பயிர் பாதுகாப்பு :: உளுந்து பயிரைத் தாக்கும் நோய்கள்

வேர் அழுகல் நோய்

நோய்க் காரணி மாக்ரோபோமினா பேஸியோலினா(ரைசாக்டோனியா பட்டாடிகோலா).

அறிகுறிகள்

  • நோயுற்ற பயிர்கள் ஒரு வயலில் திட்டுத்திட்டாகவோ அல்லது ஒரு பகுதி முழுவதுமாகவோ காணப்படும்.
  • நோயுற்ற் செடிகள் பிடுங்கிப் பார்த்தால் இதன் வேர்கள் அழுகியிருப்பதைக் காணலாம்.
  • வேர்களின் பட்டை உரிந்து நார், நாராக கிழிந்திருப்பதே இந்நோயின் தலையாய அறிகுறியாகும்.
  • நோயுற்ற செடியின் தண்டுப் பகுதியில் வெள்ளி பூசியது போன்ற வெண்மையாக பூஞ்சாண வளர்ச்சியைக் காணலாம்.
  • தோல் உரிந்த பட்டைகளின் மேல் மிகச்சிறிய கரும்புள்ளிகள் பதிந்திருப்பதைக் காணலாம்.
  • பூக்கும் பருவத்தில் நோய் தோன்றினால் காய்கள் முற்றாமல் சுருங்கி காணப்படும்.
  • விதைகள் எடை குறைவதுடன், புரதச்சத்தும் குறைந்து விடும்.
  • பரவுதல் மண், விதை, காற்று மற்றும் நீர் மூலம் பரவக்கூடியது.
  • விதை நேர்த்தி

  • டிரைக்கோடெர்மா விரிடி டால்கம் பவுடர் 4கிராம் அல்லது சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2கிராம், 1 கிலோ விதைக்கு
  • உயிரியல்முறை

  • சூடோமொனாஸ் ஃபுளுரசன்ஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடி(2.5 கிலோ, ஹெக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழுவுரம்(அ) மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும்.
  • இரசாயன முறை

  • பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பென்டாசிம் 1 கிராம், 1 லிட்டர் என்ற விகித்தில் கலந்து ஊற்ற வேண்டும்.

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2019