பயிர் பாதுகாப்பு :: கொண்ட கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கரையான்: ஒடோன்டோடெர்மஸ் ஒபிஸிஸ்

அறிகுறிகள்

  • வேர் மற்றும் தண்டை துளைத்து உண்பதால் விரைவில் பயிர்கள் வாடிவிடும்.
  • வறட்சிக் காலத்தில் முக்கியமாக பயிர்களைத் தாக்கும்.

பூச்சியின் விபரம்

  • கரையான் புற்றுக்களில் உயிர் வாழும்.
  • மண்ணில் மற்றும் பயிர்களில் முட்டைகளை இடுகின்றன.
  • வேலையாட்கள் பூச்சி சிறியதாக (4 மி.மீ), மென்மையாக, வெள்ளைநிற உடம்புடன், பழுப்புநிறத் தலையுடன் காணப்படும்.

bengal gram

கட்டுப்பாடு

  • இடை உழவு முறைகளை அடிக்கடி செய்ய வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் பாசனம் செய்ய வேண்டும்.
  • வயல் சுகாதாரம், பயிர் குப்பைகளையும், மக்காத பயிர்களையும் அந்தந்த நேரத்தில் அழித்து விட வேண்டும்.
  • மக்காத பண்ணை உரம் அல்லது கம்போஸ்ட் உரங்களை பயன்படுத்தக் கூடாது.
  • 2 – 3 முறை ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
  • வயலைச் சுற்றியுள்ள கரையான் புற்றுக்களை அழிக்க வேண்டும்.
  • குளோர்பைரிபாஸ் ஒரு கிலோ விதைக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015