாதத்தில் உலகின் உணவுத் தேவையில் உயிரித் தொழில் நுட்பத்தின் பங்கு என்ன என்பதனை விவாதிக்கப்பட்டன.  முடிவில் ‘மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுச்சூழலில் வேளாண்மைப் பரப்பை பயன்படுத்தி அதற்கேற்ற உணவை சிறிய விவசாயிகள் உருவாக்க வழிவகைச் செய்யப்பட்டது.  மறுபுறம் உலக உணவுக்கழக ஆராய்ச்சி நிறுவனம், உலக விவசாய ஆராய்ச்சி நிறுவனம், உலக விவசாய உயிரித் தொழில்நுட்ப பொருள் மூலம் பொருள் ஈட்டும் நிறுவனம், இவைகள் ஆரம்ப கட்ட நிலையில் பல்வேறு பங்களிப்பை அளித்துள்ளன.  அவைகள் உதாரணமாக

  • ‘தங்க அரிசி’ இதில் பீட்டா கரோட்டின் உள்ளது.  இவை வைட்டமின் ஏ குறைப்பாட்டினை நீக்குகிறது.  இதனால் உலக அளவில் பார்வைக் குறைபாடு நோய்க் கட்டுப்படுத்தப்படுகிறது (அதே போன்று இரத்தசோகையை நீக்க இரும்புச்சத்து அதிகம் சேர்க்கப்படுகிறது) மேலும் ‘தங்கக் கடுகு’ இவையும் ‘வைட்டமின் ஏ’ சத்துடன் சமையல் எண்ணெயில் உதவுகிறது.

  • ‘லைசின்’ அளவானது சோளம், மக்காச்சோளம் மற்றும் கோதுமையில் புதிய இரகம் உருவாக்கப்பட்டு புரத உணவாக உருவாக்கப்படுகிறது.

  • மருந்து உணவுகள் மேம்படுத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது.  இவைகள் காலரா மற்றும் வயிற்றுப்போக்கு முதலிய நோய்கள் குழந்தைகளுக்கு வராம் தடுக்க வளர்ந்நத நாடுகளில் உருவாக்கப்படுகின்றன.

  • பூச்சித் தாக்குதலில் இருந்து தாங்கும் தன்மை கொண்ட ‘ஆப்பிரிக்கா சர்க்கரை வள்ளிக் கிழங்கு’ புதிய இரகமானது ‘வைரஸ்’ நோய்களில் இருந்தும் விடுபடுகிறது.  இதன் மகசூல் அதிகரிக்கிறது.  மேலும் வைரஸ் தாக்குதலின்றி புதிய பூசணிக் குடும்பத்தாவரங்கள் தென்கிழக்கு ஆசியா எங்கும் புதிய இரகங்கள் உருவாக்கப்படுகிறது.

  • உணவின் ‘வாழ்நாள் அளவு’ அதிகரித்தும் மற்றும் பிற காரணிகளால் ‘உணவு பாழ்படுதல்’ குறைக்கப்பட்டும் உள்ளது.

  • உலகம் முழுவதும் உவர் மற்றும் விஷத்தன்மையான மண்ணிலும் தாங்கும் திறன் கொண்ட பயிர் இரகங்கள் உருவாக்கப்பட்டு பயிரிடப்படுகிறது.

இவைகளே உயிரித் தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு வளர்ந்த நாடுகளில் கிடைப்பவை.  இதுவரை முழுமையாக உயிரித் தொழில்நுட்பம் மூலமே உணவுத்தேவையை வளர்ந்த நாடுகளில் பூர்த்தி செய்ய முடியவில்லை.


41.‘தங்க அரிசி’ என்றால் என்ன?  இவை வைட்டமின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துவிடுமா?

‘வைட்டமின் ஏ’ குறைபாட்டினால் பார்வை இழப்பு முதலியன தோன்றும்.  வளர்ந்த நாடுகளில் ‘அரிசியை’ ஒர் முதன்மை உணவாக உட்கொள்ளும் மக்களில் 200 மில்லியன்பேர்கள் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உயிர்த் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவியல் அறிஞர்கள் புதிய அரிசியைக் கண்டறிந்ததால் ‘தங்க அரிசி’ இவை இயற்கையிலேயே ‘பீட்டா கரோட்டின்’ உள்ளது.  இவை ‘வைட்டமின் ஏ’ உருவாக்குகிறது.  தங்க அரிசியில் உள்ள இப் பீட்டா கரோட்டின் வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டினைப் போக்குகிறது.  மேலும் இவை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும் செய்து பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியனம் மேம்படவும் உதவுகிறது. 

மேலும் அறிவியலார்கள் இரும்புச்சத்துக் குறைப்பாட்டினை நீக்க இச்சத்துடன் இரும்புச்சத்தை இணைத்து இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட 100 மில்லியன் மக்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளனர்.

42. மரபுப் பொறியாளர் ஒருவர் உயிரினங்களை எவ்வாறு உணர்கிறார்?

