பயிர் பாதுகாப்பு :: பாக்கு பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் இலை நோய் : பைட்டோ பிளாஸ்மா

அறிகுறிகள்:

  • குருத்து இலை  2 அல்லது 3 இலைகளின் சுற்றுவட்ட அடுக்கில்  மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • இலைகளில் பழுப்பு நிற இணை கோடுகள் இருக்கும்.
  • இலை பரப்பில் மத்தியில் மஞ்சள் நிறமாக இருத்தல். முதிர்ந்த நிலையில் வெளிறிய இலைகள் காயந்து பின் முழுவதும் மஞ்சளாக மாறிவிடும்.
  • இறுதியாக மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்துவிடும். வேர்கள் படிப்படியாக கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
இலை நுணி மஞ்சள் நிறமாதல் மஞ்சள் நிறமாதல் பாதிக்கப்பட்ட மரம்

கட்டுப்பாடு:

  • வீரியமுள்ள விதை மரங்களை பராமரிக்க வேண்டும்.
  • எதிர்ப்பு சக்தி கொண்ட ரகங்களான மங்களா மற்றும் தென்கனரா போன்ற ரகங்களை வளர்க்க வேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பொட்டாசியம், மெக்னீசியம் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்.

Image Source:

http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015