பயிர் பாதுகாப்பு :: கிராம்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செதில் பூச்சிகள்: சாய்செட்டியா நைக்ரா,மைசிடேஸ்பிஸ் பர்சோனேட்டா
சேதத்தின் அறிகுறிகள்:

  • இளம் தளிர், தண்டு மற்றும் கிளைகளை தாக்கும்.
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்.
  • கரும்புகை பூசாணம் உருவாக பூச்சியிலிருந்து வெளிவரும் தேன் போன்ற திரவம் உதவுகிறது.

பூச்சியின் விபரம்:
சாய்செட்டியா நைக்ரா

  • பளபளப்பான கருப்பான உருண்டையான பூச்சி.

மைசிட்டேஸ்பிஸ் பாசோனேட்டா

  • சாம்பல் கலந்த பழுப்பு நிற உருண்டையான பூச்சி.

லிக்கேனியம் வகைகள்

  • தட்டையான, பச்சையற்ற மிருதுவான பூச்சி, உடலின் மேற்பகுதி உயர்ந்து குவிந்து காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தாக்கப்பட்ட இலைகள் மற்றும் கிளைகளை அகற்றவேண்டும்.
  • டைமீத்தோயேட்  1 மிலி / லிட்டர் அல்லது மோனோகுரோட்டோஃபாஸ் 1.5 மிலி / லிட்டர் தெளிக்கலாம்.
 
சாய்செட்டியா நைக்ரா
மைசிட்டேஸ்பிஸ் பாசோனேட்டா

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015