அறிவியலார் (அ) மரபுப் பொறியாளர் ஒரு தாவரம் (அ) விலங்கின் எந்த ஒரு மரபணுவையும், எடுத்து அதனைப் பெருக்கி மற்ற உயிரினத்துடன் மாற்றப்படும்படி இருக்கவேண்டும். அவ்வாறு புதிய மரபணுவானது பல் செல்களுடன் இணைந்து புதிய வழித் தோன்றல்களை உருவாக்குதல்வேண்டும்.  பெரும்பாலும் புதிய மரபணுவானது புதிய புரதத்தினை செல்களில் உருவாக்கி பின் புதிய உயிர்களை உருவாக்குகிறது.

43. எம்மாதிரியான பயன்பாடுகளுக்கு மரபுப்பொறியியல் வேளாண் பயிர்களில் பயன்படுத்தப்படுகிறது?

பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாக்கப்படும் ‘மரபுப் பொறியியல் பயிர்கள்’ பூச்சித்தாக்குதல் (அ) பூச்சிக் கொல்லித் தாங்கும் தன்மைக்காகவே உருவாக்கப்படும்.  மரபுப்பொறியியல் சோளம் மற்றும் பருத்தியில் பி.டி.மரபணு மண்ணில் உள்ள பாக்டீரியா பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ் மூலமும், இதனால் உருவாக்கப்படும் புரதம் பூச்சிகளைக் கொல்வதுடன், பூச்சிக்கொல்லிகள் தேவையும் குறைகிறது.

44. நான் தற்போது மரபணு பொறியியல் உணவுகளை உட்கொள்கிறேனா?

மரபுப்பொறியியல் சோயமொச்சையானது, சோயா மொச்சை எண்ணெய் மற்றும் ‘சோயா  லெக்டின்’ மூலம் உருவாக்கப்படுகிறது.  மரபுப்பொறியியல் கடுகு மற்றும் பருத்தியன் மூலம் சமையல் எண்ணெய் பெறப்படுகிறது.  ஆகவே, பல்வேறு உணவுப் பதப்படுத்தப்பட்ட வகைகளில் இவை மரபுப்பொறியியலில் பெறப்பட்ட சோளம், சோயா மொச்சை, கடுகு (அ) பருத்தி என தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் சோயா எண்ணெய் (அ) பிரக்டோஸ் சுவையூட்டி முதலியனவும், புரதப்பொருளான ‘சோளக்கூழ்’ மரபணு மாற்றப்பட்டு உருவாக்கப்படுகிறது.  ஆகவே அமெரிக்கர் தினமும் உட்கொள்ளும் உணவு வகைகள் மரபணுப் பொறியியல் உணவுகளே, ஆனால் நமது உணவுக் கட்டுப்பாட்டில் குறைந்த அளவு மரபணு மாற்றப்பட்ட உணவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


45. தற்போதுள்ள மரபுப்பொறியில் உணவுகளின் மூலம் ஏதேனும் நன்மைகள் உள்ளதா?

மரபுப்பொறியில் உணவுகளின் நன்மைகள் சில சமயம் விளக்குவது சற்றுக்கடினம்.  இருப்பினும், பி.டி. பருத்தியினை அமெரிக்காவின் பல்வேறு பகுதியில் பயிரிடுவதால், பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவது பெரும்பான்மை அளவு குறைந்துள்ளது.  எனவே பி.டி.பருத்தி மூலம் சுற்றுச்சூழலுக்கு பூச்சிக் கொல்லியால் ஏற்படும் தீமைகள் கட்டப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.  இதே நன்மைகள் சீனா மற்றும் பிற நாடுகளும் அடைந்திருக்கின்றன. 

களைக்கொல்லி தாங்கும் சோயா மொச்சை, பண்ணையம் செய்வதை விவசாயிகளுக்கு மிக எளிதாக்குகிறது.  இதனால் நேரம் மற்றும் பிற வழிகளில் இவை உதவுகிறது.

46. மரபுப் பொறியில் பயிர்கள், முக்கிய ஆரோக்கியம் சம்பந்தமாக உள்ளதா?

‘விஷத்தன்மை மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் ஆகியன மரபுப்பொறியியல் பயிரில் இருப்பதில்லை.  இயற்கையாகவே இருக்கம் விஷத் தன்மை (அ) ஒவ்வாமைக் காரணிகள், மரபுப்பொறியியல் மூலம் அம் மரபணு நீக்கப்பட்டு தாவர வளர்ச்சியில் அக்காரணிகள் இல்லாமல் செய்யப்படுகிறது.  இவ்வாறு விஷத்தன்மை மற்றும் ஒவ்வாமை ஏற்படுத்தும் காரணிகள் இன்றிப் பயிர் விளைவிக்கப்படுகிறது.

47. மரபுப்பொறியியல் உணவுகள் ‘புதிய ஒவ்வாமையை’ எற்படுத்துமா?

‘ஒவ்வாமை’ பொதுவாக புரதங்களால் தோன்றுபவை.  பெரும்பாலான மரபுப்பொறியியல் பயிர்கள், புதிய புரதங்களான இவை புதிய ஒவ்வாமைக் காரணிகளை உருவாக்கும்.  பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரேசிலில் பயிரிடப்பட்ட மரபுப் பொறியியல் சோயா மொச்சையில் ‘ஒவ்வாமை’ ஏற்படுத்தும் காரணியகள் கண்டறியப்பட்டது.  பின்பு அவை, பல்வேறு பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்பு மரபுப் பொறியியல் சோயா மொச்சையானது வணிக ரீதியாக பயிரிடப்படுவதில்லை.

