பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

அஸ்கோகைட்டா இலைக்கருகல்: அஸ்கோகைட்டா ரபியி

அறிகுறிகள்

  • செடியின் அனைத்து பாகங்களும் பாதிக்கின்றன.
  • இலையின் மேல்பரப்பில் அறிகுறிகள், புள்ளிகளாக தோன்றுகின்றன.
  • இலையின் மேல்பரப்பில் வட்டவடிவ பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படுகின்றன.
  • சாதகமான சூழ்நிலை வரும் பொழுது இச்சிறிய புள்ளிகள் பெரியதாகி இலைகள், காய்கள் காய்ந்துவிடுகின்றன.
  • தண்டு மற்றும் இலையின் காம்புகளில் இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
  • இந்நோய் மெதுவாக தாக்கினால் விதைகள் காய்ந்தும், உதிர்ந்தும் விடுகின்றன.
  • வயலில் தங்கியிருக்கும் முந்திய பயிரின் கழிவுகளால் இந்நோய் பரவுகிறது.

கட்டுப்பாடு

  • நல்ல தரமான விதைகளை பயன்படுத்தவேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையைப் பின்பற்றவேண்டும்.
  • ஆழமாக உழவேண்டும், ஊடுபயிராக, கோதுமை, கடுகு ஆகியவைப் போடலாம்.
  • விதையை கார்பன்டாசிம் 3 கிராம்  / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம் அல்லது மேங்கோசெப் 3 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம் அல்லது  உலர் கந்தகத்தை 2.3 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015