பயிர் பாதுகாப்பு :: கொண்டக்கடலை பயிரைத் தாக்கும் நோய்கள்

கழுத்துப்பட்டை அழுகல் நோய்: ஸ்கிரோடியம்ரோல்ஃப்சி 

தாக்குதலின் அறிகுறிகள்

  • இது விதைப்பு ஆரம்பத்திலிருந்து ஆறு வாரங்களில் வருகிறது.
  • இதன் இலைகள் வாடுவதற்கு முன் சற்று மஞ்சளான மாற்றமும் வயலின் சிதறியும் காணப்படும் .
  • நாற்றின் நிறம் மாறிவிடும்.
  • தண்டு மற்றும் வேர் சற்று மென்மையானதாகவும் சிதைவுடனும் காணப்படும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்புவெள்ளை நிறமாக காணப்படும்.
  • வெள்ளை நிறமான பாதிக்கப்பட்ட பயிர்களில் கடுகு வடிவில் கருப்புபுள்ளிகள் போன்று காணப்படும்  இவை இழைமுடிச்சுக்கள் என அழைக்கப்படும் .

கட்டுப்படுத்தும் முறை

  • கோடை காலத்தில் ஆழமான உழுதல் வேண்டும்.
  • அதிக ஈரப்பதம் காலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும்.
  • நாற்றுகளை அதிக ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
  • விதைப்பதற்கு முன் மற்றும் அறுவடைக்குப் பிறகு முன்னால் பயிர் செய்தவைகளின் எச்சங்கள் மற்றும் களைகளை அழிக்க வேண்டும்.
  • நிலம்தயாரிப்பின் முன்  நிலத்தில் இருந்து மக்காத பொருட்களை நீக்க வேண்டும்.
  • கார்பன்டாசிம் 1 கிராம்/ ஒரு கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015