48. ‘ஸ்டார்லிங்க் சோளம்’ என்றால் என்ன? இவை ‘ஒவ்வாமையைத்’ தோற்றுவிக்குமா?

‘ஸ்டார்லிங்க்சோளம்’ என்பது ஒருவகை பி.டி.சோளம், இவை சிலவகை பூச்சிகளைக் கொல்கிறது.  ஸ்டார்லிங்க் சோளத்தில் மற்ற இரக பி.டி.மரபணுவைக் காட்டிலும், பி.டி. மரபணு அதிகமாகவும், மேலும் இவை மரபியல் வழி மற்றும் அங்கக வேளாண் உற்பத்தியாளர்களால் பயிரிடப்படுகிறது.  ஸ்டார்லிங்கால் உருவாக்கப்படும் புரதம் ‘ஒவ்வாமை’ ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.  மேலும் அவை நிலைப்புத்தன்மை கொண்ட ஒவ்வாமை  என அழைக்கப்பட்டது.  ஐரோப்பிய பூச்சிக் கொல்லி நிறுவனமாது 1998 ல் ஸ்டார்லிங்க் சோளம் மனித உணவுக்கு ஏற்றுக்கொள்ளாது,கால்நடைக்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது.

49. மரபுப் பொறியியல் பயிர்களை வளர்ப்பதால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் சவால்கள் எவை?

மரபுப்பொறியில் பயிர்கள் சுற்றுச்சூழலும் பல்வேறு வழிகளில் தீமையானவை.  ஒரு வழியில் மரபுப்பொறியியல் பயிர்கள், பயிர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய உயிர்க்காரணிகளைக் கொல்கிறது. அந்த விஷத்தன்மை முதல் நிலையில் தெரிவதில்லை.  மாறாக அதிக பரப்பு நிலத்தில் உபயோகிக்கும்போது அவ்விளைவு தென்படுகிறது. அவ்வாறு சான்றாக ‘மோனார்க் வண்ணத்துப்பூச்சி’ குறிப்பிட்ட பி.டி.பருத்தி வயலுக்கு விஷத்தன்மையானாதால் கொல்லப்படுகிறது.  மேலும் பல்வேறு சோதனையில் இவ்விஷத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.  மற்ற வழியில் அவ்வாறு மரபுப் பொறியியல் பயிரானது சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரானது எனில், அப்பயிர் செய்வது தடுக்கப்படவேண்டும். 


50. பயிர்களை மரபுப்பொறியியலின் மூலம் மருந்துப் பொருட்களுக்கும் மற்றும் தொழிற்சாலை இரசாயனம் உற்பத்தி செய்ய முடியுமா?

இல்லை, மருந்துப் பொருட்கள் வணிக ரீதியாகப் பயிர்களின் மூலம் உற்பத்தி செய்யவில்லை. ஆனால் பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.  பெரும்பாலான சோதனை முயற்சியில் ஈடுபடுத்தப்படும் பயிர் சோளம்.  இவற்றை மிக கவனமாக செய்யவேண்டும்.  ஏனெனில் மருந்துக்கள் உற்பத்தி செய்யப்படும் சோளத்தின் மகரந்தத்தில் கலந்துவிட்டால் அவை, உணவு விஷமாக வாய்ப்புள்ளது.  எனவே குறிப்பிட்ட தூர இடைவெளி மருந்து மற்றும் உணவுச் சோளத்திற்கு விடவேண்டும்.  சமீபத்திய சட்ட விதி முறைகள் மருந்துக்கு உற்பத்தி செய்யப்படும் தாவரங்களுக்கு உட்படுவதில்லை.  ஏனெனில் அவை உணவுக்குப் பயன்படும் தாவரத்தில் இதுவரை எவ்வித பாதிப்பையும் உண்டாக்கவில்லை. 

51. எதிர்காலத்தில் மரபுப்பொறியில் விலங்குகள் வர வாய்ப்புள்ளதா?

சில அறிவியலார்கள் மரபுப்பொறியியவ் விலங்குகளை உருவாக்கிட ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். விலங்குகள், கால்நடைகள், மீன்கள் (அ) பூச்சியினங்கள் இவற்றை மரபுப்பொறியியல் தாவரங்களைப் போன்றே உருவாக்குகிறார்கள். இருப்பினும், மரபுப்பொறியியல் மூலம் உருவாக்கப்பட்ட கால்நடைகள் வணிக ரீதியாக உதவுவதில்லை.  உதாரணமாக ‘டாலி’ என்ற செம்மறி ஆடு மரபுப் பொறியியலில் உருவாக்கப்படாமல், விதைக்கரணை மூலம் உருவாக்கப்பட்டது (இவை ஒரு ஆட்டின் செல்லை எடுத்த, அதை அப்படியே புதிய ஆட்டினை அதே போன்று அதாவது அதன் தாயின் போலவே உருவாக்குவது) மரபுப்பொறியியல் விலங்குகள், ஆராய்ச்சிக்காகவும் (உதா.எலிகள்). இவை பெரும்பான்மையான வணிக ரீதியில் உபயோகப்படுத்தப்படுகிறது.  மரபுப் பொறியியல் விலங்குகளை உருவாக்கும்போது மரபுப்பொறியியல் தாவரங்களை தற்போதுள்ள சவால்களை எதிர் நோக்கவேண்டியுள்ளது.  அதே போன்று விலங்குகள் நல அமைப்புகள் போன்றவற்றால் பல்வேறு சவால்கள் உள்ளது.

52. உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்ன?

வேளாண்மை உயிரித் தொழில்நுட்பம் என்பது சேகரிக்கப்பட்ட அறிவியல் நுட்பங்களான மரபியல் தொழில்நுட்பம், அவைகளை உருவாக்கி மேம்படுத்தி (அ) மாற்றப்பட்ட தாவரங்கள், விலங்குகள் (அ) உயிர் காரணிகளை உருவாக்குவதாகும்.  பாரம்பரிய நுட்பங்களான “தேர்ந்தெடுத்து’’ உருவாக்குதல் மூலம் அறிவியலார்கள் தாவர மற்றும் விலங்குகளை மனிதனின் தேவைக்கு 100 வருடங்களாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் நவீன நுட்பங்களான அறிவியல் அறிஞர்கள் எளிதில் மரபணுவை தேவைக்கேற்ப மாற்றி முன்பு செய்ததைப்போல் கடினமாக ஆய்வை மேற்கொள்ளாமல் நுட்பத்தை மேற்கொள்கிறார்கள்.


53. தாவர உயிரித் தொழில்நுட்பம் என்றால் என்ன?

தாவர உயிரித் தொழில்நுட்பம் என்பது மரபணு மாற்றப்பட்ட தாவரங்கள், ஒர் மரபணுத் தகவல்களை ஒரு உயிரியிடம் இருந்து எடுத்து ஆய்வகத்தில் மற்ற தாவரத்திற்கு குறிப்பிட்ட காரணிக்காக மாற்றப்படுவது ஆகும்.  இத்தகவல் மரபணுவானது எவ்வித உயிர்காரணியிடம் பெறப்படும்.

54. ஏன் உயிரித் தொழில்நுட்பம் தேவை?  உற்பத்தி அளவு அதிகரித்தால் விற்க முடியுமா?

உலகின் மக்கள் தொகை அதிகரிப்பைப் பார்க்கும்போது உலகின் அனைத்து இடங்களிலும் உணவு உற்பத்தி தேவைப்பாடு அதிகமே ஆகும்.  நாம் தரமிக்க ஊட்டச்சத்துடனும், வறட்சியைத் தாங்கி வளரும் விதமாக (அ) உவர் நிலத்தில் வளரும் விதமாகவும் அமைக்க வேண்டும்.  நாம் உற்பத்தி செய்யப்படும் பயிர்கள் அவைகளாகவே தங்களை பூச்சி, நோய்த் தாக்கதலில் இருந்து காத்துக் கொள்கின்றன. பல தேவைப்படும் மாறுபாடுகளான சுவை, நிறம், வடிவம் மற்றும் அதிக தாங்கும் தன்மை முதலியன உயிரித் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படுகின்றன.  விவசாயிகளும் உற்பத்தி செலவு குறைந்து அதிக பண இழப்பு பூச்சிக்கொல்லிகளால் இல்லாதது மற்றும் சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற பூச்சிக் கொல்லிகளை உபயோகிப்பது முதலிய பயன்களைப் பெறுகிறார்கள்.

55. உயிரித் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், பூச்சிகளில் எதிர்ப்புத் திறனை ஏற்படுத்துமா?

வேளாண்துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கழகம் இரண்டும் இணைந்து வணிக ரீதியில் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு சில சோதனைகளை மேற்கொண்டன.  அவற்றில் உயிரித் தொழில்நுட்ப பாதுகாப்பு பகுதியில் பயிரிடப்பட்ட பூச்சிகளை தாங்கும் பயிர்களிடம் செய்யப்பட்டன.  சில பூச்சிகள் மரபு வழியில் பயிரிடப்பட்ட பயிர்களை உண்டு வாழ்ந்தன.  அவ்வாறு அவைகள் உயிரித் தொழிற்நுட்பயிர்களையும் உண்டு பின் அவை தாங்கும் திறனுடன் காணப்பட்டன. ஒவ்வொரு உயிரித் தொழில்நுட்ப பயிர்களையும் வணிக ரீதியாக பயிரிடும் முன் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கண்ட சில பிரச்சனைகளால் மேற்கொள்ளவேண்டியுள்ளது.

56. அயல் மகரந்தச் சேர்க்கையால் களைகள் தாங்கும் திறன் (அ) நன்மை செய்யும் பூச்சிகளின் உணவு அழிக்கப்படுமா?

