பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

ஆந்தரக்னோஸ் இலைப்புள்ளி நோய்

நோய் காரணி கொலிட்டொடிரைக்கம் லிண்டிமுத்தியானம்

நோயின் அறிகுறிகள்

  • இலைப்புள்ளிகள் செர்க்கோஸ்கோரா இலைப்புள்ளியை விட சற்று பெரிதாக காணப்படும்.
  • இந்நோய் பயிரின் வேரைத் தவிர்த்து எல்லா பாகங்களையும் தாக்கும்.
  • விதையிலைகளில் கருஞ்சிவப்பு புள்ளி தோன்றி நாளடைவில் காய்ந்து விடும்.
  • இலைகளில் செவ்வக வடிவில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றி பின் படர்ந்து இலைக்காம்புளையும் தாக்கும்.
  • நோய் அதிகரித்தால் காய்களில் கருஞ்சிவப்பு புள்ளிகள் தோன்றும். விதைகளை நிறமாறி காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட பாகங்களில் பூசண வித்து தொன்றும் அசர்யுலை காணப்படும்..

பரவுதல்

  • நோயுற்ற செடியிலிருந்து மற்றொரு செடிக்கு காற்றின் மூலம் பரவுகிறது.

தடுப்பு முறைகள்

  • நோயின் அறிகுறி தோன்றியுவுடன் எக்டருக்கு மான்கோசெப் 1000 கிராம் (அ) கார்பன்டாசிம் 250 கிராம். தெளித்தல் வேண்டும்.
  • தேவை ஏற்படின் மீண்டும் ஒரு முறை 14 நாட்கள் இடைவெளியில் தெளித்தல் வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019