பயிர் காப்பீட்டு் :: பயிர் காப்பீட்டு திட்டம்

மா பயிர்க் காப்பீடு

மோசமான வானிலை நிகழ்வுகளால் தனிப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுசெய்ய உதவும் காப்பீடு என்பதாகும்.

1.மோசமான வானிலை நிகழ்வுகளை தனித்தனியாக சோதனை செய்து, அளவிடப்படுகிறது

2.இந்த காப்பீடு மிக விரைவாக இழப்பீடுகளை சரி செய்கிறது.

3.அனைத்து உற்பத்தியாளர்கள், குறிப்பாக சிறிய/நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள் (அ) குத்தகைக்காரர்கள் இந்த வானிலை காப்பீட்டைப் பெறலாம்.

காப்பீட்டுப் பாதுகாப்பு

மழை அளவு இயல்பு நிலையை விட அதிகமாகும் போது, தினம் நிலவும் வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தில் ஏற்படும் மாறுபாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் போது வேளாண் காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டு தருகிறது.

காப்பீட்டுக் காலம்

டிசம்பர் முதல் ஜுன் மாதம் வரை நிலவும் மாறுபட்ட வானிலை நிகழ்வுகளுக்கு காப்பீடு வழங்கப்படுகிறது.

காப்பீட்டுக் கட்டணம்

புவியியல் பரப்பு, முந்தைய காலங்களில் நிலவிய வானிலை மற்றும் பயிர்களுக்கு இடையே உள்ள மாறுபாடுகள், இயல்பு நிலையை விட வானிலை அளவுகள் குறையும் போது, மற்ற இடர்பாடுகள் ஏற்படுவதைப் பொறுத்து காப்பீட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013