ஒவ்வொரு உயிரித் தொழில்நுட்ப நன்மைகளும் இதனுடன் மேற்கண்ட பிரச்சனை விவாதிக்கப்படுகிறது.  தன்மகரந்தச்சேர்க்கை நிகழும்போது உயிரித் தொழில்நுட்பப் பயிர்களின் அருகருகே அக்குடும்பத் தாவரங்களும் வளர்ந்துவிடும்.  அதுவே தன்மகரந்தச்சேர்க்கையில் அவை அதன் ‘மரபணு’ பொறுத்தே தீமையாக அமையும்.  அதே ஒரு அங்கக விவசாயி உயிரித் தொழில்நுட்பப் பயிர்களில் புதிய மரபணு அனுமதிக்காதவரை எவ்வித பிரச்சனையும் நிகழ்வதில்லை.  அதே மரபணு ஒர் ‘களைக்கொல்லியை’ தாங்கும் திறனானது அதன் மரபணு அக்களைக் கொல்லியை தாங்கும் திறன் அளவைத் தீர்மானிக்கும்.  அவை களைக்கு களை மாறுபடும்.  மேலும் அவை வளரும் தன்மையையும் பொறுத்தது.  ஆனால் விவசாயிகள் மரபு வழியைப் பின்பற்றும்போது மேற்கண்ட பாதிப்புகள் சிறிதளவே ஏற்படுத்துகிறது.


57. விவசாயிகள் அறுவடை செய்த விதைகள் மூலம் மறுபடியும் பயிர் செய்ய ‘டெர்மினேட்டர்’ தொழில்நுட்பம் தடைசெய்யுமா?

இல்லை.  அப்படி வணிக ரீதியில் எந்த ஒரு மரபணுவையும் பயன்படுத்துவதில்லை.  சில சமயம் ‘கிருமி இல்லாத’ விதைத் தொழில்நட்பம் அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது உற்பத்தி செய்யப்படும்.  ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை.  எப்படிப்பார்த்தாலும் சில காரணிகள் அதனை தடுத்துவிடுவதால் ‘டெர்மினேட்டர் மரபணு’ எனப்படும்.  ஆகவே அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் விதையினை பல்வேறு கம்பெனிகளில் வாங்குகிறார்கள்.

58. அங்கக உணவு நல்லதா?  அங்கக விவசாயம் நன்மையா?  ஏன் அனங்கக முறை மட்டும் பின்பற்றக்கூடாது?

அங்கக முறை உணவு உற்பத்தியின் மற்றொரு முறை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி பதிப்புக்கட்டுரையில் அங்கக உணவுகள் பாதுகாப்பனாது.  அதிக ஊட்டச்சத்து, நறுமணம் முதலிய நன்மைகளைப் பெறமுடியும் என அறிவித்துள்ளது.  குறிப்பிட்ட இரகத் தேர்வு, வளர்க்கும் முறை மற்றும் அறுவடை காலம் முதலியன முக்கிய பங்காற்றும் என சான்றுகள் தெரிவிக்கின்றன.  வீட்டுத் தோட்டமானது முழுவதும் அங்கக முறையிலும் (அ) ஏறக்குறைய அங்கக முறையில் பயிரிடப்படம்.  இவை மேலும் பல நன்மைகளான அவர்கள் விருப்பப்படும் உணவுகள் உற்பத்தி செய்து மற்றும் விற்பனை செய்தும் பொருள் ஈட்ட முடியும்.  பல மக்கள் அங்ககப் பொருட்கள், அனங்ககப் பூச்சிக் கொல்லிகள் இன்றி உற்பத்தி செய்வதால் அவற்றை வாங்குகின்றனர்.  இவற்றில் உள்ள ஒரே பிரச்சனை வணிக ரீதியாக அதிக அளவு உற்பத்தி செய்தல், பிறவற்றைப்போல் குறைந்த இடத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடிவதில்லை.

59. உட்கரு அமில இணைவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் சில வேளாண் பொருட்கள் உதாரணங்கள் யாவை?

உயிரித் தொழில்நுட்பத்தில் ஒரு பங்கு உட்கரு அமில இணைவுத் தொழில்நுட்பம் இவற்றில் இரு வேறு உட்கரு அமிலத்தை இணைத்து சோதனைக் குழாயில் வைத்து பின் உட்கரு அமிலம் தானகவே எங்கும் வளரும் பின் தாவரத்தினை உட்கரு அமில இணைவு முறையில் மரபுப் பொறியியல் (அ) மரபணு மாற்றப்பட்ட உயிரினங்கள் உருவாக்கப்படும். மரபணு மாற்றப்பட்ட சோயா மொச்சை மற்றும் சோளம் வணிக ரீதியாக 1990 இடையிலும் அவைகள் பல்வேறு இரகங்கள் களைக்கொல்லியை தாங்கும் திறனாகவும், மேலும் பூச்சிகளைத் தாங்கும் திறனாகவும் இருந்தது.  மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தற்போது பல வணிக மயமாக்கப்பட்டுள்ளது.  பருத்தி, கடுகு, பப்பாளி, தண்ணீர்பழம் மற்றும் பயறு வகைகள்.  தற்போது இணைவு முறைத் தொழில்நுட்பம் மூலம் பல்வேறு பொருட்கள் பூச்சிக்கொல்லிகள், மருந்து (அ) கால்நடை உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

60.  மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் புதிய முறையில் மரபணுவைக் கட்டுப்படுத்தி, உட்கரு அமில இணைவு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிர்களில் உட்செலுத்தப்படுகிறது.  இவ்வாறு உட்செலுத்தப்படும் மரபணு இயற்கையாகவே காணப்படும் உயிரிகளான ‘அக்ரோ பாக்டீரியம்’ (அ) தாவரத் தண்டில் உள்ள நுண்ணிய மரபணு உட்செலுத்தும் முன்பு பல்வேறு சோதனைகளை அம்மரபணுவில் செய்து பின்பு அவை பாதுகாப்பானதா என்று ஆராய்ந்த பின்பே உட்செலுத்தவேண்டும்.  பல்வேறு நிறுவனங்களான (அ) விலங்கு மற்றும் தாவர ஆரோக்கிய கண்காணபிப்புச் சேவை (ஆ) உணவு மற்றும் மருந்து கழகம் (அமெரிக்கா) (இ) அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் முதலியவற்றின் அனுமதிக்குப் பின்பே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தவேண்டும்.  மேலும் மரபு வழியில் பயன்படுத்தப்பட்ட முற்கால விதைகளை மீண்டும் உருவாக்கி விதைப் பண்பகப் பண்ணையை பாதுகாத்திடவும் முடியும்.


