பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

தென்னை காப்பீடு

தவிர்க்க முடியாத இயற்கைக் காரணிகள், பூச்சி மற்றும் நோய்களால் தென்னை மரம் வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் இணைவதற்கு உதவும் காப்பீடே தென்னை காப்பீடு ஆகும்.

காப்பீட்டுப் பாதுகாப்பு

தவிர்க்க முடியாத இயற்கைக் காரணிகள், பூச்சி மற்றும் நோய்களால் தென்னை மரம் வளர்ப்பவர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்கு உதவும் காப்பீடே தென்னை காப்பீடு ஆகும். தவிர்க்க முடியாத இயற்கைக் காரணிகளால் தென்னங்காய்களின் மகசூல் குறைவது /தென்னை மரத்திற்கு ஏற்படும் இழப்பு/சேதங்களுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

காய்களின் மகசூல் காப்பீடு

தவிர்க்க முடியாத காரணங்களான புயல், மழை, வெள்ளம் நிலச்சரிவு, இயற்கை தீ, பனி, பூச்சி மற்றும் நோய்களால் காய்களின் மகசூல் குறையும் போது இந்த காப்பீடு வழங்கப்படுகிறது. 

தென்னை மரங்களின் காப்பீடு

தென்னங்கன்றுகளை நட்ட 3 மாதத்திலிருந்து 60 வயது வரை ஒவ்வொரு தனிமரத்திற்கு ஏற்படும் மொத்த இழப்பை ஈடு செய்கிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013