61. மரபுவழிப் பெருக்கத்தின் உற்பத்தித்திறனை எவ்வித முறைகளில் வேறுபடுத்திட முடியும்?

மரபணு மாற்றத்தில் சில எண்ணிக்கையில் சில குறிப்பிட்ட மரபணு மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.  ஆனால் மரபு வழிப் பெருக்கத்தில் பல மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்படும்.  பல ஆண்டுகளாக உற்பத்தியாளர்கள் இயற்கையில் காணப்படுவதைச் சேகரித்தும், பின்பு அவற்றுள் இனக்கலப்பும் மற்றும்  பாரம்பரியம் மிக்க இரகங்கள் உருவாக்கப்படுகிறது.  அவற்றுள் அளவு அதிகரிக்கும்போது அவற்றிலிருந்து பெறப்படுகிறது. மேலும் தூண்டப்பட்ட சடுதி மாற்றத்திற்கு உட்படுத்தியும் பெறலாம்.  அதன் தீர்வுகள் முறையின்றியும் மற்றும் குறிப்பிட்ட வழிமுறைகளையும் பின்பற்றவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. எனவே மேலும் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி மரபுவழியில் பயிர் பெருக்கமும் மற்றும் அவை ஒழுங்கற்ற முறையிலும் உள்ளது.

62. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் எதனை எதிர்நோக்கியும் உள்ளது?

தற்போதய சந்தையில், பல்வேறு மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், களைக்கொல்லி தாங்கும் திறன் (அ) எதிர்ககும் திறன், பூச்சி மற்றும்  நோய் எதிர்ப்புத் திறன் இவற்றின் கலவைகளே மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மிகத் தேவையாகும்.  தக்காளி இரகமான (ப்ளேவர்-சேவர்) மாற்றியமைக்கப்பட்டு அதன் வாழ்நாள் அதிகரிப்பதோடு குறுகிய காலத்தில் கிடைப்பதுடன் உள்ளது. ஆனால் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால், நீக்கப்பட்டுவிட்டது.  மேலும் பயிர்கள் அதிக ஊட்டச்சத்துடனும், மேம்படுத்துவதுடன் தொழிற்சாலை பயன்பாட்டுக்காவும் மற்றும் மருந்துப் பொருட்கள் உற்பத்திக்காகவும் உருவாக்கப்படவேண்டும்.

63. ஏன் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மாறுபாடு உடையதாக இருக்கின்றன?

எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் மற்றும் முடிவுறாத்தன்மையுடன் இருக்கும்போது மாறுபாடுடன்தான் காணப்படும்.   அதற்கு மரபணு மாற்றப்பட்ட பயிர் விதிவிலக்கல்ல.  மக்கள் அவர்களின் ஆரோக்கிய மேம்பாடு, சுற்றுச்சூழல் விளைவுகள் மற்றும் தாமதமாக மரபணு மாற்றம் மூலம் விதை (அ) மகரந்தம் மூலம் வெளியிடுதல். புதிய மரபணு மாற்றப்பட்ட பயிரானது வெளியிடும் முன்பு அவை மரபு முறையில் பயிரிடுவதற்கு சோதனை செய்தலைவிட அதிகம் சோதனை செய்யவேண்டும்.  ஆனால் இப்போதுதான் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வளர்ந்து வருகிறது.

64. இந்திய சிறு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தில் பி.டி.பருத்தியின் பங்கு என்ன?

அசோக் மல்கார் நேக்கர், ஹெர்மன் வைபல் மற்றும் டைமத் பெம்செல் முதலியவர்கள் விவசாயம் மற்றும் பொருளாதார மேம்பாடு பொருளாதாலம் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, ஜெர்மனியைச் சேர்ந்த மூன்று ஆராய்ச்சியளர்கள் அவர்களின் வேறுபட்ட ஆய்வை பி.டி. மற்றும் பி.டி. இல்லா பருத்தியில் கர்நாடாகவில் செய்தனர்.  அவர்கள் செய்த ஆய்வில் பி.டி.விவசாயிகள் விளிம்பு நிலையில் அதிக விளைச்சலையும், ஆனால் குறைந்த அளவு இலாபமே பெறுகின்றனர்.  ஆனால் கடைசி விளிம்பு இலாபம் பி.டி.பயிரிடப்படாத விவசாயிகள் ரூ.10,880 எக்டர்  பெற்றனர். ஆனால் பி.டி.பயிரிடப்பட்ட விவசாயிகள் விளிம்பு நிலை அளவு ரூ.1435 ஆகும்.  வேறு வகையில் கூறவேண்டும் என்றால் பி.டி.பயிரிடாத விவசாயிகள் 7.5 மடங்கு அதிகமாக பி.டி.பயிரிடும் விவசாயிகளை விட மகசூல் எடுக்கின்றனர்.

65. பயோஃபார்மிங் என்றால் என்ன?

பயோ ஃபார்மிங் எனப்படுவது உயிரியல் தொழில்நுட்பம் மூலம் மரபுப்பொறியியலினைக் கொண்டு பல பயிர்களை உருவாக்கி அதன்மூலம் மருந்துப் பொருட்கள் மற்றும் இரசாயனத்தை உற்பத்தி செய்வது ஆகும்.  இவ்வாறு செய்வதில் சாதாரண இரகத்திற்கும், பயோ ஃபார்மிங் செய்யப்படும் இரகத்திற்கும் சிற்சில மாறுபாடுகளுடன் உருவாக்குதல் வேண்டும்.  மருந்து மற்றும் உயிரித்தொழில்நுட்பக் கழகம் தற்போது பயோஃபார்மிங் மூலம் குறைந்த செலவில் அதிக அளவு மருந்துக்குத் தேவையான இரசாயனங்களையும் மற்றும் உயிரியல் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யவும் முடியும் எனக் கருதுகின்றனர். கம்பெனிகள் மேலும் இந்த தகவல்களை அனைத்தும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுகிறது.  தாவரப்பகுதியைப் பயன்படுத்தி கருத்தடைச்சாதனங்கள், வளர்ச்சி ஹார்மோன்கள், இரத்தம் உறைதல், தொழிற்சாலை என்சைம்கள் மற்றும் வயிற்றுப்போக்கிற்கான மருந்துப்பொருள் முதலியனவும் தயாரிக்கப்படுகிறது என்பதை அறியலாம்.  அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட திறந்த வெளியில் பயோ ஃபார்மிங் செய்யப்படுகிறது.  அவை : சோளம் அதிகமாகவும், சோயா மொச்சை, புகையிலை மற்றும் அரிசி அடுத்தபடியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

66. தாவரத் திசு வளர்ப்பு என்றால் என்ன?

தாவரத் திசுவானது குறிப்பிட்ட வழிமுறைகளைக் கடைபிடித்து அதன் பகுதிகள் (தண்டு, வேர், உட்கரு) கிருமி இல்லாத நிலையில் வளர்ப்பதாகும்.  தாவரத் திசு வளர்ப்பு அதிகமாக ஆய்வுக்கூடத்தில் விதையில்லாப் பெருக்காமான ‘நுண் பெருக்கம்’ மூலம் செய்யப்படுகிறது.

67. எவ்வாறு நுண் பெருக்கம் செய்யப்படுகிறது?

சிறிய பாகமானது தாவரத்தின் வழங்கும் செடியிலிருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது.  பின்பு ஊடகத்தை பல்வேறு சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு (வெப்பநிலை, சூரிய ஒளி பிற) மாற்றி வளர்ந்த தாவரத் திசுக்களை பல்வேறு நிலையில் பின்பு முழு தாவரமும் வளரும் வரை செய்யவேண்டும்.  சந்ததியானது ஒரு தாவரப்பகுதியிலிருந்து பெறப்பட்டது.  எனவே அவை மரபணு முழுவதும் எப்பகுதியில் இருந்து தாவரத்தை எடுத்துக் கொண்டோமோ அதனைச் சார்ந்து உள்ளது.  அவைகள் விதைக் கரணை என்றழைக்கப்படும்.

68. மரபு வழிப் பயிரைக் காட்டிலும் நுண் பெருக்கமுறையில் செய்யப்படுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

  • நுண் பெருக்க முறையில் விரைவாக ஆயிரக்கணக்கான தாவரத்தினை உற்பத்தி செய்ய முடியும்.

  • நோய் அற்ற தாவரமானது மண் மற்றும் நோய்காரணிகள் ஏதும் இல்லாத சூழலில் உருவாக்கப்படுகிறது.

  • இவை திட்டமிட்டு குறிப்பிட்ட இலக்குடன், குறிப்பிட்ட காலத்தில் செய்யப்படுகிறது.  ஏனெனில் இவை, காலநிலை வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டவை.

  • தண்டுக்குச்சி மற்றும் நாற்றுகளுக்கு தக்க கவனம் செலுத்துவதைக் காட்டிலும், நுண் பெருக்கத்தில் குறைந்த அளவே கவனம் செலுத்தப்படுகிறது.

  • அதிக காலம், அதிகப்படியான பொருட்களை, தேக்கி வைக்க முடியும்.

  • குறைந்த இடத்தில் அதிக அளவு பல்வேறு இனங்களை வைக்கலாம்.

69. திசு வளர்ப்பு ஊட்டச்சத்து ஊடகத்தில் உள்ள பொருட்கள் யாவை?

  • நீர்

  • அங்கக உப்புகள்

  • தாவர வளர்ச்சி ஊக்கிகள்

  • வைட்டமின்கள்

  • அமினோ அமிலம்

  • கரிம மூலப்பொருட்கள் மற்றும் திடப் பொருள் ஊடகம்

70. தாவரத் திசு வளர்ப்பின் மூலப் பெறப்பட்டவை ‘வைரஸ் இல்லாதது என்று ஏற்றுக் கொள்ள முடியுமா?

இதனை உயிர் இயற்பியல் நோய் எதிர்ப்பியல் மற்றும் மூலக்கூறு நுட்பத்தின் மூலம் ‘வைரஸ்’ அறியும் முறையினை மேற்கொண்டு அறியலாம்.  மூலக்கூறு அடிப்படையில் தரக்கட்டுப்பாட்டு முறையே தாவர இனங்களில் மேற்கொள்ளப்படுகிறது.  நோய் எதிர்ப்பியல் நுட்பமானது பல் விதை நோய் எதிர்ப்பு பொருள் மற்றும் ஒற்றை விதை கரணை நோய் எதிாப்பொருள் கரணை, வைரசுக்கு எதிராக உதவுகிறது.  பல்கூட்டு கரணையானது நாட்டில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வைரஸ்களாக உள்ளன.  பாட்டீவைரஸ், டாஸ்போ வைரஸ், டோபோமோ வைரஸ், பாட்டீ எக்ஸ் வைரஸ், லூடீயோ வைரஸ், பேட்னா வைரஸ், க்ளோஸ்டர் வைரஸ், இவைகள் பல்கூட்டு விதைக் கரணை நோய் எதிர்ப்பொருள்கள் வைரஸ் தாக்குதலுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.

71. தாவர வளர்ச்சி ஊக்கிகள் எவ்வாறு தாவர உருத் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்ததுகின்றன?

இரண்டு தாவர வளர்ச்சி ஊக்கிகள், தாவரத்தில் மாறுபாட்டைத் தோற்றுவிக்கின்றன. 
ஆக்ஸின்கள் : வேர் தோன்றுவதை ஊக்குவிக்கிறது.
சைட்டோன்கைனின்கள் : தண்டு தோன்றுவதை ஊக்குவிக்கிறது. 
பொதுவாக இதன் அளவை மாற்றியமைப்பதன் மூலமே தாவரத்தின் உருவத் தோற்றத்தில் மாறுபாட்டை ஏற்படுத்த முடியும். 
ஆக்ஸின் --- சைட்டோகைனின் -- வேர் உருவாக்கம் 
சைட்டோகைனின் – ஆக்ஸின் – தண்டு உருவாக்கம் 
ஆக்ஸின் – சைட்டோகைனின் -- விதைக் கரணை உருவாக்கம்

72. உறுப்புத் தோற்றவியல் என்றால் என்ன?

தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் மூலம் வடிவமானது இயற்கையாக உருவாகும் உறுப்பிற்கு (அ) இயக்கத்திற்கு உறுப்புத் தோற்றவியல் எனப்படும்.

73. கரு வளர்ச்சியியல் என்றால் என்ன?

உடல் செல்களில் தொடக்கம் மற்றும் வளர்ச்சியின் மூலம் கருவில் (அ) கரு மாதிரியான வடிவம் தோன்றுவது ஆகும். 

74. நுண் பெருக்கத்தின் பல்வேறு நிலைகள் யாவை?

நிலை 0 : தேர்ந்தெடுத்தல் மற்றும் தாய் தாவரத்தைத் தயார் செய்தல் - கிருமி நீக்கம் செய்தல் - தாவரத் திசுப் பகுதிகளைச் செய்தல் வேண்டும்.

நிலை 1 :  தொடக்கநிலை - வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தகுந்த ஊடகத்தில் வைக்கவேண்டும்.

நிலை 2 : பெருக்கநிலை : வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தண்டு ஊடகத்திற்கு மாற்றவேண்டும். அவற்றைப் பிரித்து பின் நடவேண்டும்.

நிலை 3  : வேர் விடும் நிலை- வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை வேர் ஊடகத்திற்கு மாற்றவேண்டும்.

நிலை 4 : மண்ணிற்கு மாற்றுதல் - வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை மண்ணிற்கு மாற்றவேண்டும்.


75. கரு மீட்புத் தொழில்நுட்பம் என்றால் என்ன?

இவை கருவை ஆய்வுக் கூடத்தில் வளர்க்கும் முறையாகும். 
(கலப்பினம் செய்யும்போது கருவுறுதல் நடைபெற்று ஆனால் கரு வளராமல் இருக்கும்.  அவ்வாறு நடைபெற்றால், மேற்கண்ட வழியைப் பின்பற்றவேண்டும்)
நன்மைகள் சில:

  • குறுக்குக் கலப்பினம் மூலம் முதல் தலைமுறை கலப்பினம் பெறப்படுகிறது.

  • விதை உறக்க நிலை சரிசெய்யப்படுகிறது.

  • முழுமையான விதை வளர்ச்சி அடையச் செய்யமுடியும்

  • பயிர்பெருக்க நிகழ்ச்சியின் வேகமானது ஒரு தலைமுறையில் அதிகரிக்கச் செய்கிறது.

  • இறந்த (அ) இறந்து கொண்டிருக்கும் தாவரத்திலிருந்து குறுக்குப் பெருக்கம் (அ) தன் மகரந்தச் சேர்க்கை செய்து மீட்கப்படுகிறத

ஆதாரம்: http://dbtmicropropagation.nic.in/

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013